search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திரா"

    • வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட்டது.
    • 2018-ம் ஆண்டு ஜன ஜாக்ருதி என்ற புதிய கட்சியை தொடங்கினார் கொத்தபள்ளி கீதா

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராம கோடீஸ்வர ராவ் (வயது55). இவரது மனைவி கொத்தபள்ளி கீதா (50). இவருக்கு 27 வயது இருக்கும்போது அங்குள்ள கிராம வங்கியில் வேலை கிடைத்தது. 2 ஆண்டுகள் வங்கியில் வேலை செய்த கீதா குரூப்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

    இதையடுத்து பல்வேறு இடங்களில் உதவி கலெக்டராக வேலை செய்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.பி பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.பி. ஆக இருந்தபோது தனியார் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதன் பேரில் வங்கியில் ரூ.42 கோடி கடன் வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த வில்லை.

    இந்த நிலையில் 2018-ம் ஆண்டு ஜன ஜாக்ருதி என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதன் பின்னர் பா.ஜ.க.வில் இணைந்து அப்பகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட்டது. முன்னாள் எம்.பி. கீதா, அவரது கணவர் ராம கோடீஸ்வரராவ், வங்கி அதிகாரிகள் ஜெயப்பிரகாஷ், அரவிந்த் ஆகியோர் மீது ஆந்திர மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கீதா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதில் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்தது நிரூபணமானதால் முன்னாள் எம்.பி.கீதா, அவரது கணவர் ராம கோடீஸ்வரராவ், வங்கி அதிகாரிகள் ஜெய பிரகாஷ், அரவிந்த் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து 4 பேரும் உஸ்மானிய ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். உடல் பரிசோதனை முடிந்து 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு திட்டங்களுக்கான நிதிகளை விடுவிப்பது குறித்து பிரதமருடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை.
    • போலவரம் நீர்ப்பாசனத் திட்டத்தின் மதிப்பு ரூ.55,548 கோடி என திருத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. அப்போது போலவரம் நீர்ப்பாசன திட்டத்தின் திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கு விரைவாக ஒப்புதல் அளிக்கும்படி பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

    இதுதவிர விஜயநகரம் மாவட்டம் போகபுரம் விமான நிலையம், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மற்றம் பல்வேறு மத்திய அரசு திட்டங்களுக்கான நிதிகளை விடுவிப்பது குறித்தும் பிரதமருடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.

    ஆந்திராவில் 2.91 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கவும், 960 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், தொழிற்சாலைகள் மற்றும் 540 கிராமங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும், கோதாவரி ஆற்றில் போலவரம் நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்த ரூ.35,000 கோடி செலவாகும் என ஆந்திர அரசு முதலில் மதிப்பிட்டிருந்தது. ஆனால், அதிக செலவு ஏற்படும் என்பதால் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றப் பணிகளை நிறைவேற்ற மாநில அரசால் முடியவில்லை.

    எனவே, நீர்ப்பாசனத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.55,548 கோடி என திருத்தப்பட்டது. இந்த திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • இந்திய அளவில் பெரும் சவால்கள் எழுந்துள்ள நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்களை பலரும் எதிர்பார்க்கின்றனர்.
    • பாஜக. அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 -வது மாநில மாநாடு கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் 24 -வது தேசிய மாநாடு வரும் அக்டோபர் 14 முதல் 18 -ந்தேதி வரையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக அனைத்து மாநிலங்களிலும் மாநில மாநாடுகளை நடத்தி வருகிறோம். இதன்படி திருப்பூரில் தற்போது தமிழ்நாடு மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்குப் பின்னர் பல மாநிலங்களிலும் மாநாடுகள் நடைபெறவுள்ளது.

    கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த மாநாடுகள் எல்லாம் மிகுந்த அரசியல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் பெரும் சவால்கள் எழுந்துள்ள நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்கள் என்ன என்பதை பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொருத்தவரையில் மத்திய பாஜக. அரசு மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளை பொருளாதாரம், அரசியல் சமூக தளத்தில் பின்பற்றி வருகிறது. பாஜக. அரசு அப்பட்டமாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. உலக அளவில் அனைத்து கருத்துக்கணிப்புகளும் சொல்வது இந்தியாவில் வறுமை வளர்ந்து கொண்டிருப்பதுடன், பசி வளர்ந்து மக்கள் உணவற்ற நிலையில் தவிக்கின்றனர். மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தை அனுபவித்து வருகின்றனர். ஊடகங்கள் உள்பட மக்களின் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள பொதுத்துறை தனியார் மயமாக்குகிறது. அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிக்களுக்கு ஆதரவான அனைத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. தனியார் துறையில் இதுவரையில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவில்லை. இதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. இதன் காரணமாகத்தான் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவது சமூக நீதி கொள்கைக்கு எதிரானது என்று நாம் குற்றம் சொல்லுகிறோம். பொருளாதாரம் என்று வரும்போது விவசாயத்துறையைப் பார்க்க வேண்டும். இந்த விவசாயிகள் ஒரு ஆண்டு போராடி 700 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றுள்ளது.

