search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித் குமார்"

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் ‘தல 59’ படத்தில் தேசிய விருது வென்ற பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Thala59 #ThalaAjith #KalyaniPriyadarshan
    ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தல 59’ என்று குறிப்பிடப்படுகிறது.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.



    இந்தப் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. பிரபல இயக்குனர் பிரியதர்‌ஷன் மற்றும் முன்னாள் நடிகை லிசி இருவரது மகள்தான் கல்யாணி. மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. ‘ஹலோ’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கல்யாணி, தற்போது மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், துல்கர் சல்மான் ஜோடியாக ‘வான்’ என்ற தமிழ்ப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். #Thala59 #AjithKumar #ThalaAjith #KalyaniPriyadarshan

    ரஜினியின் `பேட்ட' படமும், அஜித்தின் `விஸ்வாசம்' படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #Petta #Viswasam
    ரஜினிகாந்த் நடிப்பில் `பேட்ட' படமும், அஜித் நடிப்பில் `விஸ்வாசம்' படமும் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகிறது. இரண்டுமே பெரிய கதாநாயகர்களின் படங்கள் என்பதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கல் வெளியீடு என்பதை சில மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டனர். ஆனால் தியேட்டர் உரிமையாளர்களைப் பொறுத்த வரை ரஜினியின் பேட்ட படத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க விரும்புவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா என நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது தான் அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி பேட்ட, விஸ்வாசம் உள்ளிட்ட 22 படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே எந்தெந்த படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகும் என்பது ஜனவரி முதல் வாரத்தில் தெரிந்துவிடும்.



    இந்த வாரத்தில், 20-ந் தேதி விஜய் சேதுபதியின் சீதக்காதி, 21-ந் தேதி ஜெயம் ரவியின் அடங்க மறு, தனுசின் மாரி-2, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜீரோ, கேஜிஎப், அந்தரிக்‌ஷம், படி படி லெச்சே மனசு ஆகிய 9 படங்கள் திரைக்கு வருகின்றன. தியேட்டர்கள் பிடிப்பதில் இந்த படங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. #Petta #Viswasam

    விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் பிங்க் ரீமேக்கை அஜித்துக்கு தேர்வு செய்தது குறித்து போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார். #Thala59 #AjithKumar #ThalaAjith
    விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் போனிகபூர் கலந்து கொண்டு பேசும்போது, அஜித்குமாருக்காக ‘பிங்க்’ படத்தை தேர்வு செய்தது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    “இங்கிலீஷ் விங்கிலீஷ்” படத்தில் அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை கிடைக்கவில்லை. ‘பிங்க்’ படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை அஜித் தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என்று ஸ்ரீதேவியும் அந்த எண்ணத்தை ஏற்றுக் கொண்டார்.



    தமிழ் படம் தயாரிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். ‘பிங்க்’ படத்தை தமிழில் எடுப்பதிலும், அஜித்துடன் இணைந்து பணிபுரிவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். மே மாதம் 1-ந் தேதி படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.

    இவ்வாறு போனி கபூர் கூறினார். #Thala59 #AjithKumar #ThalaAjith #BoneyKapoor #PinkRemake

    சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் நிலையில், அஜித்துக்கு ஒரு கதையை தயார் செய்திருப்பதாகவும், அவர் சம்மதம் தெரிவித்தால் ஆரம்பத்திவிடலாம் என்றும் முருகதாஸ் கூறினார். #ThalaAjith
    சர்கார் படத்துக்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இயக்குனர் முருகதாஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நான் எங்கே போனாலும் அஜித்தின் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு கேட்கும் ஒரே கேள்வி, ‘எங்கள் அஜித்துடன் சேர்ந்து எப்போ படம் பண்ணுவீங்க? என்பதுதான். நிறைய இடங்களில் இதே கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

    என்னுடைய முதல் படம் தீனாவில் அஜித்துடன் சேர்ந்ததுதான். அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாகி விட்டது. இன்னும் சேரவே இல்லை. இப்போது அஜித் இருக்கும் உயரத்துக்கு தகுந்தபடி, பக்கா மாஸாக ஒரு கதை பண்ண வேண்டும்.



    நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் சேர்ந்தால், அப்படி ஒரு வெயிட்டான கதையாக இருக்கவேண்டும். அஜித்தைப் பார்க்கும் போது, ரசிகர்களின் ஆசையையும் என்னுடையை ஆசையையும் சொல்லிவிட்டேன். அஜித்துக்கு ஏற்றது மாதிரி பக்காவான, ஒரு மாஸ் கதையையும் தயார் செய்து வைத்திருக்கிறேன். அஜித் கதையைக் கேட்டு ஓகே சொல்லிவிட்டால், அடுத்து உடனே ஆரம்பித்துவிடலாம்’. இவ்வாறு முருகதாஸ் தெரிவித்தார். #ThalaAjith #AjithKumar #ARMurugadoss

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் பேட்ட படம் பொங்கல் ரேசில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth #Viswasam
    அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னணி நடிகர்களின் படங்கள் ஆக்கிரமித்துள்ளன. அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் பொங்கலுக்கு ரிலீசாகவிருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினியின் பேட்ட, சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி உள்ளிட்ட படங்கள் பொங்களுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டன.

    இவ்வாறாக பெரிய படங்கள் பொங்கலுக்கு படையெடுத்துள்ளதால் கடைசி நேரத்தில் எந்த படமாவது தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்று உறுதி என்று எதிர்பார்த்து வந்த நிலையில், தகவல்படி ரஜினிகாந்தின் பேட்ட, பொங்கல் ரேசில் இருந்து விலகவிருப்பதாக கூறப்படுகிறது. 

