search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமதி"

    • வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
    • தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - 

    தீபாவளி நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்து வார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதி கர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.  இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • அரசியல் கட்சி ஊா்வலமாக இல்லாமல் கட்டுப்பாடு உள்ள அணிவகுப்பாக அந்த ஊா்வலம் நடைபெறும்.
    • தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அரசு தரப்பில் உள்நோக்கத்துடன் இடையூறு செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். ஊா்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமியன்று ஆா்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் நிறுவன நாளும், இந்நாட்டின் வெற்றி திருநாளுமாக கொண்டாடப்படும் விதமாக விஜயதசமி நாளில் ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலம் கடந்த 98 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    அரசியல் கட்சி ஊா்வலமாக இல்லாமல் கட்டுப்பாடு உள்ள அணிவகுப்பாக அந்த ஊா்வலம் நடைபெறும். தனிநபரை குறிப்பிட்ட வாழ்க, ஒழிக கோஷங்கள் எதுவும் எழுப்பப்படாது. சீருடை அணிந்த தன்னாா்வலா்களால் மக்களிடையே கட்டுப்பாடு, தேசபக்தி, ஒற்றுமை, ஒழுங்கு போன்ற நற்சிந்தனையை ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடைபெறும்.

    கேரளம், புதுச்சேரி உள்பட எல்லா மாநிலங்களிலும் எந்த நிபந்தனைகளும் இன்றி ஊா்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியும் அமைதியாக உற்சாகமாக நடைபெற்றது. எந்த மாநிலத்திலும் இல்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னை தமிழகத்தில் இருக்கிறது என தமிழக அரசு கருதுவது திமுக., அரசின் ஆளுமை தன்மையில் உள்ள குறைபாடாகத்தான் தெரிகிறது.

    அதே சமயம் தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலத்தில் எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அரசு தரப்பில் உள்நோக்கத்துடன் இடையூறு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஊா்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தும் தமிழகஅரசு செயப்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். இது ஜனநாயக ஆட்சி முறைக்கு எதிரானதாகும்.

    ஆகவே, தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அரசு காலதாமதமின்றி அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செப்டிக் டேங்க் கழிவுநீரினை திறந்த வெளியிலோ, நீர்நிலைகளிலோ, இதர பகுதிகளிலோ சுத்திகரிக்கப்படாமல் விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
    • பணியாளர்களை உள்ளே இறக்கி பணி மேற்கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சிக்கான கழிவுநீர் மேலாண்மை முறைபடுத்துதல் சட்டம் 2022-ஐ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி செப்டிக் டேங்க் கழிவுநீரினை திறந்த வெளியிலோ, நீர்நிலைகளிலோ, இதர பகுதிகளிலோ சுத்திகரிக்கப்படாமல் விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை அடுத்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கண்ட துறையின் அரசாணை வெளியிடப்பட்டதில் திருப்பூர் மாநகர பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் கழிவுநீர் வாகனங்கள் திருப்பூர் மாநகராட்சியில் பதிவு செய்து, உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். வாகனங்களின் தினசரி செயல்பாட்டினை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தில் மேற்கண்ட கருவியினை பொருத்திக்கொள்வது கட்டாயமாகும். மேலும் மாநகராட்சி அனுமதி பெறாத வாகனங்கள் 30.6.2023 முதல் மாநகராட்சி எல்லைக்குள் இயக்க அனுமதிக்கப்படமாட்டாது. தவறும் பட்சத்தில் மேற்படி அனுமதி பெறாத வாகனங்கள் மாநகராட்சிகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருப்பூர் மாநகராட்சி, பல்லடம் மற்றும் திருமுருகன்பூண்டி நகராட்சி எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவுநீரினை திருப்பூர் தெற்கு ரோட்டரி மின் மயானம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரேற்று நிலையத்தில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் மட்டுமே கழிவுநீரினை விட வேண்டும். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை இயந்திரங்களின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

    பணியாளர்களை உள்ளே இறக்கி பணி மேற்கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.மேலும், மாநகராட்சி மைய அலுவலகத்தில் கழிவுநீர் மேலாண்மை திட்டம் மற்றும் பாதாளசாக்கடை திட்டங்களுக்கென்று "14420" என்ற கட்டணமில்லா தொலைபேசி அழைப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் ஏற்படும் கழிவுநீர் கால்வாய்களில் எற்படும் அடைப்புகள் மற்றும் பாதாள சாக்கடை அடைப்புகள் தொடர்பான புகார்கள் இவ்வழைப்பு மையத்தை தொடர்பு கொண்டு தங்கள் பதிவுகள் மற்றும் புகார்களை பதிவு செய்து கொள்ளவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கசடு கழிவுநீர் சுத்தம் செய்ய பெறப்படும் அழைப்புகள் இம்மாநகராட்சியில் பதிவு பெற்ற கழிவுநீர் வாகன உரிமையாளர்களுக்கு உடனடியாக தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இப்பணிகளில் ஈடுபடும் கள பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி அவர்களுக்கு காப்பீட்டு வசதியும் செய்து தருவது சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் பொறுப்பாகும். வாகனங்கள் கழிவுநீரேற்று நிலைய வளாகத்திற்குள் தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் பொது மக்கள் தங்கள் சந்தேகங்களை இம்மாநகராட்சி மைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 14420 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெளிவுபடுத்தி க்கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பெருஞ்சாணி அணை 70 அடியை எட்டியது
    • மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் வேகமாக நிரம்பியது.

    மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. சிற்றாறு அணை நிரம்பி யதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற் றப்பட்டது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் காரணமாக கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் கடந்த 10 நாட்களாக அருவியில் குளிப்ப தற்கு தடை விதிக்கப் பட்டு இருந்தது. இந்த நிலை யில் கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்துள்ளது. இதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் சிற்றாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    அணையிலிருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் படிப் படியாக குறைந்து வருகிறது. திற்பரப்பு அருவி யிலும் ஏற்பட்ட வெள்ளப்பெ ருக்கு குறைந்து மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அணையில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருவதை யடுத்து 10 நாட்களுக்கு பிறகு குளிப்ப தற்கு விதிக்கப்பட்டி ருந்த தடை நீக்கப்பட்டது.

    இன்று அருவியில் குளிப்ப தற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மானோர் அருவியில் குளிப்ப தற்கு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளிய லிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வருவதையடுத்து பொதுப் பணித்துறை அதிகா ரிகள் அணையின் நீர்மட் டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.69 அடியாக உள்ளது. அணைக்கு 610 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 230 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 70 அடியை எட்டியது. அணைக்கு 449 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி நிரம்பி வழி கிறது.

    முக்கடல் அணை நீர்மட்டம் 24.20 அடியாக உள்ளது. நாளைக்குள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நாகர்கோவில் நகர மக்களுக்கு புத்தன் அணையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை சப்ளை செய்து வருகிறார்கள். முக்கடல் அணை நிரம்பி வருவதையடுத்து முக்கடல் தண்ணீரை சப்ளை செய்வ தற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    • வன உரிமை சட்டப்படி பாரம்பரியமாக எங்கெல்லாம், தங்கி மாடுகளை மேய்த்தார்களோ, அங்கெல்லாம் தங்கி மேய்ப்பதற்கு சட்டப்படி உரிமை உள்ளது.
    • கடந்த 5 ஆண்டு காலமாக மாடுகளை மேய்த்து வருகிறோம்.

    உடுமலை:

    உடுமலை மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோட்டாட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம், மாவடப்பு , காட்டுப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர்கள், பாரம்பரியமாக வறட்சியான காலங்களில், ஆழியார் அணைக்குள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை கொண்டு சென்று பட்டி அமைத்து அங்கேயே தங்கி மேய்ப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.

    நடப்பாண்டு 3 மாதத்திற்கு முன் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஆழியார் அணைக்கரையில் மாட்டுப்பட்டி அமைத்து அங்கேயே தங்கி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் மாடுகளை மேய்த்து வருகின்றனர். மழை அதிகம் பெய்து அணைக்கு நீர் வந்தால், குடியிருப்பு பகுதியில் தீவனப்புல் வளர்ந்து விட்டால் மாடுகளை திரும்ப கொண்டு வந்து விடுவார்கள்.இந்நிலையில் வனத்துறையைச் சேர்ந்தவர்கள், மாடுகளை மேய்க்கக்கூடாது என கூறி வருகின்றனர்.

    இதற்கு முன் இதே போல் பிரச்சினை ஏற்பட்ட போது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் தலையிட்டு, வன உரிமை சட்டப்படி பாரம்பரியமாக எங்கெல்லாம், தங்கி மாடுகளை மேய்த்தார்களோ, அங்கெல்லாம் தங்கி மேய்ப்பதற்கு சட்டப்படி உரிமை உள்ளது.எனவே மலைவாழ் மக்கள் ஆழியார் அணையில் மாடுகளை மேய்க்க அனுமதியை பெற்றுக்கொடுத்தார். அதற்கு பின் கடந்த 5 ஆண்டு காலமாக மாடுகளை மேய்த்து வருகிறோம்.

