search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைப்புசாரா தொழிலாளர்கள்"

    • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை, இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
    • டி.எஸ்.பி. மாயவன் தலைமை தாங்கி அடையாள அட்டைகளை வழங்கினார்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் குரூஸ் கோவில் வளாகத்தில் 300 நபர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை, 1000 இலவச மரக்கன்றுகள் மற்றும் கிராம உதயம் மஞ்சப்பை வழங்கும் விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு குரூஸ் கோவில் பங்குத்தந்தை கிஷோக், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் வரவேற்புரை ஆற்றினார். டி.எஸ்.பி. மாயவன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அமைப்பு சாரா தொழிலாள ர்களுக்கான அடையாள அட்டை, மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப் பையை வழங்கினார். தனி அலுவலர் ராமச்சந்திரன் கருத்துரை வழங்கினார். கிராம உதய தன்னார்வ தொண்டர்கள் வெள்ளூர் முத்துராஜ், முருகசெல்வி, கண்ணன், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். தன்னார்வ தொண்டர் செல்வன் துரை நன்றி கூறினார்.

    • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை தாங்கினார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார்.

    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூரில் அமைப்பு சாரா தொழிலாளர்க ளுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. சமுதாய நலக்கூடத்தில் ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில் நடந்த விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை தாங்கினார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராமஉதயம் மேலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டையை வழங்கினார். தனி அலுவலர் ராமசந்திரன் வரவேற்புரை ஆற்றினார். பகுதி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் மஞ்சள்பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் விஜய ஏஞ்சல், விஜயகுமாரி, ஆறுமுககனி, செல்வன்துரை, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பலர் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளனர்.
    • தொழிலாளர்கள் பதிவு செய்யாமல் நலத்திட்ட பயனாளிகளாக தேர்வாகாமல் உள்ளனர்.

    உடுமலை:

    மத்திய, மாநில அரசின் திட்டங்கள் சென்றடையச்செய்யும் வகையில் 26 வகை அமைப்புசாரா தொழிலாளர்கள் வரையறுக்கப்பட்டுள்ளனர். சிறு குறு விவசாயிகள், விவசாய கூலிகள், கட்டுமான தொழிலாளர்கள், நெசவாளர்கள், செய்தித்தாள்கள் வினியோகிப்போர் உள்ளிட்ட பலர் இதில் அடங்குவர்.

    தேசிய அமைப்புசாரா தொழிலாளர் திட்டங்களில் சேர பதிவு முகாம்கள், பொது சேவை மையங்கள் வாயிலாக பலர் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளனர்.இருப்பினும்சில தொழிலாளர்கள் பதிவு செய்யாமல் நலத்திட்ட பயனாளிகளாக தேர்வாகாமல் உள்ளனர்.பதிவு செய்யாத தொழிலாளர்கள், தங்களது முழுவிபரங்களை அருகில் உள்ள பொது சேவை மையங்களில் அளித்து தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல அடையாள அட்டை பெறலாம்.

    அதன் ஒரு பகுதியாக உடுமலை ஒன்றியம் ஆண்டியக்கவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்காடு பகுதியில் தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகளுக்கு நலவாரிய அட்டை வழங்கும் முகாம் நடந்தது.ஊராட்சித்தலைவர் மோகனவல்லி, துணைத்தலைவர் விஜயகுமார், ஊராட்சி செயலர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். அரசாணைக்கு பின், பிற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    • மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி. அமைப்பு சாரா தொழி லாளர்களின் தேசிய தரவுதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • ஆதார் அடை யாள அட்டை, வங்கிக ணக்குபுத்தகம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகிய ஆவணங்கள் பதிவு செய்ய தேவைப்படும்.

    கோவை:

    அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவுதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கோவை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) காயத்திரி தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி. அமைப்பு சாரா தொழி லாளர்களின் தேசிய தரவுதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக www.eshram.ov.in என்ற வலைத்தளத்தின் மூலம் கட்டுமான, புலம் பெயர்ந்த, விவசாய தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், தச்சுவேலை செய்பவர்கள், கல்குவாரி, முடி திருத்துவோர். தெரு வியாபாரிகள், சிறுவியா பாரிகள், ஊரகவேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், நெசவாளர் பதிவுகள், மீனவ மற்றும் செங்கல் சூளை, தையல், சாயப்பட்டறை, பட்டு வளர்ப்பு தொழிலாளர்கள், ஓட்டுனர்கள் உள்பட 156 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை அனைத்து பொதுசேவை மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

    மாநில அரசின் பல்வேறு வகையான நலவாரியங்க ளின் கீழ் பதிவு செய்து உள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் கட்டாயம் இந்த தரவு தளத்தின் கீழும் பதிவு செய்ய வேண்டும். இதில் பதிவு செய்து கொள்ள 18 வயது முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும். வருமானவரி செலுத்துபவராகவும், இ.எஸ்.ஐ., வருங் கால வைப்புநிதி பிடித்தம் செய்யும் பணியாளர்களாக வும் இருக்கக்கூடாது.

    ஆதார் அடை யாள அட்டை, வங்கிக ணக்குபுத்தகம், ஆதார் எண்ணுடன் இணை க்கப்பட்ட செல்போன் எண் ஆகிய ஆவணங்கள் பதிவு செய்ய தேவைப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் தரவு தளத்துக்கு சென்று தாங்களாகவே சுயபதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பின்னர் 12 இலக்கு எண் கொண்ட அடையாள அட்டை வழங் கப்படும். இந்த அடையாள அட்டை மூலம் வேலை மற்றும் வேறு ஏதாவது காரணங்களுக்காக புலம் பெயர இருந்தாலும் அரசிடம் இருந்து பெற வேண்டிய சலுகைகளை பெற உதவியாக இருக்கும்.

    மேலும் அடையாள அட்டை பெறுபவர்களுக்கு விபத்து காப்பீடு இலவசமாக செய்யப்பட்டு விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது முழு உடல் ஊனம் ஏற்பட்டாலோ ரூ.2 லட்சமும், பகுதியளவு உடல் ஊனத்துக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும். அத்துடன் மத்திய அர சால் செயல்படுத்தப்படும் தொழிலாளர் பங்களி ப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டங்கள் மூலமும் பயன்பெறலாம்.

    அத்துடன் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய வேலைவாய்ப்பு இணையதளம் இந்த வலைத்தளத்தில் இணை க்கப்படுவதால் அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கு மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் வேலைவாய்ப்பை எளிதில் பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  

    ×