search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைப்புசாரா தொழிலாளர்கள் பயிற்சி முகாம்
    X

    பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள். 

    அமைப்புசாரா தொழிலாளர்கள் பயிற்சி முகாம்

    • தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து துரைசாமி, ஆதிமூலம் கருத்துரை வழங்கினர்.
    • நலவாரியத்தில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

    முக்கூடல்:

    முக்கூடலில் உள்ள பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய பொறுப்பாளர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மாலதி வரவேற்றார்.

    நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் பார்வதி, மனோன்மணி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து துரைசாமி, ஆதிமூலம் கருத்துரை வழங்கினர்.

    பொறுப்பாளர்களின் கடமைகள் மற்றும் பணிகள் குறித்து வான்முகில் ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் பேசினார். பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஒருங்கிணைப்பாளர் மாரியம்மாள் பேசினார்.

    இம்முகாமில் பொறுப்பாளர் தேர்வு நடைபெற்றது. நலவாரியத்தில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. பயிற்சியின் இறுதியில் ஒருங்கிணைப்பாளர் மதியழகன் நன்றி கூறினார். தொழிலாளர்கள் பலர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×