search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுள் தண்டனை"

    • மின்வேலியில் சிக்கி 2 பேர் பலியான வழக்கில் தந்தை மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
    • அரியலூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் இறந்த வழக்கில் அனுமதியின்றி மின்வேலி அமைத்த இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    விக்கிரமங்கலம் அடுத்த சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேலாயுதம்(95). இவரது மகன் தங்கராசு(60) ஓய்வுபெற்ற விஏஓ. இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு, கொள்ளிடம் ஆற்றுபடுகை பகுதியில் தனது விவசாய நிலத்துக்கு கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க சென்ற போது, அதே ஊரைச் சேர்ந்த தேவேந்திரன்(52) தனது வயலில், சோளப்பயிர்களை காட்டுபன்றிகள் சேதபடுத்துவதை கட்டுப்படுத்த அமைத்திருந்த மின்வேலியில் சிக்கியதில் இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தங்கராசு மகன் தமிழரசன்(33) அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த விக்கிரமங்கலம் காவல் துறையினர், அனுமதியின்றி மின்வேலி அமைத்ததாக தேவேந்திரன்(52), அவரது மகன் பிரபாகரன்(25), மின்வேலி அமைக்க உடந்தையாக இருந்ததாக அதேகிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சுரேஷ், ஆறுமுகம் மகன் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கர்ணன், அனுமதியின்றி மின்வேலி அமைத்த தேவேந்திரன் அவரது மகன் பிரபாகரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனைகளும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட கலியமூர்த்தி மகன் சுரேஷ், ஆறுமுகம் மகன் சுரேஷ் ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார். இதையடுத்து தேவேந்திரன், பிரபாகரன் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கோபாலின் மகன் கோகுல்ராஜ் மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ராமாபுரம் காட்டு பிள்ளையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோபால். விவசாயி. இவரது அண்ணன் விஜயன்.

    இவர்களுக்கு பூர்வீக சொத்தாக 4 1/2 ஏக்கர் நிலம், 9 தறி பட்டறைகள் உள்ளது.

    விஜயன் இறந்த நிலையில் பூர்வீக சொத்தை பாக பிரிவினை செய்து கொள்வதில் கோபால், விஜயன் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 30-6-2017 அன்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கோபாலை, விஜயனின் மகன் குணசேகரன் மற்றும் உறவினர்கள் ரகு என்கின்ற ரகுநாதன், ராஜி, பாரதி, சாந்தாமணி, குருசாமி ஆகியோர் இரும்பு ராடால் தாக்கினர்.

    இதில் பலத்த காயமடைந்த கோபால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து கோபாலின் மகன் கோகுல்ராஜ் மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குணசேகரன், அவரது உறவினர்கள் ரகு என்கின்ற ரகுநாதன், ராஜி, பாரதி, சாந்தாமணி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.7000 அபராதம் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். இதில் 6-வது குற்றவாளியான குருசாமி ஏற்கனவே இறந்து விட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

    • அந்த வழியாக காரில் வந்த முனிராஜ், மொபட் மீது காரை வேகமாக மோதினார். இதில், சின்னபையன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
    • முனிராஜ் அரிவாளால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில், சின்னபையன் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே முத்துராயன் கொட்டாயை சேர்ந்தவர் சின்னபையன் (வயது45). பால் வியாபாரி. இவரது நண்பர் திப்பசந்திரத்தை சேர்ந்த முனிராஜ் (37). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர்.

    இந்த நிலையில், முனிராஜ் அடிக்கடி சின்னபையன் வீட்டுக்கு சென்று வந்ததால், சின்னபையனின் மனைவி முத்துமாரி (32) என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும், சின்னபையன், முனிராஜிடம் பணமும், அவரது மனைவியிடம் நகைகளும் பெற்று அதனை திருப்பித்தர மறுத்து தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால், முனிராஜ் ஆத்திரமடைந்து, சின்னபையனை பழிவாங்க முடிவு செய்தார். கடந்த 14-3-2018 அன்று இரவு சின்னபையன், ஒசஹள்ளி பகுதியில் மொபட்டில் சென்றார்.

    அப்போது, அந்த வழியாக காரில் வந்த முனிராஜ், மொபட் மீது காரை வேகமாக மோதினார். இதில், சின்னபையன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அவரை, முனிராஜ் அரிவாளால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில், சின்னபையன் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.

    இது குறித்து தேன்கனி க்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முனிராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி ரோசலின் துரை முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோசலின் துரை, முனிராஜுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • தனது 4 வயது மகளுடன் ஆனந்தி தனியாக வசித்து வந்தார்.
    • வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது

    திருப்பூர், ஆக.2-

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் இல்லியம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 43). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள தேங்காய் கொப்பரை களத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவரது கணவர் விபத்தில் இறந்தார். அவருடைய மகனும் வேறொரு விபத்தில் இறந்தார். இதனால் தனது 4 வயது மகளுடன் ஆனந்தி தனியாக வசித்து வந்தார். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தானும் விஷம் குடித்து தனது மகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். தீவிர சிகிச்சைக்கு பின் ஆனந்தி உயிர் பிழைத்தார்.

