search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 10 நாட்கள் ஆவணி திருவிழா
    X

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 10 நாட்கள் ஆவணி திருவிழா

    • திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • 10-ந் தேதி மாலை 5 மணிக்கு 4 ரத வீதிகளில் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் ஆவணி மாத திருவிழாவை தவிர மற்ற 3 திருவிழாக்களும் தாணுமாலய சாமிக்கு நடைபெறும்.

    ஆவணி மாத திருவிழா மட்டும் திருவேங்கடம் விண்ணவரம் பெருமாளுக்கு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா நாளை (2-ந் தேதி) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரூ கொடியேற்றி வைக்கிறார்.

    திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம் காலை மற்றும் மாலை வேளை களில் நடக்கிறது. 9-ம் திருவிழா நாளான 10-ந் தேதி மாலை 5 மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் 4 ரத வீதிகளில் உலா வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 10ந் திருவிழாவான 11-ந் தேதி திரு ஆராட்டு வைபவம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்து உள்ளனர்.

    Next Story
    ×