search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடையாள அட்டை"

    • தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.
    • தேசிய அடையாள அட்டை மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 59 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 89 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்தததாவது, தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

    அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் 31824 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்களில் தனித்துவம் வாய்ந்த 19439 நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில்புரிய மானியத்துடன் கூடிய கடனுதவிகளும் வங்கி பங்களிப்புடன் வழங்கப்பட்டு வருகிறது.

    மன வளர்ச்சி குன்றியோர், கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    18 வயதிற்கு மேற்பட்ட பார்வைதிறன் மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டத்தின்கீழ் பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்டு செல்போன் வழங்கப்பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொது பிரிவு திட்டத்தின்கீழ், ஊன்றுகோல், மூன்று சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், 9ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயிலும் குறைகண் பார்வையுடைய மாணவ, மாணவியர்களுக்கு எழுத்தை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கிகள் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் லதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி மோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை, இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
    • டி.எஸ்.பி. மாயவன் தலைமை தாங்கி அடையாள அட்டைகளை வழங்கினார்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் குரூஸ் கோவில் வளாகத்தில் 300 நபர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை, 1000 இலவச மரக்கன்றுகள் மற்றும் கிராம உதயம் மஞ்சப்பை வழங்கும் விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு குரூஸ் கோவில் பங்குத்தந்தை கிஷோக், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் வரவேற்புரை ஆற்றினார். டி.எஸ்.பி. மாயவன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அமைப்பு சாரா தொழிலாள ர்களுக்கான அடையாள அட்டை, மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப் பையை வழங்கினார். தனி அலுவலர் ராமச்சந்திரன் கருத்துரை வழங்கினார். கிராம உதய தன்னார்வ தொண்டர்கள் வெள்ளூர் முத்துராஜ், முருகசெல்வி, கண்ணன், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். தன்னார்வ தொண்டர் செல்வன் துரை நன்றி கூறினார்.

    • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை தாங்கினார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார்.

    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூரில் அமைப்பு சாரா தொழிலாளர்க ளுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. சமுதாய நலக்கூடத்தில் ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில் நடந்த விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை தாங்கினார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராமஉதயம் மேலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டையை வழங்கினார். தனி அலுவலர் ராமசந்திரன் வரவேற்புரை ஆற்றினார். பகுதி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் மஞ்சள்பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் விஜய ஏஞ்சல், விஜயகுமாரி, ஆறுமுககனி, செல்வன்துரை, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 15-ம் தேதி முதல் 28-ந் தேதி வரை கமலா சுப்ரமணியம் பள்ளியில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.
    • அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 200 விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடம் இருந்து இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    இதையடுத்து இவற்றில் தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 15 ஆம் தேதி முதல் 28-ந் தேதி வரை தஞ்சாவூர் -புதுக்கோட்டை சாலையில் உள்ள கமலா சுப்ரமணியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

    இதற்கான அனுமதி சீட்டை விண்ணப்பித்த இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாற்று திறனாளி விண்ணப்பதாரர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட மாற்று திறனாளி சான்றிதழ் அல்லது தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் வழங்கினார்
    • 236 பேர் பயனடைந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மாதாந் திர மாற்றுத் திறனாளிகளுக் கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.

    கலெக் டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, முகாமில் கை, கால் பாதிக்கப்பட்டவர்கள் 124 நபர்களுக்கும், காது கேளா தோர் 48 நபர்களுக்கும், கண் பாதிக்கபட்பட்ட 37 நபர்களுக் கும், பொது நல மருத்துவம் தொடர்பாக 12 நபர்களுக்கும் மற்றும் குழந்தை நல மருத்துவம் தொடர்பாக 15 நபர்களுக்கும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களால் மாற்றுத்தி றனாளிகள் என மொத்தம் 236 பேருக்கு தேசிய அடையாள அட்டை பெற மருத்துவ சான்றுடன் கூடிய அடையள அட்டைகளை வழங் கினார்.