    இது குறித்து காங்கயம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஆனந்தியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த குற்றத்திற்கு ஆனந்திக்கு ஆயுள் தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

    • கடந்த 9.5.2022 அன்று ஓசூரில், நெசவுத்தெரு அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் பகுதியில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
    • படுகாயமடைந்த நரசிம்மன் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உத்தனபள்ளி பக்கமுள்ள கொம்மே பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது28). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் ரெட்டி (42) என்பவருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து கடந்த 9.5.2022 அன்று ஓசூரில், நெசவுத்தெரு அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் பகுதியில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது நரசிம்மனை பீர்பாட்டிலால் சுரேஷ்ரெட்டி தாக்கினார். இதில் படுகாயமடைந்த நரசிம்மன் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுதொடர்பாக, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணை ஓசூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி ரோஸ்லின் துரை முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை, சுரேஷ் ரெட்டிக்கு, ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • அசோக்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆனந்தகுமாா் , சுரேஷ்குமாா் ஆகியோரைக் குத்தியுள்ளாா்.
    • அசோக்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    திருப்பூர்:

    கும்பகோணம் அருகில் உள்ள வன்னிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பி.ஆனந்தகுமாா் (வயது 24). இவரது அண்ணன் சுரேஷ்குமாா் (27). இவா்கள் இருவரும் திருப்பூா் ஸ்ரீ நகரில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளா்களாகப் பணியாற்றி வந்தனா்.

    இந்த நிலையில், அனுப்பா்பாளையம் சந்தைப்பேட்டையில் கைப்பேசி பழுது நீக்கும் கடை வைத்திருந்த ஜாா்ஜ் என்கிற அசோக்குமாா் (32), ரவி என்கிற ஜெயகுமாா் (33) ஆகியோரிடம் இருவரும் பகுதிநேர வேலை செய்து வந்திருந்தனா்.இதையடுத்து, சகோதரா்கள் இருவரும் தனியாக செல்போன் பழுது நீக்கும் கடை வைப்பதற்கு முயற்சி செய்து வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில், ஆனந்தகுமாா், சுரேஷ்குமாா் ஆகியோா் கடந்த 2013 மே 5 ந்தேதி அனுப்பா்பாளையம் சந்தைபேட்டை அருகே வந்தபோது அவா்களைத் தடுத்து நிறுத்தி அசோக்குமாா், ஜெயகுமாா் ஆகியோா் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது.

    அப்போது அசோக்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆனந்தகுமாா் , சுரேஷ்குமாா் ஆகியோரைக் குத்தியுள்ளாா். இதில், காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் கோவையில் உள்ள தனியாா் மருத்துவனையில் சோ்கப்பட்டிருந்த ஆனந்தகுமாா் உயிரிழந்தாா். இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    இந்த வழக்கானது திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், அசோக்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வக்கீல் எஸ்.கனகசபாபதி ஆஜரானாா்.

    • தேனி மாவட்டம் கு.துரைசாமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பாண்டி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காட்டுராஜா மனைவி பாக்கியத்துக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.
    • கடந்த 2014 செப்டம்பர் 17ந் தேதி தனது வீட்டு அருகே நின்றிருந்த பாண்டியை பாக்கியத்தின் மகன் மணி, மருமகன் விஜயபாண்டி, மகள் பிரேமா ஆகியோர் கத்தியால் குத்தி அருகில் இருந்த கிணற்றில் தள்ளினர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் கு.துரைசாமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பாண்டி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காட்டுராஜா மனைவி பாக்கியத்துக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2014 செப்டம்பர் 17ந் தேதி தனது வீட்டு அருகே நின்றிருந்த பாண்டியை பாக்கியத்தின் மகன் மணி, மருமகன் விஜயபாண்டி, மகள் பிரேமா ஆகியோர் கத்தியால் குத்தி அருகில் இருந்த கிணற்றில் தள்ளினர்.

    இதில் பாண்டி உயிரிழந்தார். இது குறித்து பாண்டியின் மகள் மலர்மணி அளித்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியம், மணி, விஜயபாண்டி, பிரேமா ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் பாண்டியை கொலை செய்த மணி, விஜயபாண்டிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் பாக்கியம், பிரேமா ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டார்.

    • பாலியல் சித்திரவதைக்கு உள்ளானது குறித்து சிறுமி புகார் செய்தார்.
    • குற்றம் சாட்டப்பட்ட பிஜூ பிரான்சிசுக்கு 4 பிரிவுகளுக்கு ஆயுள் தண்டனையும், 6 பிரிவுகளுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சோமன் தீர்ப்பு வழங்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஞாறக்கல் வெளியதம்பரம்பு பகுதியை சேர்ந்தவர் பிஜூ பிரான்சிஸ் (வயது 41). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

    அந்த பெண்ணின் வீட்டிற்கு பிரான்சிஸ் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் மகளான 11 வயது சிறுமி மீது அவருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியை அவர் ஓராண்டு காலமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

    இதற்கு இந்த சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. பாலியல் சித்திரவதைக்கு உள்ளானது குறித்து சிறுமி புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் பிஜூ பிரான்சிசை கைது செய்தனர்.

