search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "unorganized workers"

    • தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து துரைசாமி, ஆதிமூலம் கருத்துரை வழங்கினர்.
    • நலவாரியத்தில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

    முக்கூடல்:

    முக்கூடலில் உள்ள பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய பொறுப்பாளர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மாலதி வரவேற்றார்.

    நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் பார்வதி, மனோன்மணி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து துரைசாமி, ஆதிமூலம் கருத்துரை வழங்கினர்.

    பொறுப்பாளர்களின் கடமைகள் மற்றும் பணிகள் குறித்து வான்முகில் ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் பேசினார். பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஒருங்கிணைப்பாளர் மாரியம்மாள் பேசினார்.

    இம்முகாமில் பொறுப்பாளர் தேர்வு நடைபெற்றது. நலவாரியத்தில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. பயிற்சியின் இறுதியில் ஒருங்கிணைப்பாளர் மதியழகன் நன்றி கூறினார். தொழிலாளர்கள் பலர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

    • பலர் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளனர்.
    • தொழிலாளர்கள் பதிவு செய்யாமல் நலத்திட்ட பயனாளிகளாக தேர்வாகாமல் உள்ளனர்.

    உடுமலை:

    மத்திய, மாநில அரசின் திட்டங்கள் சென்றடையச்செய்யும் வகையில் 26 வகை அமைப்புசாரா தொழிலாளர்கள் வரையறுக்கப்பட்டுள்ளனர். சிறு குறு விவசாயிகள், விவசாய கூலிகள், கட்டுமான தொழிலாளர்கள், நெசவாளர்கள், செய்தித்தாள்கள் வினியோகிப்போர் உள்ளிட்ட பலர் இதில் அடங்குவர்.

    தேசிய அமைப்புசாரா தொழிலாளர் திட்டங்களில் சேர பதிவு முகாம்கள், பொது சேவை மையங்கள் வாயிலாக பலர் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளனர்.இருப்பினும்சில தொழிலாளர்கள் பதிவு செய்யாமல் நலத்திட்ட பயனாளிகளாக தேர்வாகாமல் உள்ளனர்.பதிவு செய்யாத தொழிலாளர்கள், தங்களது முழுவிபரங்களை அருகில் உள்ள பொது சேவை மையங்களில் அளித்து தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல அடையாள அட்டை பெறலாம்.

    அதன் ஒரு பகுதியாக உடுமலை ஒன்றியம் ஆண்டியக்கவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்காடு பகுதியில் தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகளுக்கு நலவாரிய அட்டை வழங்கும் முகாம் நடந்தது.ஊராட்சித்தலைவர் மோகனவல்லி, துணைத்தலைவர் விஜயகுமார், ஊராட்சி செயலர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். அரசாணைக்கு பின், பிற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    • மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி. அமைப்பு சாரா தொழி லாளர்களின் தேசிய தரவுதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • ஆதார் அடை யாள அட்டை, வங்கிக ணக்குபுத்தகம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகிய ஆவணங்கள் பதிவு செய்ய தேவைப்படும்.

    கோவை:

    அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவுதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கோவை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) காயத்திரி தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி. அமைப்பு சாரா தொழி லாளர்களின் தேசிய தரவுதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக www.eshram.ov.in என்ற வலைத்தளத்தின் மூலம் கட்டுமான, புலம் பெயர்ந்த, விவசாய தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், தச்சுவேலை செய்பவர்கள், கல்குவாரி, முடி திருத்துவோர். தெரு வியாபாரிகள், சிறுவியா பாரிகள், ஊரகவேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், நெசவாளர் பதிவுகள், மீனவ மற்றும் செங்கல் சூளை, தையல், சாயப்பட்டறை, பட்டு வளர்ப்பு தொழிலாளர்கள், ஓட்டுனர்கள் உள்பட 156 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை அனைத்து பொதுசேவை மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

    மாநில அரசின் பல்வேறு வகையான நலவாரியங்க ளின் கீழ் பதிவு செய்து உள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் கட்டாயம் இந்த தரவு தளத்தின் கீழும் பதிவு செய்ய வேண்டும். இதில் பதிவு செய்து கொள்ள 18 வயது முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும். வருமானவரி செலுத்துபவராகவும், இ.எஸ்.ஐ., வருங் கால வைப்புநிதி பிடித்தம் செய்யும் பணியாளர்களாக வும் இருக்கக்கூடாது.

    ஆதார் அடை யாள அட்டை, வங்கிக ணக்குபுத்தகம், ஆதார் எண்ணுடன் இணை க்கப்பட்ட செல்போன் எண் ஆகிய ஆவணங்கள் பதிவு செய்ய தேவைப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் தரவு தளத்துக்கு சென்று தாங்களாகவே சுயபதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பின்னர் 12 இலக்கு எண் கொண்ட அடையாள அட்டை வழங் கப்படும். இந்த அடையாள அட்டை மூலம் வேலை மற்றும் வேறு ஏதாவது காரணங்களுக்காக புலம் பெயர இருந்தாலும் அரசிடம் இருந்து பெற வேண்டிய சலுகைகளை பெற உதவியாக இருக்கும்.

    மேலும் அடையாள அட்டை பெறுபவர்களுக்கு விபத்து காப்பீடு இலவசமாக செய்யப்பட்டு விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது முழு உடல் ஊனம் ஏற்பட்டாலோ ரூ.2 லட்சமும், பகுதியளவு உடல் ஊனத்துக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும். அத்துடன் மத்திய அர சால் செயல்படுத்தப்படும் தொழிலாளர் பங்களி ப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டங்கள் மூலமும் பயன்பெறலாம்.

    அத்துடன் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய வேலைவாய்ப்பு இணையதளம் இந்த வலைத்தளத்தில் இணை க்கப்படுவதால் அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கு மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் வேலைவாய்ப்பை எளிதில் பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  

    ×