search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தை மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
    X

    தந்தை மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

    • மின்வேலியில் சிக்கி 2 பேர் பலியான வழக்கில் தந்தை மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
    • அரியலூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் இறந்த வழக்கில் அனுமதியின்றி மின்வேலி அமைத்த இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    விக்கிரமங்கலம் அடுத்த சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேலாயுதம்(95). இவரது மகன் தங்கராசு(60) ஓய்வுபெற்ற விஏஓ. இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு, கொள்ளிடம் ஆற்றுபடுகை பகுதியில் தனது விவசாய நிலத்துக்கு கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க சென்ற போது, அதே ஊரைச் சேர்ந்த தேவேந்திரன்(52) தனது வயலில், சோளப்பயிர்களை காட்டுபன்றிகள் சேதபடுத்துவதை கட்டுப்படுத்த அமைத்திருந்த மின்வேலியில் சிக்கியதில் இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தங்கராசு மகன் தமிழரசன்(33) அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த விக்கிரமங்கலம் காவல் துறையினர், அனுமதியின்றி மின்வேலி அமைத்ததாக தேவேந்திரன்(52), அவரது மகன் பிரபாகரன்(25), மின்வேலி அமைக்க உடந்தையாக இருந்ததாக அதேகிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சுரேஷ், ஆறுமுகம் மகன் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கர்ணன், அனுமதியின்றி மின்வேலி அமைத்த தேவேந்திரன் அவரது மகன் பிரபாகரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனைகளும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட கலியமூர்த்தி மகன் சுரேஷ், ஆறுமுகம் மகன் சுரேஷ் ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார். இதையடுத்து தேவேந்திரன், பிரபாகரன் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×