search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plot sections"

    • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் உள்ளதாவது;-

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்ட எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அதன்படி 4.9.2023 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் இணையதள முகவரியில் விண்ணப்ப பதிவு செய்யலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எஞ்சிய அனு மதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு உதவி இயக்குநர், வட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், எண்.56/ஏ, தாட்கோ வளாகம், அரசு மருத்துவமனை சாலை, விழுப்புரம் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    ×