search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிள்"

    • புது அக்சஸரீக்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படலாம்.
    • மினி எல்.இ.டி. ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டிற்கு முன் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார்.

    அந்த வகையில், மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட ஐபேட் ஏர், அளவில் பெரிய ஐபேட் ஏர் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றில் மேக்புக் ஏர் மாடல் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் டிஸ்ப்ளே ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இவற்றில் M3 பிராசஸர்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

     


    புதிய ஐபேட் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்களுடன் புது அக்சஸரீக்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐ.ஒ.எஸ். 17.4 வெர்ஷனின் முதல் பீட்டாவில் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவை ஐபேட் ப்ரோவில் பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. இத்துடன் ஃபேஸ் ஐ.டி. கேமராவும் வழங்கப்படுகிறது.

    2024 ஐபேட் மாடலில் புதிய OLED ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் இவற்றில் அதிக பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் அதிக நேர பேட்டரி பேக்கப் வழங்கும் மினி எல்.இ.டி. ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    • ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலில் M2 பிராசஸர், புதிய R1 சிப் உள்ளது.
    • விஷன் ப்ரோ மாடலில் வைபை 6, ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் விஷன் ப்ரோ மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டுமே விஷன் ப்ரோ ஹெட்செட்டுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன. முன்பதிவை தொடர்ந்து பிப்ரவரி 2-ம் தேதி இதன் விற்பனை துவங்குகிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலில் ஆப்பிளின் M2 பிராசஸர் மற்றும் புதிய R1 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விஷன் ப்ரோ ஹெட்செட் உடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரு ஹெட்பேன்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் மினிமலிஸ்ட் சோலோ நிட் பேன்ட், ஸ்டேபிலிட்டி கொண்ட டூயல் லூப் பேன்ட் வழங்கப்படுகிறது. இந்த ஹெட்செட்-இன் பெட்டி வெளிச்சம் புகாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் மென்மையானை குஷன்கள் உள்ளன.

     


    அம்சங்களை பொருத்தவரை விஷன் ப்ரோ மாடலில் 23 மில்லியன் பிக்சல்கள் அடங்கிய, அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே சிஸ்டம் இரு டிஸ்ப்ளேக்களிடையே வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ், 96 ஹெர்ட்ஸ் மற்றும் 100 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்களை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் பிரத்யேக டூயல் சிப் டிசைன் மற்றும் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் அசாத்திய டிஸ்ப்ளே அனுபவத்தை பயனர்களுக்கு கடத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் கொண்டு பயனர்கள் தங்களின் நினைவுகளை திரும்பி பார்க்கலாம்.

     


    ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலில் வைபை 6, ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, அதிகபட்சம் 1080 பிக்சல் தரத்தில் ஏர்பிளே சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மொத்தம் ஆறு மைக்ரோபோன்கள், இரண்டு பிரைமரி கேமரா சென்சார்கள், ஆறு டிராக்கிங் கேமராக்கள், கண்களை டிராக் செய்ய நான்கு கேமராக்கள், LiDAR ஸ்கேனர், ட்ரூடெப்த் கேமரா மற்றும் ஆறு சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

    விஷன் ப்ரோ ஹெட்செட் வெளிப்புற பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. பேட்டரி பேக்-ஐ பயனர்கள் தனி கேபிள் மூலம் விஷன் ப்ரோ ஹெட்செட் உடன் இணைத்து சார்ஜிங் செய்து கொள்ளலாம். இதில் உள்ள பேட்டரிகளின் திறன் குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. விஷன் ப்ரோ ஹெட்செட்-இன் எடை 650 கிராம்கள் வரை இருக்கலாம். தனியே வழங்கப்படும் பேட்டரி பேக் எடை 353 கிராம் ஆகும்.

