search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைக்ரோசாப்ட்"

    • பதவியை ராஜினாமா செய்து அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.
    • மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.

    ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் பவன் தவுலுரி மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பொறுப்பில் பனோஸ் பனய் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு பனோஸ் தனது பதவியை ராஜினாமா செய்து அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.

    முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் குழுக்களை தனியாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனி அதிகாரிகளை தலைமை பதவிகளில் நியமித்து இருந்தது. அதன்படி தவுலுரி சர்பேஸ் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார். மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.

    பராகின் புதிய பதவிகளில் பணியாற்ற விரும்பியதை அடுத்து, தவுலுரி விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவுகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தவுலுரி ஐ.ஐ.டி. மெட்ராஸ்-இல் பட்டம் பெற்றவர் ஆவார். இதன் மூலம் இவர் உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை பொறுப்பேற்ற இந்தியர்கள் பட்டியலில் தவுலுரி இணைந்துள்ளார்.

    • பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • கேமிங் பிரிவில் இருந்து 8 சதவீதம் பேர் வேலையிழக்க உள்ளனர்.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆக்டிவிஷன் ப்லிசர்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸ்-இல் பணியாற்றி வருவோரில் சுமார் 1900 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. தொழில்நுட்ப துறையில் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மைக்ரோசாப்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

    தற்போதைய அறிவிப்பின் மூலம் மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவில் இருந்து 8 சதவீதம் பேர் வேலையிழக்க உள்ளனர். இதில் பாதிக்கப்படுவதில் பெரும்பாலானோர் ஆக்டிவிஷன் ப்லிசர்ட்-இல் பணியாற்றுவோர் ஆவர்.

     


    ப்லிசர்ட் தலைவர் மைக் யபரா மற்றும் டிசைன் பிரிவின் மூத்த அலுவலர் ஆலென் ஆதெம் ஆகியோரும் நிறுவனத்தை விட்டு வெளியேறுகின்றனர். இதோடு ப்லிசர்ட் ஏற்கனவே அறிவித்து இருந்த கேம் ஒன்றும் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து இருக்கிறது.

    சமீபத்தில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் 5 லட்சத்து 73 ஆயிரத்து 621 கோடி ரூபாய்க்கு ஆக்டிவிஷன் ப்லிசர்ட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. இதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனம் கேமிங் பிரிவில் அதிக கவனம் செலுத்தவும், கேமிங்கில் முன்னணியில் உள்ள சோனியை எதிர்கொள்ளவும் திட்டமிட்டது.

    • மிட்நைட் ப்ளிசார்ட் எனும் ஹேக்கர் குழு ரஷிய ஆதரவுடன் செயல்படுகிறது
    • 2023 நவம்பரிலும் இக்குழு தாக்குதல் நடத்த முயன்றதாக மைக்ரோசாப்ட் தெரிவித்தது

    கணினிகளை பயன்படுத்த முக்கியமாக தேவைப்படுவது "இயக்க முறைமை" எனும் ஆபரேட்டிங் சிஸ்டம் (Operating System).

    உலக அளவில் கம்ப்யூட்டர்களில் பரவலாக பயன்படுத்தப்படும் ஆபரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ்.

    இதை தயாரிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் மாநில ரெட்மண்ட் (Redmond) பகுதியில் உள்ள மைக்ரோசாப்ட்.

    நேற்று, தனது நிறுவன பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து மைக்ரோசாப்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் அந்நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:

    சைபர் தாக்குதல்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    கடந்த 12 அன்று ரஷிய ஆதரவுடன் செயல்படும் மிட்நைட் ப்ளிசார்ட் (Midnight Blizzard) எனும் "ஹேக்கர்" (hacker) குழு, மைக்ரோசாப்டின் கார்ப்பரேட் மென்பொருள் கட்டுமானத்திற்கு உள்ளே அத்துமீறி ஹேக் செய்தது. பல ஈ-மெயில்களையும், பணியாளர்களின் கணக்கிலிருந்து சில கோப்புகளையும் திருடியது.

