search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sad"

    • இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை நேரமாகும்
    • இந்நிறுவனத்தில் ஊழியர்களுக்கு 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது

    சீனாவைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனமான `Fat Dong Lai' தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

    இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை நேரமாகும். மேலும், 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது. சீன புத்தாண்டு காலத்தில் இந்நிறுவனம் ஐந்து நாள்களுக்கு மேல் மூடப்படுவதால் அப்போதும் ஊழியர்களுக்கு விடுமுறை தான்.

    இந்த நிறுவனத்தின் ஊழியர்களின் சராசரி மாதச் சம்பளம் 7,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 80,878) ஆகும்.

    "எல்லோருக்கும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லாத நாட்கள் உள்ளன, எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், வேலைக்கு வர வேண்டாம். இந்த மாற்றத்தின் மூலம், ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை தீர்மானிக்க சுதந்திரமாக இருப்பார்கள். இந்த விடுப்பை நிர்வாகத்தால் மறுக்க முடியாது" என்று நிறுவனர் யூ டோங் லாய் கூறியுள்ளார்.

    2021 ஆம் ஆண்டு சீனாவில் பணியிட கவலை குறித்த கணக்கெடுப்பின்படி, 65 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலையில் சோர்வாகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் உணர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மேலூர்:

    மதுரை மாவட்டத்தில் பலர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாள் தோறும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சாலக்கிபட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. எலக்ட்ரீசியனான இவருக்கு வீரசிகாமணி (வயது 28) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் வீரசிகாமணி மீண்டும் கர்ப்பமானார். கடந்த சில நாட்களாக அவருக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. மேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.

    இதையடுத்து வீரசிகாமணி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி வீரசிகாமணி பரிதாபமாக இறந்தார்.

    சாலக்கிபட்டியில் சுகாதார சீர்கேடு நிலவி வருவதால் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது காய்ச்சலால் கர்ப்பிணி பெண் இறந்திருப்பது அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே சுகாதாரத்துறையினர் இனியும் காலதாமதம் செய்யாமல் சாலக்கிபட்டியில் மருத்துவ முகாம் நடத்தி காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று கிருஷ்ணகிரியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #Thoothukudifiring #SterliteProtest #ThambiDurai
    கிருஷ்ணகிரி:

    துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நிருபரிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆனால் அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று ஆலையை திறக்க அனுமதி பெற்றனர். மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டதால்தான் இந்த ஆலையை மூட உத்தரவிட்டதாக அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கூறினார்.

    அவரது வழியில் விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் மக்கள் நலனுக்காக மட்டும் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலன் பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறி உள்ளார்.

    தூத்துக்குடியில் நடந்த சம்பவம் வேறு மாதிரியான ஒன்று. ஆகவேதான் தமிழக முதல்-அமைச்சர் அதற்கு உரிய நிவாரணம் வழங்கவும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடிக்கு அதிகாரிகள் முதலில் செல்வார்கள். அங்கு உள்ள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்த பின்பு அமைச்சர்கள் சென்று அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிவாரணப் பணிகளை மேற்கொள்வார்கள்.

    தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. இந்த துயர சம்பவம் எங்கள் எல்லோருக்கும் வருத்தமளிப்பதாக உள்ளது. எனவே தான் அதற்கு ஒரு நிவாரணம் தேடும் விதமாக அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குவதாகவும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் எங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.


    காவிரி பிரச்சனையில் ஒத்துழைக்க தயார் என்று குமாரசாமி கூறிவிட்டார். நீதிமன்றம் கூறியுள்ளபடி செயல்பட தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படி அவர் செயல்படுவார் என்று நம்புகிறோம்.

    கர்நாடகாவில் ஒரு மாநில கட்சியின் தலைவர்தான் முதல்-அமைச்சர் ஆகி உள்ளார். அங்கு மாநில கட்சியின் ஆட்சிதான் நடைபெறுகிறது. இந்தியாவில் அந்தந்த மாநில உணர்வுகளுக்கு ஏற்ப தான் தலைவர்கள் உருவாகி வருகிறார்கள். அதேபோல் தமிழகத்தை பொறுத்தவரையில் எந்த தேசியக்கட்சிக்கும் வாய்ப்பு கிடையாது. அ.தி.மு.க. தொடர்ச்சியாக ஆட்சி செய்யும்.

    தமிழகத்தைப் பொருத்த வரையில் திராவிட கட்சிகள் மட்டும் தான் ஆட்சி அமைக்கும் என்பதற்கு கர்நாடகா தேர்தலில் தேசிய கட்சி தலைவர்கள் யாரும் முதல்வராக வர முடியாததே எடுத்துக்காட்டு ஆகும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் இப்படித்தான் நடந்து கொண்டு வருகிறது.

    கூட்டாட்சி தத்துவத்தை ஏற்று அனைவரும்செயல்பட வேண்டும். அந்தந்த மாநிலத்தின் உரிமையை தர வேண்டும். மாநில கலாச்சாரத்தையும் மொழியையும் மதிக்க வேண்டும் என்பதுதான் பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கையாகும். அந்த வகையில் தான் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    மாநில உரிமைகளை பெற்று அந்தந்த மொழிகளை காப்பது நம் கடமையாகும். தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழினம் இவற்றை காக்க என்றென்றும் அ.தி.மு.க. போராடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring #SterliteProtest  #ThambiDurai
    ×