search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birth certificate"

    • திருமணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்க பிறப்புச்சான்றிதழ் ஆவணமாக பயன்படுத்தலாம்.
    • இதுவரை பிறப்பு சான்றிதழை பலரும் டிஜிட்டல் முறையில் பெறவில்லை.

    நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ். அதன்படி, இன்று முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது.

    ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.

    அதன்படி திருமணம்ப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்க பிறப்புச்சான்றிதழ் ஆவணமாக பயன்படுத்தலாம்.

    பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் மேற்கூறிய பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த, மசோதா நிறைவேறி வெற்றிபெற்ற நிலையில், தற்போது சட்டம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஆன்லைன் வழியாக மத்திய அரசின் தளங்களில் இந்த சான்றிதழ்களை டவுன் லோடு செய்ய முடியும். ஆதார் அட்டையை எப்படி ஆவணமாக பயன்படுத்துகிறமோ அதேபோல் இதையும் பயன்படுத்த முடியும். இதுவரை பிறப்பு சான்றிதழை பலரும் டிஜிட்டல் முறையில் பெறவில்லை.

    இதன் மூலம் வயது தொடர்பான பல்வேறு சேவைகள், தேர்விற்கு விண்ணப்பம் செய்வது போன்ற சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும்.

    • வெளிநாட்டு கல்விக்காக ரூ.7 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றால் 0.5 சதவீதம் டி.சி.எஸ். கட்டணம்.
    • டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் நாமினி கட்டாயம்.

    * 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது.

    * நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும் போது சொத்துக்களின் புகைப்படமும் இடம் பெறுவது கட்டாயம்.

    * வெளிநாடு செல்பவர்கள் ரூ.7 லட்சத்துக்கு மேல் கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்தால் 20 சதவீதம் வரி.

    * வெளிநாட்டு கல்விக்காக ரூ.7 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றால் 0.5 சதவீதம் டி.சி.எஸ். கட்டணம்.

    * மியூச்சுவல்பண்ட் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் நாமினியை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கணக்குகள் முடக்கப்படும்.

    * டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் நாமினி கட்டாயம்.

    * பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை, சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம்.

    * தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகளில் டீசல் ஜெனரேட்டர்கள் இயக்குவதில் மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையை பின்பற்ற வேண்டும்.

    * பழனி முருகன் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை.

    * அரசு வேலைகளுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம்.

    * மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், சொத்துப்பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு ஆகியவற்றிற்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம்.

    * பிறப்பு, இறப்புகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    • பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது.
    • பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கும் புதிய மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம், 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிறப்பு சான்றிதழை அடுத்த மாதம் முதல் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை பெறவும், ஓட்டுநர் உரிமம் பெறவும் பிறப்புச் சான்றிதழை ஆவணமாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், திருமண பதிவு, கல்வி அமைப்புகளில் சேரவும் பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஒரு நபரின் பிறந்த தேதி, பிறந்த இடத்தை நிரூபிக்க ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம். எனவே, அக்டோபர் 1 முதல் கல்வி நிறுவனத்தில் சேருதல், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண், திருமணப் பதிவு மற்றும் அரசுப் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பிறப்பு சான்றிதழை ஒரே அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிபதி, மனுதாரர்களின் உண்மையான குறையை தீர்க்குமாறு மாநில அரசு வக்கீலிடம் தெரிவித்தார்.
    • வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் ஜியா பாவல், ஜஹாத். திருநங்கைகளான இவர்கள் பள்ளி படிக்கும் போதிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த திருநங்கை தம்பதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் குழந்தை பிறந்தது. ஆணாக இருந்துவந்த ஜகாத், தனது வயிற்றில் குழந்தையை சுமந்து பெற்றெடுத்தார். இதனை ஜியா பாவல் அறிவித்தார்.

    ஆனால் தங்களுக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு கோழிக்கோடு மாநகராட்சி மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் குழந்தைக்கு ஜியா பாவலை தந்தை என்றும், ஜஹாத்தை தாய் என்றும் குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில் திருநங்கை தம்பதியான ஜியா பாவல் மற்றும் ஜஹாத் ஆகிய இருவரும் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் தங்களது குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தாய்-தந்தை என்று இருப்பதற்கு பதிலாக பெற்றோர் என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க கோழிக்கோடு மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    அந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. குழந்தையின் தாய் பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஆணாக அடையாளப்படுத்தி, தற்போது சமுதாயத்தில் ஆணாக வாழ்ந்து வருவதால் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை மற்றும் தாயின் பெயரை தவிர்க்குமாறு மனுதாரர்கள் கேட்டுக்கொண்டனர்.

