search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி மலையில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்
    X

    நவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி மலையில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்

    • நவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி மலையில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்.
    • இந்து சமய அற நிலைய துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சதுரகிரி சுந்தரமகாலிங் கம் மலை கோவிலில் உள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு ஏழூர் சாலியர் சமூகம் சார்பில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வரு கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேக மலை புலிகள் காப்பக மாக அறிவிக்கப்பட்ட பின் கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் வழிபாடு நடத்து வதற்கு வனத்துறை பல் வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

    இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா அக்டோபர் 15 முதல் 24-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. நவராத்திரி திருவிழா ஏற் பாடுகள் குறித்து சுந்தர பாண்டியம் ஏழூர் சாலியர் சமூக நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.

    அதில் 10 நாள் நடை பெறும் நவராத்திரி திரு விழாவில் கடைசி 3 நாட்கள் இரவில் மலை கோயிலில் தங்கி வழிபாடு நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். மேலும் ஒரு ஊருக்கு 50 பேர் வீதம் மொத்தம் ஏழு ஊர்களுக்கு மொத்தம் 350 பேர் தங்கு வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறை மற்றும் இந்து சமய அற நிலைய துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×