search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிராமத்தில் ஒருவர் இறந்து போனால் உறவினர்கள் கூடுவார்கள்.
    • வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதமில்லாமல் எல்லோரும் இறுதி யாத்திரையில் பங்கெடுப்பார்கள்.

    வாழும் வரை வாழ்ந்து முடித்த பிறகு வெற்றுடலை சுடுகாட்டுக்கு தூக்கி செல்ல நாலு பேர் தேவை!

    ஆனால் அந்த நாலு பேரை கூட சம்பாதித்து வைக்காததாலும், நகர்ப்புற வாழ்க்கை மாற்றத்தாலும் பிணத்தை தூக்கி செல்லவும், இறுதிச் சடங்குகள் செய்யவும் தொழில் நுட்பங்களை தேட வேண்டிய காலம் வந்திருக்கிறது.

    தொழில் ரீதியாக இதற்காக நிறுவனங்கள் வந்து விட்டன. தலைநகர் டெல்லி முதல் நாடு முழுவதும் சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த நிறுவனங்களும் லாபம் கொழிக்கும் நிறுவனங்களாக வளர்ந்து கொண்டிருக்கின்றன.

    ஒரு நிறுவனம் உறுப்பினராக சேர ரூ.37,500 கட்டணமாக வசூலிக்கிறது. ஊரார், உறவினர்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

    செத்துப்போனால் அந்த நிறுவனத்தில் இருந்து வந்து உரிய சடங்குகளை நடத்தி தகனமோ, அடக்கமோ செய்துவிடுகிறார்கள்.

    ஆன்லைனில் தொடர்பு கொண்டு பதிவு செய்தாலும் போதும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியர் என்று எந்த சமூகமாக இருந்தாலும் சரி. அந்த சமூகத்துக்கு உரிய முறையில் இறுதிச் சடங்கை செய்கிறார்கள். பின்னர் உடலை ஆம்புலன்சில் தூக்கி சென்று தகனம் செய்கிறார்கள். சாம்பலை சேகரித்து எங்கு கரைக்க வேண்டும் என்கிறோமோ அங்கு கரைக்கவும் செய்கிறார்கள்.

    உடலை எடுத்து செல்வது, பிரீசர் பாக்ஸ், அலங்காரம் செய்தல், பண்டிதர்களை ஏற்பாடு செய்தல், பிரார்த்தனை செய்தல், இரங்கல் நிகழ்ச்சி நடத்துவது, பஜனை குழுக்களை ஏற்பாடு செய்தல், உணவு, தேனீர் ஏற்பாடு செய்தல் உள்பட இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அதை சொல்லி அதற்கான கட்டணத்தை செலுத்தினால் போதும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணம் உள்ளது.

    தாய்-தந்தையரை முதியோர் இல்லங்களில் சேர்த்து விட்டு வெளிநாடுகளில் சொகுசாக வாழும் பிள்ளைகள் தாய்-தந்தை பெயரில் பணம் கட்டி உறுப்பினராக்கி விடுகிறார்கள். இந்த தகவலை முதியோர் இல்லத்திலும் பதிவு செய்து விடுகிறார்கள். இறக்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து இறுதி காரியங்களை செய்துவிட்டு வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு தகவல் தெரிவித்து விடுகிறார்கள்.

    அவர்கள் விரும்பினால் வீடியோ பதிவு செய்தும் கொடுத்து விடுகிறார்கள்.

    அதேபோல் சொந்த, பந்தம், உற்றார், உறவினர் என்ற எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டு நகர வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டவர்களும் அந்த மாதிரி கடைசி கட்டத்தில் இந்த நிறுவனங்களையே நாடுகிறார்கள்.

    ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும், உணவு, மருந்து, மளிகைப்பொருள், துணி மணி, காய்கறி என்று தேவையான எல்லாமும் வீடு தேடி வருவது போல் இப்போது இறுதிக் கடமை செய்யவும் வீடு தேடி வந்து விடுகிறார்கள்.

    இந்த மாற்றத்தை முன்னேற்றம் என்பதா...? அல்லது...?