    அவர் மீது 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு எர்ணாகுளம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.

    அதில் குற்றம் சாட்டப்பட்ட பிஜூ பிரான்சிசுக்கு 4 பிரிவுகளுக்கு ஆயுள் தண்டனையும், 6 பிரிவுகளுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சோமன் தீர்ப்பு வழங்கினார். மேலும் அவருக்கு ரூ 5.50 லட்சம் அபராதமும் விதித்தார்.

    சிறைதண்டனையை பிஜூ பிரான்சிஸ் ஒரே நேரத்தில் அனுபவிக்கலாம் என்றும், அபராத தொகையை சிறுமிக்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட சட்டபணிகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

    மேலும் நீதிபதி தனது கருத்தில், இது போன்ற சம்பவம் மிகவும் கொடூரமானது. அதனால் தான் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். கேரளா மாநிலத்தில் சமீபத்திய போக்சோ வழக்குகளில், தற்போது வழங்கப்பட்ட தண்டனையே அதிகபட்ச தண்டனை என்று கூறப்படுகிறது.

    • ஜமுனாமரத்தூரில் நடந்த முதியவர் கொலை வழக்கில் உத்தரவு
    • திருப்பத்தூர் கோர்ட்டு வளாகத்தில் இருந்து தப்பியோட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

    திருப்பத்தூர்:

    திருவண்ணாமலைமாவட் டம் போளூர் அடுத்த ஜமு னாமரத்தூர் மண்டப்பாறை கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பொன்னு சாமி (வயது 45), விவசாயி. இவருக்கும், இவரது சகோத ரர் பூச்சிக்கும் இடையே உள்ள இடத்தில் விவசாயம் செய்வதில் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் பூச்சி, ஊர் பஞ்சாயத்தை கூட் டினார்.

    பஞ்சாயத்தில் பூச்சிக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த உறவினர் குப்பன் (60) என்பவர் பேசினார். இது பொன்னுசாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் கடந்த 2013- ம் ஆண்டு ஜூன் 10-ந் தேதி மீண்டும் குப்பனுக்கும், பொன்னுசாமிக்கும் இடையை வாக்குவாதம் ஏற் பட்டது. அப்போது பொன்னுசாமி, விவசாயியான அவ ரது சகோதரர் ஜெயராமன் (40), உறவினர்கள் உமேஷ், வெள்ளையன் மனைவி பூச்சி ஆகிய 4 பேரும் ஒன்று சேர்ந்து குப்பனை சரமாரியாக தாக் கினர். திடீரெனஜெயராமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குப்பனை வெட்டி னார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக் காக வேலூர் அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டார். அங்கி சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    ஆயுள் தண்டனை இதுகுறித்து ஜமுனாமரத் தூர் போலீசார் வழக்குப்ப திவு செய்து. பொன்னுசாமி, ஜெயராமன், உமேஷ், பூச்சி ஆகிய 4 பேரை கைது செய்து கோர்ட்டில் வழக்குதொடர்ந்தனர்.

    இந்த வழக்கு திருப்பத்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசா ரணை நேற்று நடந்தது. இதில் நீதிபதி மீனாகுமாரி கத்தி யால் வெட்டிய ஜெயராம னுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், பொன்னுசாமிக்கு ஒரு வருட சிறை தண்டனையும் ரூ.500 அபராதமும், உமேஷ், பூச்சி ஆகிய 2 பேருக்கும் தலா ரூ.750 அபதாரதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    நீதிபதி தீர்ப்பு வாசித்து கொண்டு இருந்த போது ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட ஜெயராமன் கோர்ட் டில் இருந்து தப்பியோட முயன்றார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கோர்ட்டுக்குள் அழைத்து சென்றனர். இதனால் கோர்ட்டு வளா கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • சக்திவேல் கோபத்தில் மனோகரை பிடித்து கீழே தள்ளியதில் மனோகர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஓரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

    செங்கல்பட்டு:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டி ஊரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24). இவர் செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தார்.

    சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பம்மல், முத்தமிழ்நகர், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மனோகர் (65). இவர்கள் இருவரும் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தனர். அப்போது சக்திவேலுக்கும், மனோகருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 31-10-2011 அன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சக்திவேல் கோபத்தில் மனோகரை பிடித்து கீழே தள்ளியதில் மனோகர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மீது செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட அமர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனார்.

    இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி காயத்ரி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஓரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் வையாபுரி ஆஜரானார்.

    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா பலவன்பாடி கிராமத்தை சேர்ந்த நாராயணன் மகன் ராமன் (வயது 28).

    இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளார்.

    இதையடுத்து சிறுமியின் தாய் நடந்த சம்பவம் குறித்து ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு மீதான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று வழக்கு கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று தீர்ப்பு கூறினார்.

    அதில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ராமனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து ராமனை போலீசார் வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முக சுந்தரம் இறந்தார்.
    • புழல் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    செங்குன்றம்:

    ஆவடி அடுத்த அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது66). இவர் திருமுல்லைவாயலில் நடந்த ஒரு கொலையில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை கைதியாக புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முக சுந்தரம் இறந்தார்.

    இது குறித்து புழல் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×