என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிறப்பு சான்றிதழ்களில் பெயர்களை சேர்க்க அவகாசம் நீட்டிப்பு- அதிகாரி தகவல்
    X

    பிறப்பு சான்றிதழ்களில் பெயர்களை சேர்க்க அவகாசம் நீட்டிப்பு- அதிகாரி தகவல்

    • பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ததில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் அதில் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.
    • சிறப்பு வாய்ப்பாக பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

    சென்னை:

    பிறப்பு சான்றிதழ்களில் பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ப.செந்தில்குமார் பொது சுகாதாரத் துறை இயக்குனருக்கும், அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொதுவாகவே பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ததில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் அதில் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

    அதன் பின்னர் அத்தகைய வாய்ப்பு வழங்கப்படாது. இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன்னதாக பிறந்தவர்களும், அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

    தற்போது இறுதி வாய்ப்பாக வருகிற செப்டம்பர் 26-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அனைவரும் பெயர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    இதுதொடர்பான பரிந்துரைகளை பிறப்பு, இறப்பு பதிவு தலைமை பதிவாளர் அரசுக்கு அனுப்பியிருந்தார். அதனை பரிசீலித்த அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×