search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுவாமி குமர விடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன் மலர் கேடய சப்பரத்தில் வீதி உலா
    X

    சுவாமி குமர விடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன் மலர் கேடய சப்பரத்தில் வீதி உலா

    • திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா நிறைவு பெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவி லில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மாலை வேளையில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர்.

    7-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்திருப்பு, மாலையில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா, 8ம் திருவிழா காலையில் வெள்ளை சாத்திக்கோலத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி வீதி உலாவும், மதியம் சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்த ருளி வீதி உலாவும் நடை பெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்தாம் திருவிழா தேரோட்டம் கடந்த 26-ந் தேதி நடைபெற்றது.

    ஆவணி 12-ந் திருவிழாவான நேற்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் மலர் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் சிறிய மலர் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து விழா நிறைவு பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×