search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thambidurai"

    பா.ஜ.க.வுடன் நாங்கள் அரசு ரீதியான உறவு மட்டுமே வைத்துள்ளோம். கூட்டணி என்பது கிடையாது என்று தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார். #thambidurai #bjp #admk

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு எருதுபட்டியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க.வுடன் நாங்கள் அரசு ரீதியான உறவு மட்டுமே வைத்துள்ளோம். கூட்டணி என்பது கிடையாது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து இருந்தால் ஜி.எஸ்.டி. முத்தலாக் ஆகிய சட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்க மாட்டோம்.

    ஆனால் தி.மு.க.தான் எப்படியாவது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க துடிக்கிறது. அதற்காகத்தான் அமித் ஷாவை அழைத்து வர திட்டமிட்டனர்.

    அ.தி.மு.க.வில் கருத்து சுதந்திரம் உள்ளது. நான் பேசுவது என்னுடைய சொந்த கருத்து. அ.தி.மு.க. 2016-ம் ஆண்டு தேர்தலில் தனித்து தான் போட்டியிட்டது, கூட்டணி வைத்து அல்ல. ஜெயலலிதா வழியை தான் பின்பற்றி உள்ளோம். கூட்டணி குறித்து பேசுவதற்கு இது நேரமல்ல.


    ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக எந்த சட்டச்சிக்கலும் இல்லை. ஆகையால் ஆளுனர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார். இதை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம்.

    துமிழகத்தில் மின் தட்டுப்பாடு என்பது இல்லை. நிலக்கரியை கையிருப்பு வைப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் மக்களவை துணை சபாநாயகர்என்ற முறையில் நானும் மத்திய அரசிடம் பேசியுள்ளேன்.

    அ.தி.மு.க. சட்ட விதிகள் திருத்தம் தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி இரட்டை இலை சின்னம், கொடி மற்றும் அ.தி.மு.க. ஆகியவை எங்களிடம் உள்ளது. அந்த நிலை எப்போதும் தொடரும். தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #bjp #admk

    மத்திய அரசை எதிர்த்து போராட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயங்குகிறார் என்று பாராளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை கூறினார். #Thambidurai #MKStalin
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் குறை களை கேட்டறிந்தார். அப்போது அணியாப்பூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேரறிவாளர், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை பொறுத்தவரை அரசின் முடிவை ஆளுனர் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் நடத்திய பாரத் பந்தில் தி.மு.க. பங்கேற்றும் பிசுபிசுத்து போனது. காரணம் மத்திய அரசை எதிர்த்து போராட மு.க.ஸ்டாலின் தயங்குகிறார்.



    பாரத ரத்னா வேண்டுமா? பாரத் பந்த் வேண்டுமா? என்றால் பாரத ரத்னா கலைஞருக்கு தேவைப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வந்த பின் மாநில அரசு நிதிப்பற்றாக்குறையால் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது.

    ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருக்கிறது என்றால் தேர்தல் காரணமாக குறைக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு மத்திய அரசு நிதி அளிக்கும். ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டி நிதியை தராமல் வஞ்சித்து வருகிறது. இந்தநிலையில் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தால் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை வரும் என்பதால் விலை குறைக்க வாய்ப்பில்லை. இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #MKStalin

    மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. சதி திட்டம் தீட்டி வருவதாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #thambidurai #dmk #admk
    கரூர்:

    பழைய ஜெயங்கொண்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசின் செயல்பாட்டை அ.தி.மு.க. கண்டிக்கிறது. பா.ஜ.க. அரசின் கையாலாகாத தனமே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம்.

    முந்தைய காங்கிரஸ் அரசு, தற்போதைய பா.ஜ.க. அரசின் தவறான கொள்கையால் தான் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க.-பா.ஜ.க. ரகசிய உடன்பாடு உறவு வைத்து வருகிறது. இதனால் இருவரும் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்து வருகின்றனர். குட்கா விவகாரத்தில் தேவையில்லாமல் அமைச்சரை ராஜினாமா செய்ய வேண்டும் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

    சி.பி.ஐ., வருமான வரி சோதனை என எந்த அச்சுறுத்தல்களுக்கும் அ.தி.மு.க. அரசு பயப்படாது. ஆளுங்கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சோதனை நடத்துவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தி.மு.க.வுடன் கூட்டணி சேர தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. சதி திட்டம் தீட்டி வருகிறது.

    கேள்வி:- ஜெயலலிதா இருக்கும் போது தமிழக அமைச்சர்கள் தவறு செய்தால் உடனடியாக அமைச்சர்களை நீக்கி விடுவாரே?

