என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடன் மோசடி"
- வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட்டது.
- 2018-ம் ஆண்டு ஜன ஜாக்ருதி என்ற புதிய கட்சியை தொடங்கினார் கொத்தபள்ளி கீதா
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராம கோடீஸ்வர ராவ் (வயது55). இவரது மனைவி கொத்தபள்ளி கீதா (50). இவருக்கு 27 வயது இருக்கும்போது அங்குள்ள கிராம வங்கியில் வேலை கிடைத்தது. 2 ஆண்டுகள் வங்கியில் வேலை செய்த கீதா குரூப்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.
இதையடுத்து பல்வேறு இடங்களில் உதவி கலெக்டராக வேலை செய்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.பி பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.பி. ஆக இருந்தபோது தனியார் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதன் பேரில் வங்கியில் ரூ.42 கோடி கடன் வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த வில்லை.
இந்த நிலையில் 2018-ம் ஆண்டு ஜன ஜாக்ருதி என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதன் பின்னர் பா.ஜ.க.வில் இணைந்து அப்பகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட்டது. முன்னாள் எம்.பி. கீதா, அவரது கணவர் ராம கோடீஸ்வரராவ், வங்கி அதிகாரிகள் ஜெயப்பிரகாஷ், அரவிந்த் ஆகியோர் மீது ஆந்திர மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கீதா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதில் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்தது நிரூபணமானதால் முன்னாள் எம்.பி.கீதா, அவரது கணவர் ராம கோடீஸ்வரராவ், வங்கி அதிகாரிகள் ஜெய பிரகாஷ், அரவிந்த் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து 4 பேரும் உஸ்மானிய ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். உடல் பரிசோதனை முடிந்து 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- மனைவி பெயரில் ரூ.18 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை திருநகரை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் பரவை மீனாட்சி மில் காலனியைச் சேர்ந்த வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவரை சென்னைக்கு கடத்திச் சென்று விட்டார். அவர் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு, சென்னை மதனந்தபுரம், கிருஷ்ணா நகரில் குடும்பம் நடத்தி வந்தார்.
அப்போது பழனியப்பன் மனைவியின் பெயரில் ரூ.18 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
அதனை அவர் திரும்பி செலுத்தவில்லை. இந்த நிலையில் பழனியப்பன் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்து உள்ளார்.
மேலும் பழனியப்பன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்