search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டமனுக்கள் மீது உடனடி நடவடிக்கை கலெக்டர் பழனி அதிரடி.
    X

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர், .

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டமனுக்கள் மீது உடனடி நடவடிக்கை கலெக்டர் பழனி அதிரடி.

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டமனுக்கள் மீது உடனடி நடவடிக்கை கலெக்டர் பழனி அதிரடி.

    விழுப்புரம்,:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டார். மேலும் இதில் தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பழனி அறிவுறுத்தினார்.பின்னர் இந்தகூட்டத்தில் சுமார் 414 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

    இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சித்ரா விஜயன் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, கூட்டுறவு இணை பதிவாளர் நளீனா, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி.) விஸ்வநாதன், உதவி ஆணையர் (கலால்) சிவா, உதவி இயக்குநர், நில அளவைகள் மற்றும் பதிவேடுகள் துறை சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×