search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுள் தண்டனை"

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முசரவாக்கம் காலனியை சேர்ந்த தொழிலாளியான சீராளன் என்பவரை கைது செய்தனர்.
    • சீராளன் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    காஞ்சிபுரம்:

    பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள திருப்புட்குழி பகுதியை சேர்ந்தவர் கண்ணியப்பன். இவரது மனைவி பார்வதி (வயது66). கடந்த 7.12.2018-ம் ஆண்டு திருப்புட்குழி ஏரிக்கரை அருகில் உள்ள நிலத்தில் பார்வதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முசரவாக்கம் காலனியை சேர்ந்த தொழிலாளியான சீராளன் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு அளித்தார். அதில், சீராளன் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டி உத்தரவு.
    • ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழக அரசு அறிவிப்பு.

    தமிழகத்தில் உள்ள சிறைகளில் நீண்ட காலமாக ஆயுள் தண்டனையில் உள்ள கைதிகள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டி, விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, கடலூர் 4, கோவை 6, வேலூர் 1, புழல் 1 என 12 சிறை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

    • குடும்ப உறவினரை சமன் திருமணம் செய்து கொள்ள மறுத்தார்
    • சமன், தன் ஆண் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்

    இத்தாலி (Italy) நாட்டில் பொலோக்னா (Bologna) நகருக்கு அருகே நொவெல்லாரா (Novellara) பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த சமன் அப்பாஸ் (18) தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    2020ல் உறவுக்கார ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு சமனை அவர் குடும்பத்தினர் வற்புறுத்தி வந்துள்ளனர். அதை அவர் மறுத்ததால் ஏற்பட்ட சச்சரவின் விளைவாக அந்நாட்டு அரசிடம் புகலிடம் தேடிய சமன், ஒரு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.

    கடந்த 2021ல், தனது ஆண் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த சமன், வீட்டில் இருந்த தனது பாஸ்போர்ட்டை எடுத்து கொள்ள அங்கு சென்றார். அப்போது மீண்டும் திருமண சர்ச்சை ஏற்பட்டது. அவர் பெற்றோர் சமனின் ஆண் நண்பரை மருமகனாக ஏற்க மறுத்தனர்.

    அன்றிலிருந்து சமன் திடீரென மாயமானார். ஆண் நண்பர் இது குறித்து காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் அவர்கள் சமனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முற்பட்டனர்.

    ஆனால், சமனின் பெற்றோர் தங்கள் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.

    அப்பகுதியில் இருந்த வீடியோ காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் சம்பவத்தன்று கையில் மண்வெட்டி, கடப்பாரை, பக்கெட் உள்ளிட்டவைகளுடன் 5 பேர் அவ்வீட்டை விட்டு வெளியே சென்று சுமார் 3 மணி நேரம் கழித்து திரும்புவது தெரிய வந்தது.

    காவல்துறையினரின் தேடலில் ஒரு வருடம் கழித்து சமனின் உடல் ஒரு பாழடைந்த பண்ணை வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. அவர் உடலில் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டிருந்தது.

    இவ்விவகாரத்தில் கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்த இத்தாலி அரசின் கோரிக்கைக்கு இணங்க பாகிஸ்தானிலிருந்த சமனின் தந்தையும், பிரான்சில் இருந்த சமனின் மாமாவும் இத்தாலிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். தாயார் வேறு எங்கோ தப்பி ஓடி விட்டார்.

    குடும்பத்தினரிடம் காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில், சமனின் பெற்றோர், தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள மறுத்த மகளை கொலை செய்ய திட்டம் தீட்டினர். சமனின் கழுத்தை அவளது மாமா நெரித்து கொலை செய்துள்ளார்.

    இவ்வழக்கில் தந்தைக்கும் தாய்க்கும் ஆயுள் தண்டனையும், கொலை செய்த சமனின் மாமாவிற்கு 14 வருடங்கள் சிறை தண்டனையும் வழங்கியது இத்தாலி நீதிமன்றம். இதனிடையே தாயாரை காவல்துறை தேடி வருகிறது.

    • கடந்த 2020-ம் ஆண்டு தொழிலாளி 16 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்தார்.
    • வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    செங்கல்பட்டு:

    உத்திரமேரூர் அருகே உள்ள ஒழுகரை கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது58). தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்தார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அப்போது குற்றவாளி குணசேகரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

    • திருவாடானை வட்டம் நா்த்தன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பி.ரகுபதி
    • கண்ணப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரகுபதியை குத்திக்கொலை செய்துள்ளாா்.

    திருப்பூர் : 

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் நா்த்தன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பி.ரகுபதி ( வயது 22). இவா் திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே ஊத்துக்குளியில் டாஸ்மாக் பாா் நடத்தி வந்த சிவகங்கை மாவட்டத்தை சோ்ந்த கே.கண்ணப்பன் (37) என்பவரிடம் வேலை செய்து வந்தாா்.