    மேலும் 29 நபர்களுக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட் டத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது. அறிவுசார் குறைபாடு உடையவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை வேண்டி 12 நபர்களும், வங்கிக்கடன் வேண்டி 8 நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 9 நபர்களும், சக்கர நாற்காலி வேண்டி 5 நபர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் வார செவ்வாய்க் கிழமை தோறும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் மாற்று த்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.

    முகாமில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை முடநீக்கவியல்

    வல்லுநர் ஸ்டெல்லா மேரி, எலும்பியல் மருத்துவர் வெங்கடேஷ்

    மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் மின்வாரிய தொ.மு.ச. சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.
    • வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மின்வாரிய தொ.மு.ச. கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் மின்வாரிய தொ.மு.ச. மாநில பொதுச் செயலாளர் மணிமாறன் ஆலோசனையின் படி, சங்கரன்கோவில் மின்வாரிய தொ.மு.ச. சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், சேர்மன் உமா மகேஸ்வரி, தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், திட்டத்தலைவர் தங்கமாரிமுத்து, திட்ட பொருளாளர் சத்யராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் பங்கேற்ற தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மின்வாரிய தொ.மு.ச. கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து மின்வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார். இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, இளைஞர் அணி சரவணன், தி.மு.க. மாவட்ட மாணவரணி உதயகுமார், கார்த்திக், தொ.மு.ச.வை சேர்ந்த சத்தியராஜ், வெள்ளத்துரை, கலாவதி, கருப்பசாமி, கிருஷ்ணகுமார், பால்ராஜ், கிருஷ்ணசாமி, முத்துபாண்டியன் சிவசுப்பிரமணியன், பேச்சிமுத்து, தி.மு.க. அவைத்தலைவர் முப்புடாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கோட்டச் செயலாளர் சரவணமுருகையா செய்திருந்தார்.

    • மாணவர்களின் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வது.
    • பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் கையேடு.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கீழப்பாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி சத்யா தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

    முன்னதாக வழிகாட்டி ஆசிரியர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் பள்ளி வளர்ச்சி மாணவர்களின் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வது குறித்தும், மாணவர்களின் கற்பித்தல் திறன் பற்றியும் கலந்துரையாடினர்.

    இல்லம் தேடி கல்வியில் மாணவர்கள் பங்குபெற கேட்டுக்கொள்ளப்பட்டது.

    கலை திருவிழா, குழந்தை களுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு, இரண்டு வகுப்பறை கட்டிடம், கழிவறை கட்டி முடிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அ டையாள அட்டை மற்றும் உறுப்பினர் கையேடு வழங்கப்பட்டது.

    மேலும், அனைவரும் இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    கூட்ட நிறைவில் மறைந்த உறுப்பினர் ஜெகதீசுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    முடிவில் ஆசிரியர் மதன்கு மார் நன்றி கூறினார்.

    • 36 பேருக்கு வங்கி கடன் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யும் சிறப்பு மருத்துவ முகாம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த முகாமில் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் இருந்து 247 மாற்றத்திறனாளிகள் பங்கேற்றனர்.

    இதில் அடையாள அட்டை பெறாத 38 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது. 36 மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.

    மேலும் இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் பேசினார்.

    மேலும் இந்த முகாமில் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சிவப்பிரகாசம், உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மருத்துவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • 16 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, மாதத்தின் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் கலெக்டர் தலைமையில் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும்.

    நேற்று நடைபெற்ற இம்முகாமில் கலந்த கொண்ட 132 நபர்களில் 78 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டையும், 27 நபர்களும் முதல் -அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பதிவும், மற்றும் 52 புதிய பயனாளிகளுக்கு யுடிஐடி போர்ட்டலில் பதிவும் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் 56 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி நல வாரியம் பதிவு மேற்கொள்ளப்பட்டது. மேலும், செயற்கை கால் வேண்டி 4 நபர்களும், அறிவுசார் குறைபாடுயவர்களுக்கான பராமரிப்பு நிதி உதவித்தொகை வேண்டி 19 நபர்களும், வங்கி கடன் வேண்டி 17 நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 5 நபர்களும், சக்கர நாற்காளி வேண்டி 16 நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    இம்முகாமில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி நல அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மீனவ சமுதாயத்தை சேர்ந்த 300 பேர் ஊர்காவல்படையில் தேர்வு.
    • சுற்றுலா தளங்களில் கடலோர போலீசாருக்கு உதவியாக பணியாற்றுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    கடலோர பாதுகாப்பு காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுவதற்காக முதற்கட்டமாக பணியில் சேர்ந்த 24 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.