    தாய், மகன், அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, நண்பர்கள், உறவினர்கள், ஊரார் என்ற எல்லா உறவுகளில் இருந்தும் ஒவ்வொருவரும் விலகி தனி மனிதனாகி கொண்டிருக்கிறார்கள்.

    வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை என்ற வாழ்க்கை நியதியை கூட கைவிட்டோம்.

    கிராமத்தில் ஒருவர் இறந்து போனால் உறவினர்கள் கூடுவார்கள். வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதமில்லாமல் எல்லோரும் இறுதி யாத்திரையில் பங்கெடுப்பார்கள். கண்ணீர் சிந்துவார்கள், சுமந்து செல்லும் நாலு பேர், சுற்றி செல்லும் பலர் என்று ஊரே கூடி தன்னோடு வாழ்ந்தவரை மரியாதையோடு வழியனுப்பி வைக்கும்.

    அதுதான் மனிதனாக பிறந்து வாழ்ந்ததன் அடையாளம்.

    ஆனால் பணமும், ஆடம்பரமும் மட்டுமே வாழ்க்கை என்ற தவறான முடிவால் முற்றிலும் மாறுபட்ட, சம்பந்தமில்லாத வாழ்க்கை முறையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார்கள்.

    எல்லாம் நடந்து முடிந்த பின்னே நல்லது, கெட்டது தெரிந்து என்ன லாபம்?

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளும் 2024-ஆம் ஆண்டிற்கான தொழிற்சாலை உரிமத்தினை ஆன்லைன் மூலம் வரும் 31ந்தேதிக்குள் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
    • அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தங்களது தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

    சேலம்:

    ஓசூர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் என்.சபீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளும் 2024-ஆம் ஆண்டிற்கான தொழிற்சாலை உரிமத்தினை ஆன்லைன் மூலம் வரும் 31ந்தேதிக்குள் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.

    தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தங்களது தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே தங்கள் தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்கப்பட்டு ஆன்லைன் முறையிலேயே பெற்றுக் கொள்ளலாம். இதற்காக அலுவலகம் வர வேண்டிய அவசியம் இல்லை. உரிய காலத்தில் உரிம கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளு மாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 2024ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்து கொள்ள வேண்டும்.
    • ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இைண இயக்குனர்கள் சரவணன், புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2024ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்து கொள்ள வேண்டும். புதுப்பித்து கொள்ள வேண்டிய கடைசி நாள் 31-10-2023 ஆகும். எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் https://dish.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று உரிய உரிம தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்ப ட்டுள்ளது.

    • திருமணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்க பிறப்புச்சான்றிதழ் ஆவணமாக பயன்படுத்தலாம்.
    • இதுவரை பிறப்பு சான்றிதழை பலரும் டிஜிட்டல் முறையில் பெறவில்லை.

    நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ். அதன்படி, இன்று முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது.

    ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.

    அதன்படி திருமணம்ப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்க பிறப்புச்சான்றிதழ் ஆவணமாக பயன்படுத்தலாம்.

    பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் மேற்கூறிய பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த, மசோதா நிறைவேறி வெற்றிபெற்ற நிலையில், தற்போது சட்டம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஆன்லைன் வழியாக மத்திய அரசின் தளங்களில் இந்த சான்றிதழ்களை டவுன் லோடு செய்ய முடியும். ஆதார் அட்டையை எப்படி ஆவணமாக பயன்படுத்துகிறமோ அதேபோல் இதையும் பயன்படுத்த முடியும். இதுவரை பிறப்பு சான்றிதழை பலரும் டிஜிட்டல் முறையில் பெறவில்லை.

    இதன் மூலம் வயது தொடர்பான பல்வேறு சேவைகள், தேர்விற்கு விண்ணப்பம் செய்வது போன்ற சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும்.