    ஆப்பிள் விஷன் ப்ரோ பேஸ் மாடல் 256 ஜி.பி. மெமரி விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2.9 லட்சம் என துவங்குகிறது. இதன் 512 ஜி.பி. மற்றும் 1 டி.பி. மெமரி மாடல்களின் விலை முறையே 3 ஆயிரத்து 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3.07 லட்சம் மற்றும் 3 ஆயிரத்து 899 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • அதிக மதிப்பு மிக்க நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியது.
    • அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததும் காரணம் என தகவல்.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. சத்ய நாதெல்லா தலைமை வகிக்கும் நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி சந்தையில் அதிக மதிப்பு மிக்க நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி மைக்ரோசாப்ட் சந்தை மதிப்பு 2.87 டிரில்லியன் டாலர்கள் ஆகும். முன்னதாக 2018 மற்றும் 2021 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதே போன்று உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் இந்த அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது.

     


    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூடிங் பிரிவான அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததே அந்தஸ்த்து அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அமேசான் வெப் சேவைகளுக்கு கடும் போட்டியாளரான அஸ்யூர் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது.

    கிளவுட் கம்ப்யூடிங் பிரிவில் மைக்ரோசாப்ட் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும், இதன் சந்தை மதிப்பு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது. இதேபோன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தும் போது மைக்ரோசாப்ட்-இன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    • விஷன் ப்ரோ விற்பனை குறித்து ஆப்பிள் அப்டேட் கொடுத்தது.
    • ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும்.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்- ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. எனினும், இதன் விற்பனை துவங்காமல் இருந்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் விஷன் ப்ரோ ஹெட்செட் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்து இருந்த நிலையில், இது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோ ஹெட்செட் விற்பனை பிப்ரவரி 2-ம் தேதி அமெரிக்காவில் துவங்கும் என்று அறிவித்து இருக்கிறது. பயனர்கள் இந்த ஹெட்செட்-ஐ ஜனவரி 19-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும். அமெரிக்க பயனர்கள் விஷன் ப்ரோ ஹெட்செட்-ஐ ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும். இதன் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள் ஆகும்.

     


    விஷன் ப்ரோ ஹெட்செட் உடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரு ஹெட்பேன்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் மினிமலிஸ்ட் சோலோ நிட் பேன்ட், ஸ்டேபிலிட்டி கொண்ட டூயல் லூப் பேன்ட் வழங்கப்படுகிறது. இந்த ஹெட்செட்-இன் பெட்டி வெளிச்சம் புகாத வகையிலும், மென்மையான குஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அம்சங்களை பொருத்தவரை விஷன் ப்ரோ மாடலில் 23 மில்லியன் பிக்சல்கள் அடங்கிய, அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே சிஸ்டம் இரு டிஸ்ப்ளேக்களிடையே வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் பிரத்யேக டூயல் சிப் டிசைன் மற்றும் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த தொழில்நுட்பம் அசாத்திய டிஸ்ப்ளே அனுபவத்தை பயனர்களுக்கு கடத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் கொண்டு பயனர்கள் தங்களின் நினைவுகளை திரும்பி பார்க்க முடியும். இதன் இந்திய விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. 

    • ஆப்பிள் ஐபோனுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • ஐபோன் மாடலுக்கான சிறப்பு சலுகைகள் குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு விஜய் சேல்ஸ்-இல் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறப்பு சலுகை விற்பனை 130 விஜய் சேல்ஸ் ஸ்டோர், ஆன்லைன் வலைதளத்தில் நடைபெறுகிறது.

    சிறப்பு விற்பனை காரணமாக 128 ஜி.பி. மெமரி கொண்ட ஐபோன் 13 விலை ரூ. 51 ஆயிரத்து 820 என மாறியுள்ளது. இதன் உண்மை விலை ரூ. 59 ஆயிரத்து 900 ஆகும். ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. விலை ரூ. 69 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 61 ஆயிரத்து 160 ஆக மாறி இருக்கிறது. ஐபோன் 14 பிளஸ் மாடலின் விலை ரூ. 70 ஆயிரத்து 490 என துவங்குகிறது.

