என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாலிபரை பீர்பாட்டிலால் குத்தி கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
- கடந்த 9.5.2022 அன்று ஓசூரில், நெசவுத்தெரு அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் பகுதியில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
- படுகாயமடைந்த நரசிம்மன் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உத்தனபள்ளி பக்கமுள்ள கொம்மே பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது28). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் ரெட்டி (42) என்பவருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 9.5.2022 அன்று ஓசூரில், நெசவுத்தெரு அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் பகுதியில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது நரசிம்மனை பீர்பாட்டிலால் சுரேஷ்ரெட்டி தாக்கினார். இதில் படுகாயமடைந்த நரசிம்மன் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுதொடர்பாக, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஓசூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி ரோஸ்லின் துரை முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை, சுரேஷ் ரெட்டிக்கு, ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்