    • எழுத்து முறையில் தேர்வை வைக்காமல் செல்போன் வழியாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டலம் ஆமீம்புரத்தில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தற்போது அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆரம்ப பள்ளியிலும் காலாண்டு தேர்வானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு எழுத்து முறையில் தேர்வை வைக்காமல் செல்போன் வழியாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மாணவர்களுக்கு எழுத்து திறன் குறைவதோடு, செல்போன் பயன்படுத்துவதால் கண் பார்வை திறனும் பாதிக்கப்படுவதாக கூறி இன்று மாணவர்களின் பெற்றோர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆன்லைனில் குழந்தைகள் படிப்பது என்பது வேறு. ஆனால் தற்போது சாதாரண காலகட்டத்திலும் அதாவது இந்த காலாண்டு தேர்வின் போது, எழுதும் வகையில் தேர்வை நடத்தாமல் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்துகிறார்கள். இதனால் இணையதளம் முடக்கம் ஏற்படும்போது ஒரே தேர்வை 2 முதல் 3 நாட்கள் வரை மீண்டும் மீண்டும் எழுத வேண்டிய நிலை உள்ளது. மேலும் குழந்தைகளின் பார்வை திறன் குறைபடும்.

    எனவே எழுத்து முறையில் காலாண்டு தேர்வு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    • அந்த நிறுவனத்தில் 2 தவணைகளாக ரூ.50 லட்சம் பணம் கொடுத்தேன்
    • போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில் :

    வேர்கிளம்பி பூவன்கோடு பூச்சா த்தான்விளை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 52). இவர் நாகர்கோவில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நான் பூவன்கோட்டில் இயங்கி வரும் ஒரு அறக்கட்டளையில் தலைவராக உள்ளேன். பள்ளியாடி நட்டாலம் பகுதியை சேர்ந்த ஒரு வருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் டெல்லியை தலையிடமாக கொண்டு செயல்படும் ஒரு நிறுவனத்தின் கிளையை தக்கலையில் நடத்தி வருவதாக கூறினார். அந்த நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறினார்.

    இதை நம்பி நான் அந்த நிறுவனத்தில் 2 தவணைகளாக ரூ.50 லட்சம் பணம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் கூறியது போல எந்த லாபமும் கிடைக்கவில்லை. நான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன். அதற்கு ரூ.25 லட்சத்துக்கு 2 காசோலைகள் கொடுத்தார்.

    அந்த காசோலையை வங்கியில் கொடுத்து கேட்டபோது சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி விட்டார்கள். எனவே என்னிடம் பணத்தை வாங்கி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் இன்று போலீசில் சிக்கி உள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    • சேமிப்பில் 4.5 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
    • மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் பேஸ்புக் கணக்கில் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய பெண் ஒருவர், தான் வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், தான் ஓரிரு மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளேன்.

    எனவே எனது சேமிப்பில் 4.5 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். அதற்கு தாங்கள் உதவ வேண்டும் என ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் உதவிக் கேட்டுள்ளார்.

    இதனை உண்மை என நம்பி அவரும் ஒப்புக்கொண்டார். இவ்வாறு பேஸ்புக் மூலம் தலைமை ஆசிரியருக்கு நட்பு ஏற்பட்டது.

    மேலும் பார்சலில் பணம் அனுப்பி வைப்பதாக தெரிவித்து இந்திய தூதரகம், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பேசுவதாகவும் பார்சலை பெற வரி செலுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் 13 தவணைகளாக ரூ.43 லட்சத்து 90 ஆயிரத்தை அந்த பெண் பெற்றுக்கொண்டார்.

    அதன் பின் வெளிநாட்டில் இருந்து பேசிய பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. பணப்பார்சலும் வரவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபோல் புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் பிரியா. இவரின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் உங்களுடைய வங்கி கணக்குகளில் தொகை அதிகம் உள்ளது. அதற்கான காரணத்தை சொல்லாவிட்டால் உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டி உள்ளார்.

    இதனால் பயந்து போன பிரியா அவர்கள் கூறிய வங்கிகணக்கில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் அனுப்பினார். பின்னர் விசாரித்த போதுதான் ஏமாற்றப்பட்டதை பிரியா உணர்ந்தார்.

    இதுகுறித்து இருவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் கூறினர்.