     


    ஐபோன் 15 சீரிஸ் சலுகை விவரங்கள்:

    ஐபோன் 15 பேஸ் மாடல் விலை ரூ. 70 ஆயிரத்து 990

    ஐபோன் 15 பிளஸ் பேஸ் மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 820


    ஐபோன் 15 ப்ரோ 128 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 900 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ 512 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 48 ஆயிரத்து 900 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ 256 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 32 ஆயிரத்து 240 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ 1 டி.பி. ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 990 (வங்கி சலுகைகள் சேர்த்து)


    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 256 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 46 ஆயிரத்து 240 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 512 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 61 ஆயிரத்து 900 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 1 டி.பி. ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 990 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    • ஐபோன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • ஒட்டுமொத்தமாக ரூ. 12 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோன் மாடல்களுக்கு தனி மவுசு உண்டு. ஒவ்வொரு முறை புதிய மாடல் அறிமுகமாகும் போதும், அதனை உடனே வாங்க தனி ரசிகர் பட்டாளமும் ஐபோனுக்கு எப்போதும் இருக்கும். அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.

    அறிமுகமான ஒரே வாரத்தில் விற்பனைக்கு வந்த ஐபோன் 15 சீரிஸ் சர்வதேச அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. அறிமுகமான சமயத்தில் ஐபோன் 15 மாடலின் 128 ஜி.பி. ரூ. 79 ஆயிரத்து 990 என்றும் 256 ஜி.பி. விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் 512 ஜி.பி. விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

     


    இந்த நிலையில், விஜய் சேல்ஸ்-இல் ஐபோன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் ஜனவரி 7-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. சலுகைகளை பயனர்கள் 130 விஜய் சேல்ஸ் ஸ்டோர்கள் மற்றும் வலைதளத்தில் பெற முடியும்.

    விஜய் சேல்ஸ்-இல் ஐபோன் 15 மாடலின் 128 ஜி.பி. ரூ. 70 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 4 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஒட்டுமொத்தமாக ரூ. 12 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ஐபோன் 15 ப்ரோ 1 டி.பி. விலை ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடலின் இதர வெர்ஷன்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிது. 

    • விஷன் ப்ரோ 2 மாடல் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.
    • டிவி மாடல்களில் இருப்பதை விட அதிக பிக்சல்களை கொண்டிருக்கும்.

    ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. விற்பனை விரைவில் துவங்க இருப்பதை ஒட்டி, ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலின் உற்பத்தி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விஷன் ப்ரோ 2 மாடல் பற்றிய விவரங்கள் வெளியாக துவங்கியுள்ளன.

    அதன்படி இரண்டாம் தலைமுறை விஷன் ப்ரோ மாடலில் சற்றே அதிநவீன மற்றும் பிரகாசமான டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அதிக பிரகாசமான மற்றும் அதிக திறன் கொண்ட மைக்ரோ OLED டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது. இது ஒவ்வொரு கண்களிலும் வழக்கமான 4K டிவி மாடல்களில் இருப்பதை விட அதிக பிக்சல்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

     


    இது குறித்து தென் கொரிய செய்திகளில் வெளியாகி இருக்கும் தகவல்களில், ஆப்பிள் விஷன் ப்ரோ 2 மாடலில் RGB OLEDoS டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் 2027 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய டிஸ்ப்ளேக்கள் தற்போதைய WOLED டிஸ்ப்ளேக்களை விட மேம்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    தற்போது RGB OLEDoS ரக டிஸ்ப்ளேக்களை வினியோகம் செய்யும் ஒரே நிறுவனமாக சாம்சங் உள்ளது. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய விஷன் ப்ரோ மாடலின் டிஸ்ப்ளே மாற்றுவதில் உறுதியாக இருந்தால், சாம்சங் டிஸ்ப்ளேக்களையே பயன்படுத்தும் என்று தெரிகிறது. முன்னதாக ஆப்பிள் ஐபோன் மாடல்களில் பயன்படுத்தப்படும் OLED டிஸ்ப்ளேக்களை சாம்சங் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    • வர்த்தக கூட்டமைப்பின் தடை உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது.
    • மேல்முறையீடு செய்து அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

    ஆப்பிள் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் மாடல்களின் இறக்குமதிக்கு அமெரிக்காவில் உள்ள சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தடை விதித்தது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் மாடல்களை அமெரிக்க சந்தையில் விற்பனை செய்ய முடியாத சூழல் உருவானது. இது தொடர்பான உத்தரவில் இறுதி முடிவை அமெரிக்க அதிபர் தலைமையிலான அரசு எடுக்க வேண்டியிருந்தது.

