என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chinese company"
- இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை நேரமாகும்
- இந்நிறுவனத்தில் ஊழியர்களுக்கு 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது
சீனாவைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனமான `Fat Dong Lai' தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை நேரமாகும். மேலும், 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது. சீன புத்தாண்டு காலத்தில் இந்நிறுவனம் ஐந்து நாள்களுக்கு மேல் மூடப்படுவதால் அப்போதும் ஊழியர்களுக்கு விடுமுறை தான்.
இந்த நிறுவனத்தின் ஊழியர்களின் சராசரி மாதச் சம்பளம் 7,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 80,878) ஆகும்.
"எல்லோருக்கும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லாத நாட்கள் உள்ளன, எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், வேலைக்கு வர வேண்டாம். இந்த மாற்றத்தின் மூலம், ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை தீர்மானிக்க சுதந்திரமாக இருப்பார்கள். இந்த விடுப்பை நிர்வாகத்தால் மறுக்க முடியாது" என்று நிறுவனர் யூ டோங் லாய் கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு சீனாவில் பணியிட கவலை குறித்த கணக்கெடுப்பின்படி, 65 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலையில் சோர்வாகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் உணர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா 2020ல் இந்த செயலியை தடை செய்து விட்டது
- வெறுப்பு உணர்ச்சியை தூண்ட பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர்
சீனாவின் "பைட்டேன்ஸ்" (ByteDance) எனும் நிறுவனத்திற்கு சொந்தமானது "டிக்டாக்" (TikTok) எனும் மென்பொருள் செயலி. 3 நொடிகளில் இருந்து 10 நிமிடங்கள் வரை ஓடக் கூடிய வீடியோக்ளை பயனர்கள் பதிவேற்றம் செய்யவும், கண்டு ரசிக்கவும் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், இச்செயலியின் செயல்பாடுகள் வெறுப்புணர்ச்சியை தூண்டும் விதமாக உள்ளதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். கடந்த 4 வருடங்களில் இதன் காரணமாக 1647 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதை குறித்து ஆலோசிக்க நேபாள காவல்துறையின் சைபர் குற்ற பிரிவு, உள்துறை மற்றும் சீன செயலி நிறுவனத்தின் அதிகாரிகள் பங்கேற்ற சந்திப்பு நடைபெற்றது.
அதை தொடர்ந்து இன்று நேபாளம், சமூக கட்டமைப்பை குலைக்கும் ஆபத்து உள்ளதால் டிக்டாக் செயலியை தடை செய்வதாக அறிவித்தது.
தொழில்நுட்ப வழிமுறைகள் நிறைவடைந்ததும் தடை முழுவதுமாக செயலாக்கப்படும் என்றும் எந்த தேதியிலிருந்து தடை அமலுக்கு வரும் எனும் செய்தி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நேபாள தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரேகா ஷர்மா அறிவித்தார்.
இந்நிலையில், டிக்டாக் செயலியை தடை செய்வது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் இதற்கு பதிலாக ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை விதித்து அதனை செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் நேபாள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ககன் தாபா கூறியுள்ளார்.
இந்தியா, டிக்டாக் செயலியை 2020-ஆம் ஆண்டே தடை செய்து விட்டது. அப்போது அச்செயலிக்கு 10 கோடிக்கும் மேல் பயனர்கள் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்தும் மேலை நாட்டு நிறுவனங்கள் நேபாளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு உள்ளாக கட்டாயம் அலுவலகங்கள் அமைத்தாக வேண்டும் என நேபாள அரசு உத்தரவிட்டிருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்