search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் ஆய்வு"

    • டேன் டீ நிறுவனத்தில் புதிதாக சேரும் பணியாளா்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன.
    • ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் வீடுகளை காலி செய்யுமாறு நிா்வாகம் தெரிவித்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் ஓய்வுபெறும் டேன் டீ தொழிலாளா்களுக்கு நடுவட்டம் பேரூராட்சியில் வீடு கட்டுவதற்கு தோ்வு செய்யப்பட்ட இடத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மாவட்ட கலெக்டர் சா.ப.அம்ரித் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

    டேன் டீ நிறுவனத்தில் புதிதாக சேரும் பணியாளா்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன.அதனால், ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் வீடுகளை காலி செய்யுமாறு நிா்வாகம் தெரிவித்துள்ளது.

    மக்களவை உறுப்பினா் நகா்ப்புற மேம்பாட்டு வாரியம் சாா்பில் ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததன் பேரில் இந்த ஏற்பாடு நடைபெறுகிறது.

    இந்நிகழ்ச்சியில், டேன் டீ மேலாண்மை இயக்குநா் (பொ) வெங்கடேஷ், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநா் கோவிந்த் ராவ், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநரும் இண்கோ சா்வ் முதன்மைச் செயல் அலுவலா் மோனிகா ராணா, வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, டேன் டீ பொது மேலாளா் அக்பா், வட்டாட்சியா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

    • தீபாவளி பண்டிகை முடிந்து ஊருக்கு திரும்பும் பயணிகள் கூட்டத்தால் திருச்சி பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் நிரம்பி வழிந்தன
    • இதற்கிடையே பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்பட பஸ்கள் இயக்கப்படுகிறதா என்பது குறித்துஆய்வு நடத்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று இரவு 11 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார்

    திருச்சி:

    தீபாவளி பண்டிகை கடந்த 24-ந்தேதி கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் எந்தவித அச்சமும், இடையூறும், சிக்கலும் இன்றி கொண்டாடிடும் வகையில் அரசு தரப்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செம்மையாக செய்து தரப்பட்டு இருந்தன.

    இதில் வெளியூர்களில் வசிப்பவர்கள், வேலை நிமித்தம் தங்கியிருப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

    கூடுதல் கட்டணத்தை மையமாக கொண்டு செயல்பட்ட தனியார் ஆம்னி பஸ்களுக்கு கடிவாளம் போடும் வகையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு பயணிகளுக்கு நிம்மதியை அளித்தார்.

    கடந்த 21-ந்தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களும், அடுத்ததாக தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் ஊர் திரும்புவர்களின் வசதிக்காக மேலும் 3 நாட்களும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இதில் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி சொந்த ஊர்களில் இருந்து தங்களது பணியிட ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள்.

    இதற்கிடையே பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்பட பஸ்கள் இயக்கப்படுகிறதா என்பது குறித்துஆய்வு நடத்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று இரவு 11 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார். அங்கு டிக்கெட் வழங்கும் இடம், சென்னை பஸ்கள் நிறுத்தப்படும் பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    பயணிகளிடம் பஸ்கள் இயக்கப்படுவது மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சர் வந்ததை அறிந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்களிடம் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொடர்ந்து 3 நாட்கள் வரும் 30-ந்தேதி பஸ்கள் அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

    இரவு நேரம் என்றும் பாராமல் 11.30 மணி வரை ஆய்வு நடத்திய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பயணிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அதிகமாக இருந்தபோதிலும் சிரமமின்றி பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணித்தனர்.

    இதேபோல் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் அனைத்து பிளாட்பாரங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னை செல்லும் அனைத்து ரெயில்களிலும் முண்டியடித்து ஏறி இடம் பிடித்தனர்.

    மொத்தத்தில் தமிழகத்தின் மத்திய மாவட்டமான திருச்சி தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிவிட்டு மீண்டும் ஊர் திரும்பும் பயணிகள் கூட்டத்தால் சற்றே திணறியது.

    • மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
    • மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் அதிகாரி கள் உடனிருந்தனர்.

    மதுரை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொது மக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்து திரும்பி செல்லும் பொது மக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் சிறப்பு பஸ்கள் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.

    அங்குள்ள மதுரை கோட்ட முன்பதிவு விசா ரணை மையம் மற்றும் அரசு விரைவு போக்கு வரத்து கழக முன்பதிவு விசாரணை மையங்களிலும் அமைச்சர் ஆய்வு செய்தார்.குறிப்பாக, முன்பதிவு செய்துள்ள பயணிகளிடம் பஸ் வசதிகள்குறித்துஆய்வு செய்தார். பயணிகளிடம் பஸ் வசதிகள் குறித்து கருத்து களையும் கேட்டறிந்தார்.