    அணையில் மாடுகளை மேய்க்க வரும் போது, தாடக நாச்சியம்மன் சுவாமிக்கு நேர்ந்து சாமி கிடா விட்டு வளர்ப்பது வழக்கம். திரும்ப செல்லும்போது கிடா வெட்டி சாமி கும்பிட்டு விட்டுச்செல்வார்கள்.அதற்கும் தடை விதிக்கின்றனர். எனவே, கோட்டாட்சியர் தலையிட்டு, பாரம்பரியமாக மாடுகளை மேய்க்கும் மலைவாழ் மக்கள் உரிமையை பாதுகாத்து, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது.
    • ,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் மாவட்ட நிர்வாகம் ஆய்வுமேற்கொள்ள உள்ளது

    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் சமீப காலமாக வெடிபொருள் மற்றும் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் சேமிப்பு இடங்களில், வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசு விற்பனை மற்றும் வெடிபொருட்கள் இருப்பு ஆகியவற்றை வரன்முறைப்படுத்தி உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம்ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக ,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் மாவட்ட நிர்வாகம் ஆய்வுமேற்கொள்ள உள்ளது.

    இந்த ஆய்வின்போது, அரசிடமிருந்து உரிய அனுமதியோ, உரிமமோ பெறாம ல்வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசு விற்பனை மற்றும் வெடிபொருட்கள் இருப்பு வைத்தல் ஆகியவற்றில் பொதுமக்கள் எவரேனும் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் அந்த நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வெடிபொரு ள் மற்றும் பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள், அரசு பொது இ-சேவை மையத்திற்கு உரியஆவணங்களுடன் சென்று இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • நவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி மலையில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்.
    • இந்து சமய அற நிலைய துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சதுரகிரி சுந்தரமகாலிங் கம் மலை கோவிலில் உள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு ஏழூர் சாலியர் சமூகம் சார்பில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வரு கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேக மலை புலிகள் காப்பக மாக அறிவிக்கப்பட்ட பின் கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் வழிபாடு நடத்து வதற்கு வனத்துறை பல் வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

    இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா அக்டோபர் 15 முதல் 24-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. நவராத்திரி திருவிழா ஏற் பாடுகள் குறித்து சுந்தர பாண்டியம் ஏழூர் சாலியர் சமூக நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.

    அதில் 10 நாள் நடை பெறும் நவராத்திரி திரு விழாவில் கடைசி 3 நாட்கள் இரவில் மலை கோயிலில் தங்கி வழிபாடு நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். மேலும் ஒரு ஊருக்கு 50 பேர் வீதம் மொத்தம் ஏழு ஊர்களுக்கு மொத்தம் 350 பேர் தங்கு வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறை மற்றும் இந்து சமய அற நிலைய துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், தி.மு.க. நிர்வாகி ராஜேஷ் மற்றும் பலர் அங்கு திரண்டு இருந்தனர்.
    • வருங்காலங்களில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுவோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் மார்க்கெட் அருகே ஏராளமான கடைகள் இருந்து வருகின்றன. இதில் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் சுமதி ரங்கநாதன் பழக்கடையும் உள்ளது. தி.மு.க. கவுன்சிலர் சுமதி ரங்கநாதனின் கடை ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி கடலூர் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி தலைமையிலான ஊழியர்கள் ஜே.சி.பி. மூலம் இடிப்பதற்காக இன்று காலையில் சென்றனர். தி.மு.க. கவுன்சிலர் சுமதி ரங்கநாதனுக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், மகேஸ்வரி விஜயகுமார், பாரூக் அலி, கர்ணன், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், தி.மு.க. நிர்வாகி ராஜேஷ் மற்றும் பலர் அங்கு திரண்டு இருந்தனர். கடையை இடிப்பதற்காக வந்த நகரமைப்பு அலுவலர் முரளியிடம், மஞ்சக்குப்பம் சாலையானது தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மாநகராட்சி சார்பில் கடை ஆக்கிரமிப்பில் உள்ளதாக எப்படி கூறுகிறீர்கள்? இடிப்பதற்கு யார் உங்களுக்கு அனுமதி அளித்தனர்? ஒரு சிலருக்கு ஆதரவாக மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறும் கடையை இடிப்ப தற்கு அனுமதிக்க மாட்டோம் என கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

    தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதேவியை செல்போனில் தொடர்பு கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் வந்தது குறித்து தெரிவித்தனர். உடனடியாக உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதேவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளுக்கு விரைவில் நோட்டீஸ் வழங்கி இடிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். குறிப்பிட்ட கடைகளை மட்டும் இடிக்க மாட்டோம். ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்பில் இருக்கும் இடங்களை கண்டறிந்து அகற்றப்பட உள்ளோம். தற்போது இந்த நடவடி க்கையை நெடுஞ்சாலைத் துறை எடுக்கவில்லை. வருங்காலங்களில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுவோம் என திட்டவ ட்டமாக தெரிவித்தார். அப்போது அங்கு இருந்த தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடிப்பதற்கான உள்நோக்கம் என்ன? அதுவும் ஒரு கடையை மட்டும் இடிப்பதற்கு ஏன் வந்து உள்ளீர்கள்? என்று மீண்டும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். மேலும் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் மாநகராட்சி யை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என கடும் எச்சரிக்கையும் விடுத்தனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் ஆளும் தி.மு.க. கவுன்சிலர் கடையை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் உள்ளதாவது;-