    ப: ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது. ஜெயலலிதாவின் அரசியல் நிலைப்பாடு வேறு. தற்போது உள்ளவர்களின் ஆட்சி நிலைப்பாடு வேறு.

    கே: குட்கா ஊழல் விசாரணையில் ஜார்ஜ் ஊழல் நடந்தது உண்மை, என்னை வேண்டுமென்றே சிக்க வைத்துவிட்டனர் என கூறியுள்ளாரே?

    ப: ஜார்ஜ், பதவியில் இருக்கும் போது சொல்லி இருக்கலாமே? இப்போது, கடிதம் எழுதியிருந்தேன் என கூறுவதை ஏற்க முடியுமா?

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #dmk #admk #centralgovernment
    மு.க.ஸ்டாலினால் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த முடியாது, அந்த சக்தியும் அவருக்கு கிடையாது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். #Thambidurai #MKStalin
    கரூர்:

    கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இந்தியாவிலேயே தரமானதாக மாற்ற முயற்சி செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    இதில் நர்சிங் கல்லூரி, ஆயுர்வேத கல்லூரி போன்றவற்றை கொண்டு வந்து ஹெல்த் சிட்டியாக மாற்ற உள்ளோம்.



    மு.க.ஸ்டாலின் ஒரு மேடை பேச்சாளர் போன்று பேசி உள்ளார். அவர் பொறுப்பாக பேசியதாக தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் தனது முயற்சியால், திறமையால் தலைவர் பதவிக்கு வந்ததாகவும் தெரியவில்லை. அவர் தலைவராக பதவி ஏற்றதை வாரிசு அரசியலாகத்தான் பார்க்க முடியும். மூத்தவர் (அழகிரி) இருக்கும் போது இளையவருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது.

    கலைஞரின் தகுதி, பேச்சாற்றல் ஆகியவை தனக்கு இல்லை என்று மு.க.ஸ்டாலினே ஒப்புக்கொண்டுள்ளார். மு.க.ஸ்டாலினால் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த முடியாது, அந்த சக்தியும் அவருக்கு கிடையாது. கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்காத விரக்தியில் பா.ஜ.க.வை விமர்சித்து உள்ளார்.

    1999-ல் காவிரி பிரச்சினைக்காக வாஜ்பாய் அரசில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. அப்போது அந்த ஆட்சியை தாங்கி பிடித்தது தி.மு.க.தான். தற்போது அவர்கள் காவியை பற்றி பேசுகிறார்கள். இது வினோதமாக இருக்கிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். மத்திய அரசுடன் உறவில் இருந்தாலும் உரிமையில் விட்டு கொடுக்கவில்லை. முத்தலாக்கை எதிர்த்து பேசி உள்ளோம். எல்லாவற்றிற்கும் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது இல்லை. மத்திய அரசின் பணமதிப்பிழப்பால் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. உண்மையில் வியாபாரிகள், விவசாயிகள் கஷ்டப்பட்டார்கள்.

    சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசின் சிபாரிசை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது தவறானது. அவர்கள் ஒரு சில ஆவணங்களை கேட்டு உள்ளனர். அதனை தமிழக அரசு வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #MKStalin

    பாஜகவுடன் திமுக நெருங்குவதால் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். #Thambidurai
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்று கட்சியின் கருத்துக்களை முன்வைத்தார்.

    இக்கூட்டத்தில் பங்கேற்ற தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும்படி அதிமுக சார்பில் வலியுறுத்தினோம். வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர்கூட விடுபடக்கூடாது என கூறினோம்.

    தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எந்த முறையில் தேர்தல் நடத்தினாலும் வரவேற்போம். வாக்குச்சீட்டு முறையோ, மின்னணு எந்திரம் முறையோ எதுவாக இருந்தாலும் தவறு நேரக்கூடாது. வாக்குச்சீட்டு முறைக்கு அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டதால் அதிமுகவுக்கு ஆட்சேபம் இல்லை.



    பாஜகவுடன் திமுக நெருங்குவதால் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை. அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று தம்பிதுரை எம்பி பேசினார். #thambidurai #parliamentelection

    கரூர்:

    கரூரில் இன்று பாராளு மன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காததால் தீவிரவாதம் பெருகி வருவதாக ராகுல் காந்தி கூறியிருப்பது தவறான கருத்து. மத்தியில் ஆளும் மோடி அரசும், தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசும் வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறது. காங்கிரஸ் ஆண்ட காலத்திலும் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஆகவே தீவிரவாதத்திற்கும், வேலை வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை.