    அந்த வகையில், வர்த்தக கூட்டமைப்பின் தடை உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக தடை உத்தரவை எதிர்த்து ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்து அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

     


    மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோ மற்றும் ஆப்பிள் இடையே கடந்த 2020 முதல் காப்புரிமை விவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. மசிமோ சார்பில் பதிவு செய்யப்பட்டிருந்த பிலட் ஆக்சிஜன் சென்சிங் அம்சம் தொடர்பான காப்புரிமையை ஆப்பிள் மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த விவகாரத்தில் ஆப்பிள் காப்புரிமையை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 போன்ற மாடல்களின் விற்பனைக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு காரணமாக இரு வாட்ச் மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் வாங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

    • ஆப்பிள் வாட்ச்களை இறக்குமதி செய்ய சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தடை.
    • விற்பனையை மீண்டும் தொடங்கும் பணிகளில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் தனது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடல்களின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. ஆப்பிள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோ இடையே சர்வதேச வர்த்தக கூட்டமைப்பில் (ஐ.டி.சி.) நடைபெற்று வந்த காப்புரிமை தொடர்பான வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் காரணமாக அமெரிக்க சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்களால் வாங்க முடியாது. அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் இரு சாதனங்களின் விற்பனை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

     


    இது தொடர்பாக 9டு5மேக் வெளியிட்டுள்ள தகவல்களில், பிலட் ஆக்சிஜன் சென்சிங் அம்சம் தொடர்பாக மசிமோ நிறுவனம் பதிவு செய்திருந்த காப்புரிமைகளை ஆப்பிள் மீறியது கண்டறியப்பட்டது. இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் மாடல்களை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ய சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தடை விதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மசிமோ காப்புரிமை தொடர்பான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் விற்பனையை மீண்டும் தொடர்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிசம்பர் 25-ம் தேதிக்குள் இறுதி முடிவை எடுக்க இருக்கிறார்.

    இதைத் தொடர்ந்து டிசம்பர் 26-ம் தேதி சர்வதேச வர்த்தக கூட்டமைப்பின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஆப்பிள் மற்றும் மசிமோ இடையே காப்புரிமை சார்ந்த பிரச்சினை கடந்த 2020 ஆண்டு முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு.
    • புதிய ஆலையில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்ற முடியும்.

    இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் கட்டமைக்க டாடா குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருக்கும் நிலையில், டாடா குழுமம் அதற்கான பணிகளை துரிதப்படுத்தும் என தெரிகிறது.

    இதற்காக தமிழ்நாட்டில் டாடா குழுமம் அமைக்கும் உற்பத்தி ஆலையில் கிட்டத்தட்ட 20 அசெம்ப்லி லைன்கள் இருக்கும் என்றும், இதில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்ற முடியும் என்றும் கூறப்படுகிறது. இது நாட்டிலேயே மிகப் பெரிய ஐபோன் உற்பத்தி ஆலையாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்த ஆலையில் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

     


    டாடா குழுமத்துடன் இணைந்து உள்நாட்டில் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஆப்பிள் முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், புதிய ஆலை உருவாக்கப்பட்டு வருகிறது. சீனாவை தவிர்த்து இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த நினைக்கும் ஆப்பிள் திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், டாடா குழுமம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள விஸ்ட்ரன் ஆலையை கைப்பற்றி இருக்கிறது.

    அடுத்த இரண்டில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் மட்டும் 50 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்ய வேண்டும் என ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே டாடா குழுமம் ஐபோன் உற்பத்தி பணிகளை விரிவுப்படுத்தும் வகையில், புதிய ஆலையை கட்டமைத்து வருகிறது. 

    • ஐபோன் SE மாடல்கள் ஐபோன் 8 போன்ற சேசிஸ் கொண்டிருக்கிறது.
    • மொத்தம் ஐந்து மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE 4 மாடல் கடந்த 2022 ஆண்டு அறிமுகமான ஐபோன் SE மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்தவிலை ஐபோன் மாடல் எனும் பெருமையை பெறும் என்று தெரிகிறது. முந்தைய ஐபோன் SE மாடல்கள் ஐபோன் 8 போன்ற சேசிஸ் கொண்டிருக்கிறது.