    அமைச்சரின் இந்த ஆய்வின் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் அதிகாரி கள் உடனிருந்தனர்.

    • மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.
    • அதிகாரிகளிடம் திட்டங்கள் தொடர்பான குறைகளை கேட்டறிந்தார்

    கோவை

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மத்திய அரசினால் நிதியுதவி அளிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் மத்திய அரசினால் நிதியுதவி வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாகவும், அதன் வளர்ச்சிகள் தொடர்பாகவும் அரசு துறை அதிகாரிகளிடம் மத்திய இணை அமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா கேட்டறிந்தார்.

    பின்னர் அதிகாரிகளிடம் திட்டங்கள் தொடர்பான குறைகளை கேட்டறிந்தார். மேலும் இலங்கை அகதிகள் முகாம் தொடர்பாக அதில் உள்ள குறைகள் குறித்து கேட்டறிந்தார். இதில் கலெக்டர் சமீரன், பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதைதொடர்ந்து இணை அமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா உக்கடம் வாலங்குளம், ஆர்.எஸ்.புரம் டி.பி ரோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    • சிவகிரி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சந்தைமேடு வாரச்ச ந்தையில் அபிவிருத்தி பணிகள் ரூ.4 கோடியே 78 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.
    • இந்த பணிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சந்தைமேடு வாரச்ச ந்தையில் அபிவிருத்தி பணிகள் ரூ.4 கோடியே 78 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத், துணைத் தலைவர் கோபால், செயல் அலுவலர் சாத்தூர் கண்ணன்,

    தி.மு.க . மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், மாவட்ட துணை செயலாளர் செந்தில், கொடுமுடி மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன்,

    ஒன்றிய பிரதிநிதி கோபிநாத், செயற்பொ றியாளர் செந்தில்குமார் மற்றும் கவுன்சிலர்கள் தனபால், ரேவதி நடராஜ், நதியா கவுரிசங்கர், சந்தராதேவி பாபுராஜா, பெருமாள் மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது.
    • கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் பாடந்தொரை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவை பார்வையிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலைகள் மற்றும் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

    இதேபோன்று கூடலூர் 27-வது மைல் சனீஸ்வரன் கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து நடுகூடலூர் வரை நிலத்தில் விரிசல்கள் உண்டாகி பொதுமக்களின் வீடுகளும் பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வசிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று கூடலூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் பாடந்தொரை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவை பார்வையிட்டார்.

    அப்போது, வரும் காலங்களில் மண் சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்பு கற்களுடன் கூடிய கம்பிவலை பொருத்த உத்தரவிட்டார். தொடர்ந்து 27-வது மைல் பகுதியில் விரிசல் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உரிய நடவடிக்கை அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து குறைகளை தெரிவித்தனர்.

    அத்றகு, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். ஆய்வின்போது வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், கலெக்டர் அம்ரித், தலைமை பொறியாளர்கள் பாலமுருகன், சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர்கள் சரவணன், கண்ணன், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வம், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் குழந்தை ராஜ் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வழிபாடு செய்வதற்கு நேற்று இரவு வருகை தந்தார்.

    ராமேசுவரம்

    தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வழிபாடு செய்வதற்கு நேற்று இரவு வருகை தந்தார்.

    ராமேசுவரம் வந்த அமைச்சரை தி.மு.க. சார்பில் நகர் மன்ற முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன் வரவேற்றார். இன்று அதிகாலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனுஷ்கோடி கடல் பகுதியில் சிறப்பு பூஜை செய்தார்.

    அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் அமைத்துள்ள 22 புனிதத் தீர்த்தங்களில் நீராடி, பின்னர் ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

    கோவிலுக்கு வந்த அமைச்சரை ராமேசுவரம் நகர் மன்ற தலைவர் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் நாசர்கான் வரவேற்றார். அதன் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று கல்வித்திறன் மற்றும் பள்ளி கட்டிடம் குறித்து ஆய்வு செய்தார்.

    முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம், மண்டம் ஊராட்சி ஒன்றியம், தங்கச்சிமடம் ஊராட்சியில் உள்ள மெய்யம்புளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இல்லம் தேடி கல்வி மையத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளின் கல்வித் திறன் குறித்து ஆய்வு செய்தார்.

    • பாடாலூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டார்.
    • உணவுப் பொருள் சேமிப்பு அறை, சமையலறை மற்றும் உணவருந்தும் கூடம், விடுதியில் குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்பது குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், விடுதிகளை ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    ஆலத்தூர் ஒன்றியம், பாடாலூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டார். தொடர்ந்து பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதி, களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ்,

    அடிப்படை வசதிகள், கழிப்பறைகள், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அரசால் வழங்கப்பட்டுள்ள பொருள்கள் பதிவேடுகளில் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து உணவுப் பொருள் சேமிப்பு அறை, சமையலறை மற்றும் உணவருந்தும் கூடம், விடுதியில் குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்பது குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஆதிதிராவிடர் நல ஆணையர் சோ. மதுமதி, மாவட்ட வருவாய் அலுவலர் நா. அங்கையற்கண்ணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பால்பாண்டி, வருவாய்க் கோட்டாட்சியர் நிறைமதி, தாட்கோ மேலாளர் ஜஹாங்கீர் பாட்ஷா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


    • ஓலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.
    • மக்கள் பிரதிநிதிகள் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, ஓலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான்மா தாந்திர ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ. சீதாபதி சொக்கலிங்கம், யூனியன் தலைவர், சொக்கலிங்கம், துணை தலைவர் ராஜாராம், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில் மக்கள் பிரதிநிதிகள் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.அதிகாரிகள் மக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    • தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தோஷ நிவர்த்தி பூஜைக்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
    • திருவெண்காடு ஊராட்சியில் தேரோடும் வீதி, மடவிளாக வீதி, உள்ளிட்ட பகுதியில் ரூ.3 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுவதை, அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற நவக்கிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமான சுவேதாரண்யேஸ்வர ஸ்வாமி கோயில் உள்ளது. இப்பகுதிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தோஷ நிவர்த்தி பூஜைக்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி கோயிலில் நான்கு வீதிகளில் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு தேரோடும் நான்கு வீதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் திருவெண்காடு ஊராட்சியில் தேரோடும் வீதி, மடவிளாக வீதி, உள்ளிட்ட பகுதியில் ரூ.3 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுவதை, அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

    சாலையின் தரத்தினை சோதித்து ஆய்வு செய்தார்.பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரியிடம் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்ஷினி, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, ராமலிங்கம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் நிவேதா.முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், செல்ல சேது ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில், ஒப்பந்ததாரர்கள் பழனி, அகோரம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 26-ந்தேதி முதல்வர் திருச்சி வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்
    • தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவுற்று உள்ள நிலையில் புதிய தவணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்

    திருச்சி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 26-ந்தேதி திருச்சி வருகை தருகிறார். அன்று திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.387.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கதவணையை திறந்து வைக்க உள்ளார்.

    ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த பழைய அணை உடைந்து விட்ட காரணத்தால் புதிய அணை கட்டப்பட்டு வந்தது. தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவுற்று உள்ள நிலையில் புதிய தவணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.

    இதையடுத்து தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு முக்கொம்பு மேலணையில் இன்று நேரில் பார்வையிட்டு முதல்வர் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா. பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் சௌந்தரபாண்டியன், தியாகராஜன், எம். பழனியாண்டி, நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர் வேட்டைச்செல்வம், செயற்பொறியாளர்கள் கீதா, மணிமோகன் ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • கோழிக்கழிவுகள் அதிகமாக தேங்கி வருவதால் ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
    • கிராமங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

    தாராபுரம்

    தாராபுரத்தை அடுத்த நஞ்சுண்டாபுரம், காளிபாளையம் பகுதிகளில் முட்டைக் கோழிகளை உற்பத்தி செய்யும் தனியாருக்கு சொந்தமான 5-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் கடந்த 4 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இதனால் கோழிக்கழிவுகள் அதிகமாக தேங்கி வருவதால் ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்கள் அரசுக்கு புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் பலர் கிராமத்தை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு சென்று விட்டதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இது பற்றிய தகவல் அறிந்த தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பிரச்சினைக்கு காரணமான நஞ்சுண்டாபுரம் அரசு ஆரம்பப்பள்ளி சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தார்.

    அப்போது கிராம மக்கள் கோழி பண்ணையில் இருந்து பரவும் ஈக்களால் தொடரும் தங்களது அவல நிலை குறித்தும், அதனால் பரவி வரும் நோய்த்தொற்று குறித்தும் புகார்களை கூறினர். உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வரும் கோழிப்பண்ணைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தங்கள் கிராமங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 

    ×