    இந்த சட்டங்களை திரும்பப்பெற்ற பின்னர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் விலை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர் காப்பீடு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவில்லை. விவசாயிகள் மீண்டும் கிளர்ச்சியில் இறங்குவோம் என்று எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் வங்கித்துறை, எல்ஐசி, விமான நிலையங்கள், துறைமுகங்கள் தனியார் மயமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாநில உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசு பறித்துவருகிறது. கல்வி மாநில பட்டியலில் இடம் பெற வேண்டிய நிலையில் கல்விக் கொள்கைகளைத் தீர்மானிப்பது மத்திய அரசு மாநிலங்களைக் கலந்து ஆலோசிப்பது இல்லை. இதன் காரணமாகத்தான் புதிய கல்விக் கொள்கை எல்லோராலும் எதிர்க்கப்படக்கூடிய ஒன்றாக வந்துள்ளது. தேசிய கல்விக்கொள்கையானது கல்வியை தனியார்மயமாகவும், வாணிபமயமாகவும் மாற்றுகிறது.

    இந்தியாவை ஒற்றைப்பரிமாண நாடாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருகிறது. பல மொழிகளையும், பல பரிமாணங்களையும் கொண்ட நாடாகும். இந்தியாவில் சமூக, மத நல்லிணக்கம், சமூக நீதி கொள்கைகள், கூட்டாட்சி நெறிமுறைகள் எல்லாம் தகர்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அகில இந்திய அளவில் பாஜக.முறியடிக்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டம், இந்திய ஜனநாயகம், நாட்டின் பன்முகத் தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் வரும் 2024 -ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. முறியடிக்கப்பட வேண்டும் என்றார். இந்த சந்திப்பின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.ரவி உடனிருந்தார்.

    விசாரணைக்கு வந்தவர்களை திட்டியதாக கூறி 150 பேர் கொண்ட கும்பல் காவல் நிலையத்துக்குள் நுழைந்து போலீசாரை கடுமையாக தாக்கிய சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
    அமராவதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ராப்பூரை சேர்ந்த மூவர் அதே பகுதியை சேர்ந்த இன்னொருவரிடம் பணம் பெற்று கொண்டு திரும்ப வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்த நபர், ராப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

    இந்த புகாரின் அடிப்படையில் பணம் பெற்றதாக கூறப்படும் நபர் மற்றும் இரண்டு பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த எஸ்.ஐ. லட்சுமண்ராவ், ஜாதி பெயரை கூறி திட்டியதோடு அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அவர் தங்களுக்கு ஆதரவாக கிராம மக்களையும் திரட்டிக் கொண்டு காவல்நிலையத்திற்குள் அதிரடியாக புகுந்து எஸ்.ஐ லட்சுமண்ராவை கடுமையாக தாக்கியது. காவல் நிலையத்திற்குள் உள்ள சிறைக்குள் புகுந்து தப்ப முயன்ற எஸ்ஐ லட்சுமண்ராவை வெளியே இழுத்து போட்டு அடித்து உதைத்தனர். தடுக்க முயன்ற போலீசாரையும் தாக்கினர்.

    இந்த தாக்குதலில் எஸ்.ஐ லஷ்மண்ராவ் மற்றும் போலீசார் 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக ராப்பூர் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்துள்ளனர். பொது மக்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த எஸ்.ஐ லஷ்மண்ராவுக்கு தலையில் 8 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சுடுகாட்டில் கட்டிட பணிகள் மேற்கொள்ள தொழிலாளர்கள் அச்சப்பட்ட நிலையில், அவர்களின் அச்சத்தை போக்க தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ சுடுகாட்டில் உண்டு, அங்கேயே கட்டில் போட்டு தூங்கியுள்ளார்.
    அமராவதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகோல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் நிம்மல ராம நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர், தனது தொகுதியில் உள்ள பாலகோல் புறநகர் பகுதியில் இருக்கும் சுடுகாடு ஒன்றில் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டு அங்கேயே கட்டில் போட்டு தூங்கியுள்ளார்.

    அந்த சுடுகாடு கடந்த பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாமல் சிதிலமடைந்து இருந்துள்ளது. இதனை அடுத்து, ராம நாயுடுவின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு சுடுகாட்டை புரணமைக்க ரூ.3 கோடி ஒதுக்கியது. ஆனாலும், இந்த திட்டத்திற்கு யாருமே டெண்டர் எடுக்கவில்லை.

    திட்டம் இழுபறியாக கிடந்த நிலையில், ஒரு ஒப்பந்தக்காரர் முன்வந்தார். பணிகள் தொடங்கிய நிலையில், அங்கு பேய், பிசாசு உலவுவதாக வந்த வதந்தியை அடுத்து தொழிலாளர்கள் யாரும் பணி செய்ய முன்வரவில்லை. இதனால், கடுப்பான எம்.எல்.ஏ ராம நாயுடு, நேற்று முன்தினம் கட்டிலுடன் சுடுகாட்டுக்கு வருகை தந்தார்.

    அங்கேயே இரவு உணவை முடித்த அவர், இரவு முழுவதும் அங்கேயே தூங்கினார். அவருடன் ஒரே ஒரு உதவியாளர் உடனிருந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் தனது வீட்டுக்கு ராம நாயுடு புறப்பட்டுச்சென்றார். அவரது இந்த அதிரடிக்கு பலனாக 50 தொழிலாளர்கள் வேலை செய்ய தொடங்கினர்.

    இதனால், மகிழ்ச்சி அடைந்த ராம நாயுடு, “பேய், பிசாசு பயத்தை போக்கவே இங்கு தூங்கினேன். இனி மேலும் பலர் பயமில்லாமல் வேலை செய்ய வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து வசதிகளும் கொண்ட நவீன சுடுகாடாக இது மாற்றப்படும்.” என கூறியவர், கொசுக்கடி மட்டும் அதிகமாக இருந்தது என புகார் தெரிவித்துள்ளார். 
    ×