    இந்த நிலையில் பாரில் இருந்த ரூ.6 ஆயிரத்தை எடுத்தது தொடா்பான விவகாரத்தில் ரகுபதி வேலையை விட்டுச் சென்றுள்ளாா். இதன் பின்னா் அருகம்பாளையத்தில் உள்ள வேறு ஒரு பாரில் ரகுபதி வேலை செய்து வந்துள்ளாா்.

    இந்த நிலையில், கடந்த 2018 மாா்ச் 12-ந் தேதி ரகுபதி வேலைசெய்து வந்த பாருக்கு கண்ணப்பன் சென்றுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரகுபதி, கண்ணப்பனை தகாத வாா்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து கண்ணப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரகுபதியை குத்திக்கொலை செய்துள்ளாா்.

    இதுகுறித்து ஊத்துக்குளி காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து கண்ணப்பனைக் கைது செய்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பு வழங்கினாா். அதில், கண்ணப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜரானாா்.

    • திருப்பூர் பெரியகடை வீதியை சேர்ந்தவர் பல்கீஸ் பேகம் (வயது 31).
    • கோம்பை தோட்டம் பகுதியில் தங்கியிருந்து ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

     திருப்பூர் : 

    திருப்பூர் பெரியகடை வீதியை சேர்ந்தவர் பல்கீஸ் பேகம் (வயது 31). இவர் கணவரிடம் விவாகரத்து பெற்று வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். திண்டுக்கல் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் முகமது அபுதாகீர் சேட் (44). இவர் திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியில் தங்கியிருந்து ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். பல்கீஸ் பேகம், முகமது அபுதாகீர் சேட் இருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி பல்கீஸ் பேகம் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

    இந்தநிலையில் கடந்த 30-6-2019 அன்று காலை பல்கீஸ் பேகம் வீட்டுக்கு முகமது அபுதாகீர் சேட் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முகமது அபுதாகீர் சேட், கத்தியால் பல்கீஸ் பேகத்தை குத்திக்கொலை செய்தார். இதுதொடர்பாக தெற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முகமது அபுதாகீர் சேட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பெண்ணைக்கொலை செய்த முகமது அபுதாகீர் சேட்டுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், கணேசன் மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

    • கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் அனுப்பா்பாளையம் காந்திநகா் ஜீவா காலனியை சோ்ந்தவா் சரவணன் (வயது 35). இவரின் மனைவி லாவண்யா (28). இவா் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு மே 22ந் தேதி ஏற்பட்ட தகராறின்போது, ஆத்திரமடைந்த சரவணன் போா்வையால் லாவாண்யாவின் முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளாா்.இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

    இந்த வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி டி.பாலு தீா்ப்பு வழங்கினாா்.இதில் சரவணனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலாபானு ஆஜரானாா்.

    • ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிப்பு
    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    சென்னையை சேர்ந்தவர் தனானந்தகிரி (வயது 50). இவர் சாமியார் போன்று பல்வேறு இடங்களுக்கு செல்வார். கடந்த 2021-ம் ஆண்டு வேலூர் வந்த அவர் வேலூருக்கு வந்தார்.

    கேரளமாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பாபு அகமது ஷேக் (50). இவரும் வேலூரில் சுற்றித்திரிந்து கிடைக்கும் வேலைகளை செய்து சாலையோரம் எங்காவது தூங்குவதை வழக்கமாக கொண்டி ருந்தார்.

    இந்தநிலையில் அவர் வழக்கமாக தூங்கும் இடத்தில் தனானந்தகிரி படுத்துள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 5.11.2021 அன்று காட்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த தனானந்தகிரியை, பாபு அகமதுஷேக் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பியோடி விட்டார்.

    இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுஅகமது ஷேக்கை கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கின் இறுதிவிசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் சம்பத் ஆஜராகி வாதாடினார்.

    நீதிபதி ரேவதி வழக்கை விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட பாபு அகமதுஷேக்குக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண் டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து பாபுஅகமதுஷேக்கை, போலீசார் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்று அடைத்தனர்.

    • சாம்ராஜ் தருமபுரி புறநகர் பஸ் நிலையத்தில் சத்யாவை சந்தித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    • தொடர்ந்து வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் சாம்ராஜ், சத்யாவை வெட்டிக்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மல்லாபுரம் அடுத்த செங்கானூரைச் சேர்ந்த சாம்ராஜ் (23) என்பவர், அதே ஊரைச் சேர்ந்த உறவினர் மகள் சத்யா (23) என்பவரை திருமணம் செய்ய விருப்பப்பட்டு பெண் கேட்டுள்ளார். ஆனால், சத்யாவுக்கு அவரது குடும்பத்தார் வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.

