search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய மாநாடு"

    • பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் 24 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நேரிலும், காணொலி வாயிலாகவும் பங்கேற்க உள்ளனர்.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணாலி வாயிலாக தலைமை உரையாற்றுகிறார்.

    சென்னை:

    சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு டெல்லி இந்தியா கேட் அருகில் இன்று மாலை 4.30 முதல் 7 மணிவரை நடை பெறுகிறது.

    இந்த மாநாட்டில், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் மற்றும் 24 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நேரிலும், காணொலி வாயிலாகவும் பங்கேற்க உள்ளனர்.

    இந்த மாநாட்டில் சமூக நீதிக்கான அகில இந்தியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பாளரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான வி.ஈஸ்வரய்யா வரவேற்கிறார். ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான பி.வில்சன் முதன்மை உரையாற்றுகிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணாலி வாயிலாக தலைமை உரையாற்றுகிறார்.

    சிறப்பு விருந்தினர்களாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரபிரதேச மாநில எதிர்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான பரூக் அப்துல்லா, அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரைன், தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் மகாராஷ்டிரா துணை முதல்வருமான சஜன் சந்திரகாந்த் புஜ்பால், ஆம் ஆத்மி கட்சி சஞ்சய் சிங், பீகார் ராஷ்ட்ரிய ஜனதாதள எம்.பி. மனோஜ் குமார் ஜா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான இ.டி.முகமது பஷீர், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டாக்டர் கே.கேசவ ராவ், ராஷ்ட்ரிய சமாஜ்பக் தேசியத் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சருமான மகாதேவ் ஜன்கர், அசாமைச் சேர்ந்த எம்.பி. நபா குமார் சாரானியா, அரியானா லோக்தந்திர சுரக் ஷா கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ராஜ் குமார் சயினி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    மேலும் இந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., மனிதநேய மக்கள்கட்சி தலைவர் எம்.எச். ஜவஹிருல்லா எம்.எல்.ஏ., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., தவாக தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டை இணையதளம் மூலம் (https://bit.ly/aifsojconference) நேரலையில் காணலாம்

    • கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் தேசிய மாநாடு நடந்தது.
    • மாநாட்டில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தமிழ்நாடு பர்மசூட்டிகல் சயின்சஸ் அறக்கட்டளை, இந்தியன் பர்மசூட்டிகல் அசோசியேசன்ஸ் தமிழ்நாடு மற்றும் டானிப்பா டிரஸ்ட் ஆதரவுடன் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் 2 நாள் தேசிய மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் நடந்தது.

    கல்லூரியின் தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். தாளாளர் டாக்டர்.அறிவழகி, செயலாளர் எஸ்.சசி ஆனந்த், இயக்குநர் எஸ். அர்ஜுன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார்.

    மதுரை மண்டல மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் என்.சி. ரவிச்சந்திரன், விருதுநகர் மண்டல மருந்துகள் கட்டுப்பாட்டு துணை இயக்குநர் ஆர்.இளங்கோ, தலைமை விருந்தினர்களாகவும், டானிப்பா டிரஸ்டின் செயலாளர் யூசுப், ஐகாரஸ் ஹெல்த்கேர் நிறுவன இயக்குநர் ஆர்.இளங்கோ கவுரவ விருந்தினர்களாகவும் பங்கேற்று பேசினர்.

    ஜெனெக்சியா பயோசெர்வின் ஆராய்ச்சி விஞ்ஞானி முகேஷ் சுப்பிரமணியன், மைலான் லெபாரட்டரிஸ் நிறுவனத்தின் உற்பத்தி இணை இயக்குநர் பிரசாத் பழனிச்சாமி, ஐகாரஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் இயக்குநர் ஆனந்த் செல்வம், பார்மா கியூ.எஸ். எல்.எல்.பி-ன் குவாலிட்டி சிஸ்டெம்ஸ் அன்ட் ஆடிட் இயக்குநர் சிவக்குமார், ஈன்நெக்ஸ்ட் பயோசயின்சஸ் நிறுவனத்தின் இயக்குநர்-தலைவர் தட்சணா மூர்த்தி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

    பார்ம் டி முதல் பேட்ச் மாணவர்களுக்கு படிப்பு முடிந்ததற்கான சான்றிதழ்களை முனைவர் க. ஸ்ரீதரன் வழங்கினார். நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டாளர் சாரங்கபாணி பங்கேற்று பேசினார்.

    மாநாட்டில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அமைப்பு செயலாளர்-பேராசிரியர் எஸ்.ஆர். செந்தில் குமார் நன்றி கூறினார். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கன்வீனர்-பேராசிரியர் அன்புராஜ் உள்ளிட்ட பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • உயிர் மருத்துவ துறை சார்பில், 5-வது தேசிய மாநாடு நடைபெற்றது.
    • டாக்டர் அன்புச்செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் உயிர் மருத்துவ துறை சார்பில், 5-வது தேசிய மாநாடு நடைபெற்றது.

    கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் தலைமை தாங்கி மாநாட்டினை தொடங்கி வைத்தார். ஓசூர் காவேரி மருத்துவமனையின் காது, மூக்கு மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவர் டாக்டர் அன்புச்செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மருத்துவ நோக்கங்களுக்காக

    பயோமெடிக்கல் உபகரணங் களை தயாரிப் பதன் முக்கியத்துவம் மற்றும் உயிர் மருத்துவ பொறியாளர்கள், மருத்துவர்களின் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக்குகிறார்கள் என்பதை பற்றி விளக்கினார். மாநாட்டின் போது உயிர் மருத்துவத்தில் நுண்ணறிவு அமைப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டு

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை துறைத் தலைவர் டாக்டர்.உதய சூரியா மற்றும் பேராசிரியர் கணேஷ் பாபு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    இதில், பங்கேற்ற மாணவர்கள் தங்களது புதுமையான கருத்துக்களை முன்வைத்தனர். மேலும், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மாநாட்டில்,கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் தேசிய மாநாடு இன்று மாலை தொடங்குகிறது,
    • வருகிற 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம்

    முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரில் காமராஜர் பவுண்டேசன் ஆப் இந்தியா என்ற பெயரில் அமைப்பு இயங்கி வருகிறது. இதன் நிறுவனத் தலைவரும், கேரள முன்னாள் அமைச்சருமான நீல லோகிததாசன் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் அமைப்பு சார்பில் 46-வது தேசிய மாநாடு ராமநாதபுரத்தில் இன்று மாலை (16-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இன்றைய அரசியலுக்கு காமராஜரின் அரசியல் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் நடவடிக்கைகள் அவசியம் என்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், காமராஜரின் புகழை பரப்புதல் மற்றும் கல்வி மருத்துவ முகாம், மருத்துவ சேவை மற்றும் இன்றைய இளைய தலைமுறையினரிடையே காமராஜரின் புகழை பரப்பும் நோக்கத்திலும் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.

    காமராஜ் பவுண்டேசன் ஆப் இந்தியா தேசிய செயலாளர் சேதுராமன், மாநாட்டு ஏற்பாட்டு குழு செயலாளர் நற்றமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் குகன், ஒருங்கிணைப்பாளர் சம்சுல் கபீர், இணைச் செயலாளர் அப்துல் பாசித், முருகேசன், அபுதாகிர், முஜம்மில், மருதுபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • இந்திய அளவில் பெரும் சவால்கள் எழுந்துள்ள நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்களை பலரும் எதிர்பார்க்கின்றனர்.
    • பாஜக. அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 -வது மாநில மாநாடு கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் 24 -வது தேசிய மாநாடு வரும் அக்டோபர் 14 முதல் 18 -ந்தேதி வரையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக அனைத்து மாநிலங்களிலும் மாநில மாநாடுகளை நடத்தி வருகிறோம். இதன்படி திருப்பூரில் தற்போது தமிழ்நாடு மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்குப் பின்னர் பல மாநிலங்களிலும் மாநாடுகள் நடைபெறவுள்ளது.

    கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த மாநாடுகள் எல்லாம் மிகுந்த அரசியல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் பெரும் சவால்கள் எழுந்துள்ள நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்கள் என்ன என்பதை பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொருத்தவரையில் மத்திய பாஜக. அரசு மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளை பொருளாதாரம், அரசியல் சமூக தளத்தில் பின்பற்றி வருகிறது. பாஜக. அரசு அப்பட்டமாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. உலக அளவில் அனைத்து கருத்துக்கணிப்புகளும் சொல்வது இந்தியாவில் வறுமை வளர்ந்து கொண்டிருப்பதுடன், பசி வளர்ந்து மக்கள் உணவற்ற நிலையில் தவிக்கின்றனர். மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தை அனுபவித்து வருகின்றனர். ஊடகங்கள் உள்பட மக்களின் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள பொதுத்துறை தனியார் மயமாக்குகிறது. அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிக்களுக்கு ஆதரவான அனைத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. தனியார் துறையில் இதுவரையில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவில்லை. இதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. இதன் காரணமாகத்தான் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவது சமூக நீதி கொள்கைக்கு எதிரானது என்று நாம் குற்றம் சொல்லுகிறோம். பொருளாதாரம் என்று வரும்போது விவசாயத்துறையைப் பார்க்க வேண்டும். இந்த விவசாயிகள் ஒரு ஆண்டு போராடி 700 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றுள்ளது.

    இந்த சட்டங்களை திரும்பப்பெற்ற பின்னர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் விலை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர் காப்பீடு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவில்லை. விவசாயிகள் மீண்டும் கிளர்ச்சியில் இறங்குவோம் என்று எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் வங்கித்துறை, எல்ஐசி, விமான நிலையங்கள், துறைமுகங்கள் தனியார் மயமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாநில உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசு பறித்துவருகிறது. கல்வி மாநில பட்டியலில் இடம் பெற வேண்டிய நிலையில் கல்விக் கொள்கைகளைத் தீர்மானிப்பது மத்திய அரசு மாநிலங்களைக் கலந்து ஆலோசிப்பது இல்லை. இதன் காரணமாகத்தான் புதிய கல்விக் கொள்கை எல்லோராலும் எதிர்க்கப்படக்கூடிய ஒன்றாக வந்துள்ளது. தேசிய கல்விக்கொள்கையானது கல்வியை தனியார்மயமாகவும், வாணிபமயமாகவும் மாற்றுகிறது.

    இந்தியாவை ஒற்றைப்பரிமாண நாடாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருகிறது. பல மொழிகளையும், பல பரிமாணங்களையும் கொண்ட நாடாகும். இந்தியாவில் சமூக, மத நல்லிணக்கம், சமூக நீதி கொள்கைகள், கூட்டாட்சி நெறிமுறைகள் எல்லாம் தகர்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அகில இந்திய அளவில் பாஜக.முறியடிக்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டம், இந்திய ஜனநாயகம், நாட்டின் பன்முகத் தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் வரும் 2024 -ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. முறியடிக்கப்பட வேண்டும் என்றார். இந்த சந்திப்பின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.ரவி உடனிருந்தார்.

    ×