    எனினும், புதிய நான்காம் தலைமுறை ஐபோன் SE மாடலில் முற்றிலும் புதிய டிசைன் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் ஐபோன் SE 4 மாடலின் பேட்டரி அதன் முந்தைய வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருப்பதை விட அளவில் பெரிதாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டான்டர்டு ஐபோன் மாடல்களுக்கு இணையான பேட்டரி பேக்கப்-ஐ புதிய ஐபோன் SE 4 வழங்கும் என்று தெரிகிறது.

     


    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் SE 4 மாடலில் ஐபோன் 14-இல் வழங்கப்பட்ட பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு ஐபோன் SE (2022) மாடலுடன் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் ஐந்து மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    இதுவரை வெளியாகி இருக்கும் ப்ரோடோடைப் தகவல்களின் படி ஐபோன் SE 4 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் A2863 பேட்டரி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஐபோன் 14 மாடலிலும் இதே பேட்டரி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது 3279 எம்.ஏ.ஹெச். திறன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் தனது ஐபோன்களின் பேட்டரி திறன் குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கியதில்லை.

    • வீடியோக்களை பார்க்கும் போது அசத்தலான ஃபுல் ஸ்கிரீன் அனுபவம் கிடைக்கும்.
    • புதிய அண்டர் பேனல் கேமரா வழங்கப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களில் அன்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் வெளியாகும் ஐபோன்களில் இந்த தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான எல்.ஜி. அன்டர் பேனல் கேமரா ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த புதிய வகை கேமரா ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவின் கீழ் மறைந்து கொண்டிருக்கும். இதன் மூலம் கேமிங் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது அசத்தலான ஃபுல் ஸ்கிரீன் அனுபவம் கிடைக்கும். தற்போதைய ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் டைனமிக் ஐலேண்ட்-க்கு மாற்றாக புதிய அண்டர் பேனல் கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    கோப்புப்படம்

    கோப்புப்படம்

     

    எல்.ஜி. குழுமத்தின் எலெக்ட்ரிக் உபகரணங்கள் உற்பத்தி பிரிவு புதிய வகை அண்டர் பேனல் கேமரா சென்சார்களை உருவாக்கும் பணிகளில் மேம்பட்ட நிலையை அடைந்திருப்பதாக கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்போதைய செல்ஃபி கேமராக்களில், அண்டர் டிஸ்ப்ளே கேமராக்கள் டிஸ்ப்ளேவினுள் குறைந்தளவு வெளிச்சத்தையே அனுமதிக்கின்றன.

    இதன் காரணமாக கேமரா லென்ஸ் மற்றும் சென்சார்களுக்கு மிக குறைந்த தகவல்களே கிடைக்கும். இதனாலேயே தற்போதைய கேமராக்கள் புகைப்படங்களை குறைந்த தரத்தில் வழங்குகின்றன. இந்த அண்டர் டிஸ்ப்ளே கேமராக்கள் சந்திக்கும் சவால்களை எல்.ஜி. உருவாக்கும் அண்டர் பேனல் கேமரா சிறப்பாக எதிர்கொண்டு தரமுள்ள புகைப்படங்களை வெளிப்படுத்தும் என்று தெரிகிறது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்


    2026 வரை ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் புதிய அண்டர் பேனல் கேமரா சென்சார்களை வழங்க வாய்ப்புகள் மிகவும் குறைவுதான் என கூறப்படுகிறது. அண்டர் ஸ்கிரீன் கேமராவை வழங்கும் முன்பு ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ் ஐ.டி. அம்சத்திற்காக அண்டர் டிஸ்ப்ளே சென்சாரை வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

    முன்னதாக 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இசட்.டி.இ. ஆக்சன் 30 5ஜி மற்றும் சியோமி மி மிக்ஸ் 4 போன்ற மாடல்கள் மற்றும் அதன் பிறகு அறிமுகமான சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ஃபோல்டு 5 போன்ற மாடல்களில் செல்ஃபி கேமரா சென்சார்கள் டிஸ்ப்ளேவின் கீழ் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×