    தமிழக அரசின் அறிவிப்பின்படி, முதன்முறையாக நாகை மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த படித்த பட்டதாரி இளைஞர்கள் 300 பேர் ஊர்காவல்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக 45 நாட்கள் பயிற்சி முடித்த ஊர்காவல் படையினருக்கு நாகப்பட்டினத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

    கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் அடையாள அட்டைகளை வழங்கினார்‌.

    பணியில் நியமிக்கப்பட்ட அனைவரும் வேளாங்கண்ணி மற்றும் பூம்புகார் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கடலோர காவல்துறை பாதுகாப்பு போலீசாருக்கு உதவியாக பணியாற்றுவார்கள் என்றும், கடலில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியில் ஈடுபட உள்ளனர்.

    குறிப்பாக கடலோரங்களில் நடைபெறும் கடத்தல், அந்நியர்கள் ஊடுருவல்களை கண்காணிக்கும் பணி மற்றும் கடற்கரையோர சோதனை சாவடிகளிலும் உதவியாக பணியாற்றுவார்கள்‌‌.

    தமிழகத்திலேயே முதல் முறையாக நாகை மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் தேர்வு செய்யப்படுள்ள நிலையில், மீனவர்கள் மற்றும் கடலோர காவல்துறை போலீசாருக்கு இணைப்பு பாலமாக திகழ்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம் வருகிற 1,2 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதில் உள்ள சிரமங்களை மாற்றுத்திற னாளிகள் தவிர்க்கும் வகையில் கூடுதலாக வட்டார அளவில் அரசு மருத்துவ மனைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு மாதமும் வரும் முதல் செவ்வாய்க்கிழமைகளில் காலை 10 மணி முதல் அரசு மருத்துவமனை திருமங்க லத்திலும், ஒவ்வொரு மாதமும் வரும் முதல் புதன்கிழமைகளில் காலை 10 மணி முதல் அரசு மருத்துவமனை மேலூரிலும் இணை இயக்குநர், நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம், மதுரை (இ) உசிலம்பட்டி கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் குழு மூலம் நடைபெற்று வருகிறது.

    நவம்பர் மாதத்தில் 1-ந் தேதி (செவ்வாய்) அன்று அரசு மருத்துவமனை திருமங்கலத்திலும், 2-ந் தேதி (புதன்) அன்று அரசு மருத்துவமனை மேலூரிலும் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் இதுவரை மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டிய மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாறுதலில் மதுரை மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து வரும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி களுக்கான தனித்துவ அட்டை பெறாத மாற்றுத்தி றனாளிகள், தங்களது குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 ஆகிய வற்றுடன் மேற்குறிப்பிட்ட தினங்களில் திருமங்கலம் மற்றும் மேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 50 சதவீதத்தினருக்கு மேல் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.
    • 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2305 வாக்குச்சாவடிகளிலும் ஏற்கனவே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணியில் ஆதார் எண் இணைப்பு பணியில் பொதுமக்களின் வசதிக்காக மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2305 வாக்குச்சாவடிகளிலும் ஏற்கனவே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    இந்த சிறப்பு முகாம்களில் 2,01,830 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் எண் போன்ற விவரங்களை படிவம் 66-ல் பூர்த்தி செய்து வாக்கு சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொண்டுள்ளனர்.

    8 சட்டமன்ற தொகுதிக ளில் உள்ள வாக்காளர்களில் 50 சதவீதத்தினருக்கு மேல் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    இந்தப்பணியில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் விடுபட்ட வாக்கா ள ர்களின் வசதிக்காக நாளை ( ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்க ளிலும் மீண்டும் நடைபெற உள்ளது.

    இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம் 5 பி வலங்க இயலாத வாக்காளர்கள் தங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட ( voters helpline ) செயலியை பதிவிறக்கம் செய்தும், ( voters portal ) என்ற இணையதளத்தின் மூலமும் அவர்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×