    மேலும் தங்களை பெற்றோர் என்று மட்டும் குறிப்பிட வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை அதிகாரிகள் மறுத்ததாகவும் கோர்ட்டில் தம்பதியினர் தெரிவித்தனர். அதனைக்கேட்ட நீதிபதி, மனுதாரர்களின் உண்மையான குறையை தீர்க்குமாறு மாநில அரசு வக்கீலிடம் தெரிவித்தார்.

    ஆனால் மனுவில் சில தொழில் நுட்ட குறை பாடுகளை அரசு வக்கீல் சுட்டிக்காட்டினார். இதையடுத்து அந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    • பிறக்கும் போது நூர் ஷெகாவத்தின் பாலினம் 'ஆண்' என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
    • திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை.

    ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் முதன்முறையாக திருநங்கைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான (பிறப்பு மற்றும் இறப்பு) பன்வர்லால் பைர்வா, ராஜஸ்தானின் முதல் திருநங்கையின் பிறப்புச் சான்றிதழை ஜெய்ப்பூரைச் சேர்ந்த நூர் ஷெகாவத்துக்கு வழங்கினார்.

    ஆண் மற்றும் பெண் பிறப்பு பதிவுகளுடன், திருநங்கைகளின் பிறப்பு பதிவுகளும் இனி மாநகராட்சி போர்ட்டலில் கிடைக்கும் என்று பன்வர்லால் பைர்வா கூறினார்.

    திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுத் திட்டமும் தொடங்கப்படும் என்று பைர்வா கூறினார்.

    பிறக்கும் போது நூர் ஷெகாவத்தின் பாலினம் 'ஆண்' என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

    மாற்றுத்திறனாளிகள், ஆண்கள் மற்றும் பெண்களின் பதிவேடுகளுடன் திருநங்கைகளின் பதிவுகளை அரசு பராமரிக்க இந்த முயற்சி உதவும் என ஆங்கில வழிப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, திருநங்கைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் நூர் ஷெகாவத் கூறினார்.

    நூர் ஷெகாவத் இப்போது திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க அதிகாரிகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.

    குழந்தைகள் விற்பனை வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிறப்பு சான்றிதழ் தவறாக கொடுத்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார். #namakkalcollector
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவது தொடர்பாக சமீபத்தில் வாட்ஸ்-அப் ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில், குழந்தைகளின் நிறம், ஆரோக்கியத்தை வைத்து விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும், அதற்கு பிறப்பு சான்றிதழ் பெற ரூ.70 ஆயிரம் வரை செலவாகும் என்பது போலவும் உரையாடல் அமைந்து இருந்தது.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் ராசிபுரத்தை சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற பெண் செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி (வயது 50), அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் 5 புரோக்கர்கள் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 14 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதற்கிடையே விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் கொல்லிமலையில் வாங்கப்பட்டு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து கொல்லிமலை மற்றும் ராசிபுரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, போலியாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்க விரும்புவோர், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம். அந்த வகையில் கடந்த ஆண்டு நமது மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு 4 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் குழந்தை வேண்டாம் என்று சொல்பவர்கள் அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் முறையாக விட்டு செல்ல வேண்டும்.

    நமது மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இல்லங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டு வருகின்றன. விதிமுறைகளை பின்பற்றாத 5 இல்லங்கள் ஏற்கனவே மூடப்பட்டு விட்டன. எனவே அந்த இல்லங்களுக்கும் குழந்தைகள் விற்பனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது குழந்தைகள் விற்பனை இருதரப்பு பெற்றோர் ஒப்புதலுடன் தான் நடைபெற்று இருப்பதாக தெரிய வருகிறது. இவ்வழக்கை முன் உதாரணமாக எடுத்து கொண்டு பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்.

    விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளுக்கு போலியாக பிறப்பு சான்றிதழ் பெறப்பட்டு இருப்பதாகவும் கைதானவர்கள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விசாரணை நடத்த சென்னையில் இருந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வர உள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அரசு அலுவலர்களுக்கு பிறப்பு சான்றிதழ் தவறாக கொடுத்தால் வேலை போய் விடும் என தெரிவித்து உள்ளோம். பிறப்பு சான்றிதழ் தவறாக கொடுத்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஓரிரு நாட்களில் ராசிபுரம் போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்று, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #namakkalcollector
    ×