    மு.க. அழகிரி தி.மு.க.வில் இருக்கும் போது தான் 2014 பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2016 சட்ட மன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சியை பிடித்தது. பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவாக இருந்தது. அந்த கனவை நிறைவேற்ற வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அ.தி.மு.க. வெற்றி பெறும். சிறிய கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் இரட்டைஇலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின் போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார். #thambidurai #parliamentelection

    மாநில சட்டமன்றங்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் 2024-ம் ஆண்டில் வேண்டுமானால் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்தலாம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் இன்று தெரிவித்துள்ளார். #OneNationOneElection
    புதுடெல்லி :

    நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு காய்நகர்த்தி வருகிறது. மத்திய சட்ட ஆணையமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

    அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் சட்ட ஆணைய கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தமிழக அரசின் சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தின் முடிவில் , துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு சட்ட ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நாங்கள் எதிர்பு தெரிவித்தோம். 2019-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒன்றாக தேர்தல் நடத்த கூடாது, வேண்டுமானால் அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து 2024-ம் ஆண்டில் பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தலாம்  என தெரிவித்தார்.

    மேலும், ‘ 5 ஆண்டுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் கொண்டுவர கூடாது, அதை எற்கவும் முடியாது. ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலம் உள்பட பல மாநிலங்கள் சாச்ர்பில் இன்றைய சட்ட ஆணைய கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது ’ எனவும் தம்பிதுரை கூறினார். #OneNationOneElection
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று கிருஷ்ணகிரியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #Thoothukudifiring #SterliteProtest #ThambiDurai
    கிருஷ்ணகிரி:

    துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நிருபரிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆனால் அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று ஆலையை திறக்க அனுமதி பெற்றனர். மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டதால்தான் இந்த ஆலையை மூட உத்தரவிட்டதாக அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கூறினார்.

    அவரது வழியில் விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் மக்கள் நலனுக்காக மட்டும் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலன் பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறி உள்ளார்.

    தூத்துக்குடியில் நடந்த சம்பவம் வேறு மாதிரியான ஒன்று. ஆகவேதான் தமிழக முதல்-அமைச்சர் அதற்கு உரிய நிவாரணம் வழங்கவும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடிக்கு அதிகாரிகள் முதலில் செல்வார்கள். அங்கு உள்ள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்த பின்பு அமைச்சர்கள் சென்று அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிவாரணப் பணிகளை மேற்கொள்வார்கள்.

    தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. இந்த துயர சம்பவம் எங்கள் எல்லோருக்கும் வருத்தமளிப்பதாக உள்ளது. எனவே தான் அதற்கு ஒரு நிவாரணம் தேடும் விதமாக அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குவதாகவும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் எங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.


    காவிரி பிரச்சனையில் ஒத்துழைக்க தயார் என்று குமாரசாமி கூறிவிட்டார். நீதிமன்றம் கூறியுள்ளபடி செயல்பட தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படி அவர் செயல்படுவார் என்று நம்புகிறோம்.

    கர்நாடகாவில் ஒரு மாநில கட்சியின் தலைவர்தான் முதல்-அமைச்சர் ஆகி உள்ளார். அங்கு மாநில கட்சியின் ஆட்சிதான் நடைபெறுகிறது. இந்தியாவில் அந்தந்த மாநில உணர்வுகளுக்கு ஏற்ப தான் தலைவர்கள் உருவாகி வருகிறார்கள். அதேபோல் தமிழகத்தை பொறுத்தவரையில் எந்த தேசியக்கட்சிக்கும் வாய்ப்பு கிடையாது. அ.தி.மு.க. தொடர்ச்சியாக ஆட்சி செய்யும்.

    தமிழகத்தைப் பொருத்த வரையில் திராவிட கட்சிகள் மட்டும் தான் ஆட்சி அமைக்கும் என்பதற்கு கர்நாடகா தேர்தலில் தேசிய கட்சி தலைவர்கள் யாரும் முதல்வராக வர முடியாததே எடுத்துக்காட்டு ஆகும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் இப்படித்தான் நடந்து கொண்டு வருகிறது.

    கூட்டாட்சி தத்துவத்தை ஏற்று அனைவரும்செயல்பட வேண்டும். அந்தந்த மாநிலத்தின் உரிமையை தர வேண்டும். மாநில கலாச்சாரத்தையும் மொழியையும் மதிக்க வேண்டும் என்பதுதான் பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கையாகும். அந்த வகையில் தான் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    மாநில உரிமைகளை பெற்று அந்தந்த மொழிகளை காப்பது நம் கடமையாகும். தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழினம் இவற்றை காக்க என்றென்றும் அ.தி.மு.க. போராடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring #SterliteProtest  #ThambiDurai
    ×