என் மலர்
நீங்கள் தேடியது "ADMK Rule"
மு.க.ஸ்டாலினால் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த முடியாது, அந்த சக்தியும் அவருக்கு கிடையாது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். #Thambidurai #MKStalin
கரூர்:
கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இந்தியாவிலேயே தரமானதாக மாற்ற முயற்சி செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

மு.க.ஸ்டாலின் ஒரு மேடை பேச்சாளர் போன்று பேசி உள்ளார். அவர் பொறுப்பாக பேசியதாக தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் தனது முயற்சியால், திறமையால் தலைவர் பதவிக்கு வந்ததாகவும் தெரியவில்லை. அவர் தலைவராக பதவி ஏற்றதை வாரிசு அரசியலாகத்தான் பார்க்க முடியும். மூத்தவர் (அழகிரி) இருக்கும் போது இளையவருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது.
கலைஞரின் தகுதி, பேச்சாற்றல் ஆகியவை தனக்கு இல்லை என்று மு.க.ஸ்டாலினே ஒப்புக்கொண்டுள்ளார். மு.க.ஸ்டாலினால் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த முடியாது, அந்த சக்தியும் அவருக்கு கிடையாது. கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்காத விரக்தியில் பா.ஜ.க.வை விமர்சித்து உள்ளார்.
1999-ல் காவிரி பிரச்சினைக்காக வாஜ்பாய் அரசில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. அப்போது அந்த ஆட்சியை தாங்கி பிடித்தது தி.மு.க.தான். தற்போது அவர்கள் காவியை பற்றி பேசுகிறார்கள். இது வினோதமாக இருக்கிறது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். மத்திய அரசுடன் உறவில் இருந்தாலும் உரிமையில் விட்டு கொடுக்கவில்லை. முத்தலாக்கை எதிர்த்து பேசி உள்ளோம். எல்லாவற்றிற்கும் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது இல்லை. மத்திய அரசின் பணமதிப்பிழப்பால் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. உண்மையில் வியாபாரிகள், விவசாயிகள் கஷ்டப்பட்டார்கள்.
சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசின் சிபாரிசை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது தவறானது. அவர்கள் ஒரு சில ஆவணங்களை கேட்டு உள்ளனர். அதனை தமிழக அரசு வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #MKStalin
கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இந்தியாவிலேயே தரமானதாக மாற்ற முயற்சி செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இதில் நர்சிங் கல்லூரி, ஆயுர்வேத கல்லூரி போன்றவற்றை கொண்டு வந்து ஹெல்த் சிட்டியாக மாற்ற உள்ளோம்.

மு.க.ஸ்டாலின் ஒரு மேடை பேச்சாளர் போன்று பேசி உள்ளார். அவர் பொறுப்பாக பேசியதாக தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் தனது முயற்சியால், திறமையால் தலைவர் பதவிக்கு வந்ததாகவும் தெரியவில்லை. அவர் தலைவராக பதவி ஏற்றதை வாரிசு அரசியலாகத்தான் பார்க்க முடியும். மூத்தவர் (அழகிரி) இருக்கும் போது இளையவருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது.
கலைஞரின் தகுதி, பேச்சாற்றல் ஆகியவை தனக்கு இல்லை என்று மு.க.ஸ்டாலினே ஒப்புக்கொண்டுள்ளார். மு.க.ஸ்டாலினால் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த முடியாது, அந்த சக்தியும் அவருக்கு கிடையாது. கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்காத விரக்தியில் பா.ஜ.க.வை விமர்சித்து உள்ளார்.
1999-ல் காவிரி பிரச்சினைக்காக வாஜ்பாய் அரசில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. அப்போது அந்த ஆட்சியை தாங்கி பிடித்தது தி.மு.க.தான். தற்போது அவர்கள் காவியை பற்றி பேசுகிறார்கள். இது வினோதமாக இருக்கிறது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். மத்திய அரசுடன் உறவில் இருந்தாலும் உரிமையில் விட்டு கொடுக்கவில்லை. முத்தலாக்கை எதிர்த்து பேசி உள்ளோம். எல்லாவற்றிற்கும் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது இல்லை. மத்திய அரசின் பணமதிப்பிழப்பால் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. உண்மையில் வியாபாரிகள், விவசாயிகள் கஷ்டப்பட்டார்கள்.
சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசின் சிபாரிசை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது தவறானது. அவர்கள் ஒரு சில ஆவணங்களை கேட்டு உள்ளனர். அதனை தமிழக அரசு வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #MKStalin