    மேலும் புதுவையை சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.4 லட்சத்து 90 ஆயிரமும், மூலக் குளத்தை சேர்ந்த சத்தியா என்பவரிடம் ரூ.3 லட்சத்து 19 ஆயிரமும், வில்லியனூரை சேர்ந்த சங்கர் என்பவரிடம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரமும், பான் கார்டு அப்டேட் செய்வதாக கூறி 5 பேரிடம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரமும், ஆன்லைனில் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை உள்ளது என்ற விளம்பரத்தை நம்பி 2 பேரிடம் ரூ.85 ஆயிரமும் மோசடி நடந்துள்ளது.

    கடந்த 3 நாட்களில் மட்டும் புதுச்சேரியில் 12 பேரிடம் ஆன்லைனில் பல்வேறு வகையான நூதன முறையில் ரூ.60 லட்சம் மோசடி நடந்துள்ளது.

    இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிரமத்தை தவிர்க்கும் வகையில் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
    • தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓய்வூதியர்கள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்களில் நேர்காணல் செய்யப்படுவதால் அதிக ளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருந்து நேர்காணல் செய்வதை எளிமைப்படுத்த சிவில் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பின் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும், குடும்ப ஒய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்தி லும், பணிக்கால ஓய்வூதியம் மற்றம் குடும்ப ஓய்வூதியம் பெறுவர்கள் தாங்கள் பணி ஓய்வு பெற்ற மாதத்தி லும் நேர்காணல் செய்ய லாம்.

    அவ்வாறு நேர்காணல் செய்ய இயலாத நிலையில் குறிப்பிட்ட மாதத்திற்கு அடுத்த மாதத்தில் நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்தில் நேர்காணல் செய்யப்பட வேண்டிய ஓய்வூதியதாரர்கள் 2023-24-ம் ஆண்டிற்கு சிறப்பு நேர்வாக இந்த மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஓய்வு பெற்ற, குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட ஓய்வூதியர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

    எனவே ஓய்வூதியர்கள் தங்கள் மின்னணு வாழ் நாள் சான்றிதழை இந்திய தபால் துறை வங்கி சேவை, இ-சேவை, பொது சேவை நிறுவனம், ஓய்வூதியர் சங்கங்களின் சேவை, செல்போன் செயலி ஆகியவற்றில் மின்னணு வாழ்நாள் சான்றை பதிவு செய்து நேர்காணல் செய்து கொள்ளலாம்.

    மேலும் வாழ்நாள் சான்றிதழ் படிவத்தினை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம். நேரடியாக கருவூலத்திற்கு வந்தும் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

    இருப்பினும் ஓய்வூதி யர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம், தங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் அத்தகைய ஓய்வூதியர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணல் செய்து கொள்ள லாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒருநாள் திடீரென அந்தத் தொகை முழுவதையும் கிரிப்டோ கரன்சியாக மாற்றி ஏமாற்றுகிறார்கள்.
    • மோசடி கும்பல் வடமாநிலங்களில் இருந்து அதிகம் செயல்படுகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சியில் சமீபகாலமாக பகுதி நேர வேலை, கிரிப்டோ கரன்சி டிரேடிங் என்ற பெயர்களில் ஆன்லைன் மோசடி கும்பல் இளைஞர்களின் பணம் பறிப்பதாக திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசாருக்கு அதிக புகார்கள் வருகின்றன. இதற்கிடையே திருச்சி துவாக்குடி பெல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி இந்த மோசடி கும்பலிடம் ஒரு ரூ. 49 லட்சம் பணத்தை இழந்து தவித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த அதிகாரி மாதம் 2 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறுகிறார். மேலும் குடும்பத்திலும் நல்ல வசதி உள்ளது. அவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சில லிங்குகளை மர்ம நபர்கள் அனுப்பி உள்ளனர். அதில் கிரிப்டோ கரன்சி டிரேடிங் செய்தால் பணத்தை இரட்டிப்பு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    இதை நம்பிய அவர் முதலில் குறைந்த தொகையை முதலீடு செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது வங்கி கணக்குக்கு ரூ. 15,000 லாபமாக வந்து சேர்ந்தது. உடனே அந்த பணத்தை அவர் தனது கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டார்.

