search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People's Grievances"

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டமனுக்கள் மீது உடனடி நடவடிக்கை கலெக்டர் பழனி அதிரடி.

    விழுப்புரம்,:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டார். மேலும் இதில் தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பழனி அறிவுறுத்தினார்.பின்னர் இந்தகூட்டத்தில் சுமார் 414 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

    இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சித்ரா விஜயன் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, கூட்டுறவு இணை பதிவாளர் நளீனா, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி.) விஸ்வநாதன், உதவி ஆணையர் (கலால்) சிவா, உதவி இயக்குநர், நில அளவைகள் மற்றும் பதிவேடுகள் துறை சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.
    • மக்கள் பிரதிநிதிகள் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, ஓலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான்மா தாந்திர ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ. சீதாபதி சொக்கலிங்கம், யூனியன் தலைவர், சொக்கலிங்கம், துணை தலைவர் ராஜாராம், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில் மக்கள் பிரதிநிதிகள் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.அதிகாரிகள் மக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    ×