    மூத்த அதிகாரிகள், சட்டத்துறை மற்றும் சைபர் பாதுகாப்பு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரின் ஈ-மெயில்கள் திருடப்பட்டுள்ளன.

    அக்குழுவினரின் செயல்கள் குறித்து எங்கள் நிறுவனம் அறிந்துள்ள ரகசிய தகவல்கள் என்னென்ன என வேவு பார்க்க இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

    கடந்த 2023 நவம்பரில் "பாஸ்வேர்ட் ஸ்பிரே தாக்குதல்" எனும் முறையில் இதே குழு, பல முக்கிய அதிகாரிகளின் மின்னஞ்சல்களை ஊடுருவ முயன்றது.

    அரசாங்க துணையுடன் செயல்படும் குழுக்களால் இது போன்ற தாக்குதல்கள் தொடர்கிறது.

    இவ்வாறு மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

    சில தினங்களுக்கு முன், நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்பில் சைபர் தாக்குதல்கள் நடைபெற்றால் அது குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் நிறுவனங்கள் அனைத்து தகவல்களையும் வெளியிட வேண்டும் என அமெரிக்காவில் புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    • அதிக மதிப்பு மிக்க நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியது.
    • அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததும் காரணம் என தகவல்.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. சத்ய நாதெல்லா தலைமை வகிக்கும் நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி சந்தையில் அதிக மதிப்பு மிக்க நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி மைக்ரோசாப்ட் சந்தை மதிப்பு 2.87 டிரில்லியன் டாலர்கள் ஆகும். முன்னதாக 2018 மற்றும் 2021 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதே போன்று உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் இந்த அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது.

     


    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூடிங் பிரிவான அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததே அந்தஸ்த்து அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அமேசான் வெப் சேவைகளுக்கு கடும் போட்டியாளரான அஸ்யூர் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது.

    கிளவுட் கம்ப்யூடிங் பிரிவில் மைக்ரோசாப்ட் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும், இதன் சந்தை மதிப்பு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது. இதேபோன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தும் போது மைக்ரோசாப்ட்-இன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    • அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
    • இலவசமாக பயன்பெற நினைப்பதாக தெரிவித்துள்ளது.

    சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு சேவையை உருவாக்கிய ஒபன்ஏ.ஐ. மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு எதிராக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

    இரு நிறுவனங்களும் தங்களின் லட்சக்கணக்கான செய்திகளை எவ்வித அனுமதியும் இன்றி பயிற்சிக்காக பயன்படுத்தி இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. தங்களது ஏ.ஐ. சாட்பாட் கொண்டு நிறுவனங்கள் நியூயார்க் டைம்ஸ்-இன் முதலீடுகளில் இருந்து இலவசமாக பயன்பெற நினைப்பதாக மேலும் தெரிவித்துள்ளது.

    ஊடகத்துறையில் நியூயார்க் டைம்ஸ் செய்துள்ள முதலீடுகளை எவ்வித அனுமதியோ அல்லது கட்டணமோ செலுத்தாமல் இரு நிறுவனங்களும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள நினைப்பதாக நியூயார்க் டைம்ஸ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

    • ஒபன்ஏஐ நிறுவனத்தில் நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் அதிரடியாக மேற்கொள்ளப்படுகின்றன.
    • முன்னதாக ஒபன்ஏஐ சி.இ.ஒ.-வாக ட்விட்ச் நிறுவனர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    ஒபன்ஏஐ நிறுவனத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், வெளியாகும் அறிவிப்புகள் டெக் உலகில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், கடந்த ஐந்து நாட்களில் ஒபன்ஏஐ தலைமை செயல் அதிகாரியாக பணிநீக்கம் செய்யப்பட்ட சாம் ஆல்ட்மேன் இன்று (நவம்பர் 22) மீண்டும் அந்நிறுவனத்தின் சி.இ.ஒ.-வாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றது குறித்து அந்நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் சாம் ஆல்ட்மேனும் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்பது குறித்து கருத்து பதிவிட்டு இருந்தார். முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லாவும் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், சாம் ஆல்ட்மேன் மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து சத்ய நாதெல்லா தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