    இதனால் அவருக்கு மேலும் பணம் சம்பாதிக்கும் ஆசை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக பல்வேறு தவணையாக ஆன்லைன் மோசடி கும்பல் அனுப்பிய வங்கி கணக்குக்கு ரூ. 49 லட்சம் தொகையை செலுத்தினார். இந்த தொகைகளை அவர் முதலீடு செய்து ஒவ்வொரு முறை டிரேடிங் செய்யும் போதும் இரட்டிப்பு தொகையை திரையில் காண்பித்துள்ளனர்.

    ஆனால் அவரது வங்கி கணக்குக்கு வரவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் அந்த தொகையை மோசடி கும்பல் கிரிப்டோ கரன்சியாக வெளிநாடுகளுக்கு மாற்றி பெல் அதிகாரியை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். பின்னர் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டது.

    இதனால் அதிர்ச்சி அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் இழந்த தொகையை மீட்க முடியவில்லை.

    இதுபோன்ற தினமும் புகார்கள் வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

    ரூ. 30 ஆயிரம், 50 ஆயிரம், ரூ. ஒரு லட்சம் என அவர்கள் இழந்து நிற்கிறார்கள்.

    இந்த மோசடி கும்பல் வடமாநிலங்களில் இருந்து அதிகம் செயல்படுகிறார்கள். ஆகவே அவர்களை பிடிப்பது என்பது போலீசாருக்கு சவால் ஆனதாக உள்ளது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் தொடர்பு வைத்துக் கொண்டு மோசடி செய்யும் பணத்தை கிரிப்டோ கரன்சியாக எளிதில் மாற்றி விடுகிறார்கள்.

    இந்த மோசடி தொடர்பாக திருச்சி சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் கூறும்போது,

    முதலில் நமது செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை அல்லது கிரிப்டோ கரன்சி டிரேடிங் என்ற பெயரில் டெலிகிராம் வாயிலாகவோ வாட்ஸப் வாயிலாகவோ லிங்குகளை அனுப்புகிறார்கள். பின்னர் சில யூடியூப் வீடியோக்களை அனுப்பி சப்ஸ்கிரைப் பண்ணுங்க... லைக் பண்ணுங்க... ஷேர் பண்ணுங்க... என சொல்கிறார்கள். இதில் ஐந்தாறு டாஸ்க் வந்தவுடன் முதலீட்டு தொகைக்கு ஏற்ப ரூ.300, 600 என முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்புகிறார்கள்.

    ஓரிருமுறை கமிஷன் தொகை கொடுத்து நம்பி க்கையை ஏற்படுத்துகிறார்கள்.

    அதன் பின்னர் கமிஷன் தொகை சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்குக்கு வராது. திரையில் காண்பிக்கும் தொகையை கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு சிலர் பல லட்சங்களை தொடர்ச்சியாக முதலீடு செய்கிறார்கள். பின்னர் ஒருநாள் திடீரென அந்தத் தொகை முழுவதையும் கிரிப்டோ கரன்சியாக மாற்றி ஏமாற்றுகிறார்கள்.

    ஓரிரு முறை சொற்பத்தொகை முதலீடு செய்து லாபத்தை எடுத்துக்கொண்டு லிங்கை விட்டு வெளியேறியவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள் என்றார்.

    • பொதுமக்கள் லோன் ஆப் மூலமாக கடன் வாங்குவது, அதிகரித்து வருகிறது.
    • தலை போகும் அவசரம் என்றாலும் அவற்றில் பணம் வாங்க வேண்டாம்.