    இதையறிந்த சாம்ராஜ் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி தருமபுரி புறநகர் பஸ் நிலையத்தில் சத்யாவை சந்தித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அப்போது சத்யா மறுத்ததால், திடீரென சத்யாவை வெட்டிக்கொலை செய்தார். இது தொடர்பாக தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை கைது செய்தனர்.

    இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் கல்பனா ஆஜராகி வாதாடி வந்தார். தொடர்ந்து வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் சாம்ராஜ், சத்யாவை வெட்டிக்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து குற்றவாளி சாம்ராஜூக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

    • பன்னீர் செல்வம். இவருக்கு ெசாந்தமான நிலத்தை கோயமுத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு 20 சென்ட் நிலத்தை வாடகைக்கு விட்டு இருந்தார்.
    • செல்வராஜ் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 30 பேரை தங்க வைத்து தனியார் நிறுவனம் நடத்தி வந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கனககிரி கிராமம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவருக்கு ெசாந்தமான நிலத்தை கோயமுத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு 20 சென்ட் நிலத்தை வாடகைக்கு விட்டு இருந்தார்.

    தொழிலாளர்கள்

    மேலும் அந்த இடத்தில் இரும்பு தகர செட் அமைத்து அதில் செல்வராஜ் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 30 பேரை தங்க வைத்து தனியார் நிறுவனம் நடத்தி வந்தார்.

    கொலை

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தகர செட்டின் முதல் அறையில் பீகார் மாநிலம் புல்வாரியா கிழக்கு பகுதியை சேர்ந்த முகமது நகரூதின் (31), பீகார் மாநிலம் நாராயணபுரம் சகோரியா பகுதியை சேர்ந்த ஜெயகுார்ஷ்தேவ், அமித்குமார் ஆகியோர் ஒன்றாக தங்கி இருந்தனர். அன்று இரவு அவர்களுக்குள் சாப்பாடு தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஜெயகுார்ஷ்தேவ் மற்றும் அமித்குமார் ஆகியோர் ஒன்று சேர்ந்து இரவு தூங்கும்போது முகமது நகரூதின் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்தனர்.

    இது குறித்து அப்போதைய மகுடஞ்சாவடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி கொலை வழக்குப்பதிவு செய்து ஜெயகுார்ஷ்தேவ் மற்றும் அமித்குமார் ஆகியோரை மார்ச் மாதம் 3-ந்தேதி கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.

    ஆயுள் தண்டனை

    இவ்வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம்-1-ல் விசா ரணை நடைபெற்று வந்தது. சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இன்று நீதிபதி

    ஜெகநாதன் தீர்ப்பு வழங்கினார். ஜெயகுார்ஷ்தேவ் மற்றும் அமித்குமார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 -ம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி, இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    சூப்பிரண்டு பாராட்டு

    இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க விரைவாக செயல்பட்ட மகுடஞ்சாவடி போலீஸ் நிலைய தற்போதைய இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு மற்றும் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் பாராட்டினார்.

    • வழக்கு விசாரணை பொன்னேரி 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • வழக்கு விசாரணையின்போதே முருகன், சண்முகம் ஆகியோர் இறந்து போனார்கள்.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது28). பெண் தகராறு காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு யுவராஜ் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த முருகன், தங்கராஜ், ராமச்சந்திரன், ராம மூர்த்தி, ஸ்ரீராமலு, சண்முகம், மணி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை பொன்னேரி 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே முருகன், சண்முகம் ஆகியோர் இறந்து போனார்கள். இதைத்தொடர்ந்து மற்ற 5 பேர் மீது வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி கிருஷ்ணசாமி தீர்ப்பு வழங்கினார். அதில் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இறந்து போன முருகன், சண்முகம் ஆகியோரை தவிர்த்து தங்கராஜ், ராமச்சந்திரன், ராமமூர்த்தி, ஸ்ரீராமலு, மணி ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு சார்பாக அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.ஆர் லாசர் ஆஜரானார்.

    • ஆயுள் தண்டனை பெற்ற போக்சோ கைதி திடீரென இறந்தார்.
    • கைதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதி யை சேர்ந்தவர் மருதுவீரன் என்ற மதுரை வீரன் (வயது 50). இவர் கடந்த 2012-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் மருதுவீரன் அடைக்கப்பட்டி ருந்தார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. அவ ருக்கு சிறை மருத்துவ மனையில் உடனே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருது வீரனை சிறைத்துறை போலீ சார் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மருதுவீரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிறை அதி காரி முனிஸ்திவாகர் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×