    அதில், "ஒபன்ஏஐ நிர்வாக குழுவில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்களை வரவேற்கிறோம். நிலையான, நன்கு விவரம் அறிந்த மற்றும் சிறப்பான நிர்வாகத்திற்கு இது முதல்படி என்பதை நாங்கள் நம்புகிறோம். ஒபன்ஏஐ தலைமை பொறுப்பை ஏற்று, அதன் குறிக்கோளை அடைவதற்கு தலைமை பொறுப்பில் இருந்து முக்கிய பங்காற்றுவது குறித்து சாம், கிரெக் மற்றும் நானும் பேச்சுவார்த்தை நடத்தினோம்."

    "உறுதியான கூட்டணியை உருவாக்கி, அடுத்த தலைமுறை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மதிப்புகளை எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு வழங்க விரும்புகிறோம்," என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

    • ஒபன்ஏஐ நிறுவனத்தில் அதிக முதலீடு செய்ய இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது.
    • தரவுகளை பயன்படுத்தியற்காக மைக்ரோசாப்ட் மீது வழக்கு தொடர எலான் மஸ்க் முடிவு.

    டுவிட்டர் பயனர்களின் தரவுகளை கொண்டு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு பயிற்சி அளித்ததாக எலான் மஸ்க் மைக்ரோசாப்ட் மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சட்டவிரோதமாக டுவிட்டர் தரவுகளை பயன்படுத்தியற்காக மைக்ரோசாப்ட் மீது வழக்கு தொடரப் போவதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

    "அவர்கள் டுவிட்டர் தரவுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவுக்கு பயிற்சி அளித்துள்ளனர். வழக்கு தொடர்வதற்கான நேரம்," என்று எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார்.

     

    வொர்ட் மற்றும் எக்சல் போன்ற சேவைகளில் சாட்ஜிபிடி சார்ந்த ஏஐ ஒருங்கிணைக்கப்பட இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஜனவரி மாத வாக்கில் அறிவித்தது. இதோடு சாட்ஜிபிடி சேவையை உருவாக்கிய ஒபன்ஏஐ நிறுவனத்தில் அதிக முதலீடு செய்ய இருப்பதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் பயன்பாட்டுக்கு வந்த சாட்ஜிபிடி சேவை உலகளவில் பேசுபொருளாக மாறியது. பலர் சாட்ஜிபிடி சேவையை புகழ்ந்தும், பலர் இதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். சாட்ஜிபிடி சேவை பயனர் சந்தேகங்களுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கிறது.

    • மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவில் 10 ஆயிரம் ஊழியர்களை நீக்குகிறது.
    • சுமார் 2.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் 5 சதவீத பேரை நீக்க வாஷிங்டனை மையமாக கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    சான்பிரான்சிஸ்கோ:

    சமீபகாலமாக பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட்டு ஊழியர்களை நீக்கி வந்தது. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை இன்று நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவில் 10 ஆயிரம் ஊழியர்களை நீக்குகிறது. சுமார் 2.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் 5 சதவீத பேரை நீக்க வாஷிங்டனை மையமாக கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    • மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சர்ஃபேஸ் லேப்டாப் விற்பனையை துவங்கி இருக்கிறது.
    • புதிய சர்ஃபேஸ் லேப்டாப் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த மாதம் சர்ஃபேஸ் லேப்டாப் 5 மற்றும் சர்ஃபேஸ் ப்ரோ 9 மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இவற்றின் இந்தியம முன்பதிவு இந்த மாத துவக்கத்தில் துவங்கியது.

    தற்போது புதிய லேப்டாப் மாடல்களின் விற்பனை இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட மல்டி-பிராண்டு ரிடெயில் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது.

