search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிய ஆவணங்கள்"

    • வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது.
    • ,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் மாவட்ட நிர்வாகம் ஆய்வுமேற்கொள்ள உள்ளது

    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் சமீப காலமாக வெடிபொருள் மற்றும் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் சேமிப்பு இடங்களில், வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசு விற்பனை மற்றும் வெடிபொருட்கள் இருப்பு ஆகியவற்றை வரன்முறைப்படுத்தி உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம்ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக ,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் மாவட்ட நிர்வாகம் ஆய்வுமேற்கொள்ள உள்ளது.

    இந்த ஆய்வின்போது, அரசிடமிருந்து உரிய அனுமதியோ, உரிமமோ பெறாம ல்வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசு விற்பனை மற்றும் வெடிபொருட்கள் இருப்பு வைத்தல் ஆகியவற்றில் பொதுமக்கள் எவரேனும் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் அந்த நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வெடிபொரு ள் மற்றும் பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள், அரசு பொது இ-சேவை மையத்திற்கு உரியஆவணங்களுடன் சென்று இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்ப டுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உத விக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    விண்ணப்பத்துடன் தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம், மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் கல்விக் கட்டணங் கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவ ணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    இத்தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×