    திருப்பூர்:

    லோன் ஆப்களை நம்பி கடன் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.  சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை 

    பொதுமக்கள் லோன் ஆப் மூலமாக கடன் வாங்குவது, அதிகரித்து வருகிறது. முழு கடன் தொகையை திருப்பி செலுத்தி முடித்தாலும் அவர்கள் விடுவதில்லை.இன்னும் கடன் தொகை பாக்கி இருப்பதாக கூறி, மிரட்டி வசூல் செய்கின்றனர். வட்டி பணம் தராவிட்டால், உங்களின் வாட்ஸ் அப், பேஸ்புக் அக்கவுன்ட் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உங்க போட்டோக்களை மார்பிங் செய்து, உங்கள் மொபைல் போன் தொடர்பில் உள்ள நபர்களின் வாட்ஸ் அப் எண்களுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டி வருகின்றனர்.

    டெலி கிராம் செயலி லிங்க், சினிமா, ஓட்டல் ரிவ்யூ என்ற பெயரிலும், கமிஷன் தருவதாக பெரிய அளவில் மோசடி நடக்கிறது.சமீபத்தில் பிட் காயின் டெபாசிட் முறைகேடு தொடர்பாகவும், புகார் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.பாதிக்கப்பட்டவர்கள் ஆன்லைனில் புகார் பதிவு செய்வதில், கால தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் குற்றவாளிகளை வளைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    போலீசார் கூறும்போது, பெரும்பாலான லோன் ஆப்கள் மோசடியானவை. தலை போகும் அவசரம் என்றாலும் அவற்றில் பணம் வாங்க வேண்டாம்.

    பணம் வாங்கும் நபர்களின் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற தகவல்களை பெற்று, அதில் முறைகேடு செய்யும் வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது.

    மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.

    • ஆன்லைன் டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தி மனு
    • 46 பேரூராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 51 பேரூராட்சிகள் உள்ளன. தற்போது பேரூராட்சியில் ஆன்லைன் டெண்டர் முறையே நடைபெற்று வருகிறது. இதனை ரத்து செய்யக்கோரி அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

    இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக 51 பேரூராட்சிகளில் 46 பேரூராட்சி தலைவர்கள் சேர்ந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அனைத்து பேரூராட்சிகளிலும் ஆன்லைனில் டெண்டரை ரத்து செய்ய வேண்டும், அமர்வுப்படி உயர்த்தி தர வேண்டும், உள் குடிநீர் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் நேரு, ஆன்லைன் டெண்டரை ரத்து செய்து ரூ.10 லட்சம் வரை தளர்வு தரப்படும் என்றும், பேரூராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி ரூ.10 ஆயிரம், துணை தலைவர்களுக்கு ரூ.5 ஆயிரம், கவுன்சிலர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வீதம் தருவதற்கு பரிசீலனை செய்யப்படும் என்றும் உறுதி அளித்ததாக பேரூராட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பேரூராட்சி கூட்டமைப்புகளின் தலைவர் எட்வின் ஜோஸ், செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சி தலைவர் ஜாண் டென்சிங், உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா, நல்லூர் பேரூராட்சி தலைவி வளர்மதி கிறிஸ்டோபர் உட்பட 46 பேரூராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    • 14- வது தவணை ஊக்கத்தொகை பெற ஆன்லைனில் விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது
    • அஞ்சல் நிலையங்களை அணுகி வங்கி கணக்கு துவங்கி 14-வது தவணையை சரியாக பெற்று பயன் பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது :-

    மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 13 தவணை வழங்கப்பட்டுள்ளது.

    14- வது தவணை ஊக்கத்தொகை பெற ஆன்லைனில் விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    எனவே இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் இன்றுக்கு ள் பதிவு செய்ய வேண்டும். இதை செய்தால் தான் 14-வது தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதே போல வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் தங்களது வங்கியை தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகி வங்கி கணக்கு துவங்கி 14-வது தவணையை சரியாக பெற்று பயன் பெறலாம்.

    முதல் வழிமுறையாக ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் pmkisan.gov.in என்ற இணையத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் சரிபார்க்கலாம்.

    ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண் இணைக்காதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் திட்ட வலை தளத்தில ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து விரல் ரேகையை பதிவு செய்து சரிபார்க்கலாம்.

    இ.கே.ஒய்சி பதிவு செய்திடாத விவசாயிகள் விபரங்கள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×