    விலையை பொருத்தவரை சர்ஃபேஸ் லேப்டாப் 5 இந்திய சந்தையில் ரூ. 1 லட்சத்து 07 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சர்ஃபேஸ் ப்ரோ 9 மாடலின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 05 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 69 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 9 வாங்குவோருக்கு ரூ. 14 ஆயிரத்து 999 மதிப்புள்ள சர்ஃபேஸ் ப்ரோ கீபோர்டு (பிளாக்) இலவசமாக வழங்கப்படுகிறது. சர்ஃபேஸ் லேப்டாப் 5 வாங்குவோருக்கு ரூ. 7 ஆயிரத்து 499 மதிப்புள்ள சர்ஃபேஸ் பாப் ரெட் ஆர்க் மவுஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

    சர்ஃபேஸ் லேப்டாப் மைடல் 13.3 மற்றும் 15 இன்ச் டிஸ்ப்ளே ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது 2256x1504 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இத்துடன் ஹெச்டி கேமரா, விண்டோஸ் ஹெல்லோ வசதி உள்ளது. மேலும் டால்பி அட்மோஸ் மற்றும் டூயல் ஃபார்-ஃபீல்டு மைக்ரோபோன்களை கொண்ட ஆம்னிசோனிக் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 12th Gen கோர் i7 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் X கிராஃபிக்ஸ், 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

    மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் 9 ப்ரோ 2-இன்-1 கன்வெர்டிபில் மாடல் ஆகும். இதில் 13 இன்ச் டச் ஸ்கிரீன், 2880x1920 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 12th Gen கோர் i5 அல்லது கோர் i7 பிராசஸர், 32 ஜிபி ரேம், 1 டிபி எஸ்எஸ்டி வசதியுடன் கிடைக்கிறது. இவைதவிர மற்ற அம்சங்கள் சர்ஃபேஸ் 9 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    • மைக்ரோசாப்ட் நிறுவனம் கடைசியாக அறிமுகம் செய்த விண்டோஸ் 11 ஓ.எஸ். உலகின் பல்வேறு நாடுகளில் வெளியாக துவங்கி இருக்கிறது.
    • புது விண்டோஸ் 11 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகமானது.

    விண்டோஸ் 11 அம்சங்களில் சிலவற்றை விண்டோஸ் 10 ஓஎஸ்-இல் வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விண்டோஸ் 11 ஓஎஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கும் ப்ரிண்டிங் சார்ந்த அம்சங்கள் தான் விண்டோஸ் 10-இல் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய ப்ரிண்டிங் அம்சம் ப்ரிண்ட் செய்யும் போது பின் வழங்க இருக்கிறது. இவ்வாறு செய்யும் போது போலி கனெக்‌ஷன்கள் மற்றும் பிழைகளை தவிர்க்க முடியும். இது விண்டோஸ் 1- வெர்ஷன் 22H2 அப்டேட்டின் கீழ் வழங்கப்பட இருக்கிறது. விண்டோஸ்-இல் புது மாற்றங்களை செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. விண்டோஸ் 11 ஓஎஸ்-இல் பிரைவசி ஆடிட்டிங் பெயரில் புது அம்சம் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.


    இந்த அம்சம் மூலம் மைக்ரோபோன், கேமரா மற்றும் லொகேஷன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் செயலிகள் பற்றி அறிந்து கொள்ள முடியும். விண்டோஸ் 10 வெர்ஷன் 22H2 அப்டேட்டின் கீழ் விண்டோஸ் 11 அம்சங்கள் விண்டோஸ் 10-க்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    புது மாற்றம் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பழைய படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறு புது ஓஎஸ் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இது உண்மையாகும் பட்சத்தில் 2024 வாக்கில் விண்டோஸ் 12 ஓஎஸ் வெளியாக வேண்டும். எனினும், இது பற்றி மைக்ரோசாப்ட் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

    • மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
    • புதிதாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

    வாஷிங்டன்:

    உலகில் பெரிய நிறுவனமான மைக்ரோசாப்ட் கம்பெனியில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்போது ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. மறுசீரமைப்பு காரணமாக 1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

    இருந்த போதிலும் தொடர்ந்து புதிதாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. மற்ற நிறுவனங்களை போலவே எங்கள் நிறுவனத்திலும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து உள்ளோம் என்றும் இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் தான் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    ×