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்ட எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அதன்படி 4.9.2023 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் இணையதள முகவரியில் விண்ணப்ப பதிவு செய்யலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எஞ்சிய அனு மதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு உதவி இயக்குநர், வட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், எண்.56/ஏ, தாட்கோ வளாகம், அரசு மருத்துவமனை சாலை, விழுப்புரம் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • போக்கு வரத்தை ஒழுங்கு படுத்துதல் முறையாக கடை பிடிக்க வேண்டும்.
    • ஒலி பெருக்கி உரிமம் அனுமதி பெற வேண்டும்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வின்போது, பொது அமைதி, பொது பாதுகாப்பு, போக்கு வரத்தை ஒழுங்கு படுத்துதல் முறையாக கடை பிடிக்க வேண்டும். விநா யகர் சிலையை நிறுவ விரும்பும் எந்த ஒரு அமைப் பாளரும் பரிந்துரைக்கப் பட்ட படிவத்தில் முறையே வருவாய் கோட்டாட்சியர், துணை கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். சிலை நிறுவும் இடத்தின் நில உரிமையாளரின் சம்மத கடிதம், சிலை நிறுவும் இடம் பொது இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைகள் அல்லது சம்பந்தப்பட்ட துறையிடம் தடையில்லா சான்று பெறப்பட வேண்டும்.

    ஒலி பெருக்கி பயன் படுத்தும் உரிமமானது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அலுவலரிடமிருந்து ஒலி பெருக்கி உரிமம் அனுமதி பெற வேண்டும். ஒலி பெருக்கியினை பயன் படுத்தும்போது ஒலியின் அளவு பரிந்துரைக்கப்பட்ட டெசிபல் அளவு வரம்பினை மிகாமல் பயன்படுத்த வேண்டும். சிலை அமைப்பா ளர்கள் தீப்பற்றக்கூடிய பொருட்களை கட்டு மானத்திற்கு பயன்படுத்து வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தற்காலிக கட்ட மைப்புக்கள் பந்தல்களில் எளிதில் உள்ளே நுழையவும், வெளியேறும் வழிகளை அமைத்தல் மிக அவசியம். தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளிடமிருந்து தடை யில்லா சான்று பெற்று சிலையை நிறுவ வேண்டும். மின்சாரம் வழங்குவதற்கான ஆதாரத்தைக் குறிக்கும் கடிதம் மற்றும் மின்சாரம் தற்காலிகமாக வழங்கப்பட்ட தற்கான ஆதாரம் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெறிபிடித்த தெரு நாய் ஒன்று பொதுமக்களை கடித்தது.
    • அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார்,சந்தை மேடு, களவாய் கூட்டு ரோடு ஆகிய பகுதிகளில் வெறிபிடித்த தெரு நாய் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்,முதியோர் உள்ளிட்ட பொதுமக்களை கடித்ததில் ஆதிலட்சுமி (வயது 50) சக்திவேல் (35), சாதனா( 14), மகாதேவன் (65), ஆகாஷ் (22) நவீன்குமார் (21) உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவ ர்கள் செஞ்சி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர். ஒரே நாய் கடித்ததில் பொதுமக்கள் பாதிக்க ப்பட்டு அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • 9 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்த சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.
    • எவ்வித பாதிப்பும் இன்றி கற்றல், கற்பித்தல் பணிகள் நடக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

    திருப்பூர்:

    பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்று செயல்படும் தனியார் கல்லூரிகளில் 9 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்த சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.

    கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை அதிகம் உள்ள பாடப்பிரிவுகளை துவங்க அனுமதி கோருவதை போன்று சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்தவும் அனுமதி கோருவது வழக்கம். அதன்படி 9 கல்லூரிகளில் இருந்து சில பாடப்பிரிவுகளை நிறுத்த அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி உரிய ஆய்வுகள் மேற்கொண்டு 21 பாடப்பிரிவுகளை நிறுத்த பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.

    இதுகுறித்து, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், தனியார் கல்லூரிகளில், 9 கல்லூரிகளில் இருந்து 21 பாடப்பிரிவுகள் நிறுத்த அனுமதி கோரியிருந்தனர்.கணிதம், பி.காம்., ஆங்கிலம், எலக்ட்ரானிக்ஸ், வரலாறு, கேட்டரிங் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெற்று இருந்தன.

    மாணவர்கள் சேர்க்கை இல்லை என்பதால் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தற்போது படிக்கும் மாணவர்கள் முடிக்கும் வரை எவ்வித பாதிப்பும் இன்றி கற்றல், கற்பித்தல் பணிகள் நடக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    ×