    பேட்ட படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் பலரும் கேட்டுக் கொண்டுள்ளார்களாம். மேலும், தயாரிப்பாளர் சங்கமும் பேட்ட படத்தை பொங்கலில் இருந்து வேறு தேதிக்கு மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 



    எனவே பேட்ட படம் பொங்கல் ரேசில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பேட்ட பொங்கல் ரேசில் இருந்து விலகும் பட்சத்தில் மற்ற மூன்று படங்களும் திரையரங்குகளை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் ஒரு சில சிறு பட்ஜெட் படங்களும் ரிலீசாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. #Petta #Rajinikanth #Viswasam

    விஸ்வாசம் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த குரூப் டான்சர் உடலை கொண்டு தமிழகம் கொண்டு வர நடிகர் அஜித் உதவி செய்ததாக டான்ஸ் யூனியனின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AjithKumar #Viswasam
    சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துவரும் இப்படம், அடுத்த ஆண்டு (2019) பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு. தற்போது இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஒரு பாடலுக்கான சில காட்சிகளை மட்டும் படமாக்கி வந்தனர். அஜித்துடன் குரூப் டான்ஸர்கள் நடனமாடும் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சரவணன் என்ற குரூப் டான்ஸர் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

    ஆனால், சரவணன் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன்னதாகவே இறந்தார். சரவணன் உயிரிழந்தது தெரிந்தவுடன், பிரேதப் பரிசோதனை முடியும்வரை மருத்துவமனையிலே இருந்திருக்கிறார் அஜித். இதுகுறித்து டான்ஸ் யூனியனின் பொருளாளர் செந்தில்குமார் கூறும்போது, “எங்கள் சங்கத்தின் தலைவர் படப்பிடிப்பில் இருப்பதால், இதை நான் பேசுகிறேன். ஷூட்டிங் சென்ற இடத்தில் சரவணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.



    அஜித் சார் தான் தனது சொந்த செலவில் அவரது பிரேதத்தை சென்னைக்கு எடுத்து வர உதவினார். அவர் மட்டும் இல்லாவிட்டால், உடல் வந்து சேர 3 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என்றார். #AjithKumar #Viswasam

    தமிழ் சினிமாவில் மீண்டும் பிசியாகி இருக்கும் ஹன்சிகா, அஜித்தை பிடிக்கும் என்றும், அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் கூறினார். #Hansika #AjithKumar
    நடிப்பில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்த ஹன்சிகா தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகிவிட்டார்.

    விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டாலும் ஹன்சிகாவுக்கு இருக்கும் ஒரே குறை அஜித்துடன் நடிக்க முடியாதது தான்.

    இதுபற்றி கூறும்போது ‘அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். எனக்கு கனவு வேடம் என்று எதுவும் இல்லை. எல்லா கதாபாத்திரங்களிலுமே நடிக்கத் தான் விரும்புகிறேன். நான் நடித்ததிலேயே மிகவும் பிடித்த கதாபாத்திரம் ரோமியோ ஜுலியட் பட கதாபாத்திரம்.



    காரணம் அந்த கதாபாத்திரத்தில் நெகட்டிவான குணாதிசயம் கலந்து இருக்கும். இந்த வேடத்தில் நடிக்க வேண்டாம் என்று சிலர் கூறினார்கள். ஆனால் நான் அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டேன். அந்த படம் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. என் மனதுக்கு நெருக்கமான படம் அது’ என்று கூறியுள்ளார். #Hansika #AjithKumar

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் அஜித் வழிநடத்திய தக்ஷா குழுவுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. #ThalaAjith #DakshaTeam #AjithKumar
    நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாமல் புகைப்படக் கலை, பைக் ரேஸ், கார் ரேஸ், ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை இயக்குதல் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டுபவர்.

    விவேகம் படப்பிடிப்பின்போது அஜீத். ஆளில்லா விமானத்தை ரிமோட் மூலம் இயக்கும் வீடியோ கடந்த ஆண்டு வெளியாகி வைரலானது.

    உலகின் பல்வேறு நாடுகள் ஆளில்லா விமானங்களை இயற்கை பேரிடர் சமயங்களில் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி வளாகத்தில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா எனும் குழுவை உருவாக்கினர்.



    இந்த குழுவின் ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே ரிமோட் மூலம் வாகனங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான அஜித்திடம் பொறுப்பு கொடுக்கப்பட்டதால் தக்‌ஷா குழு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பல்கலைக்கழக அளவிலான ஏரோ டிசைன் போட்டியில் தக்ஷா குழு தங்களது திறனை வெளிப்படுத்தியது.

    இதையடுத்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்டில் நடந்த யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் தக்ஷா குழு பங்கேற்றது.

    அஜித் ஆலோசகராக இருந்து வழிநடத்திய தக்‌ஷா அணிக்கு அந்த சர்வதேசப் போட்டியில் 2-வது இடம் கிடைத்துள்ளது.



    மேலும் அஜித் மேற்பார்வையில் தக்‌ஷா அணியினர் உருவாக்கிய ஆளில்லா விமானம் அதிக நேரம் வானில் பறந்து சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியின் இறுதிச்சுற்றில் 8 நாடுகளை சேர்ந்த 11 குழுக்கள் தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது. #ThalaAjith #DakshaTeam #AjithKumar 

    சினிமாவைப் பொறுத்தவரையில் எனக்கு அஜித்தை பிடிக்கும் என்று கூறியுள்ள சிம்பு, விஜய் எப்பவும் எனக்கு அண்ணன் மாதிரிதான் என்று கூறியுள்ளார். #Vijay #STR
    சிம்பு தனது தொடக்க காலத்தில் அஜித் ரசிகராக அறியப்பட்டவர். திடீர் என்று தன்னை விஜய் ரசிகர் என்று கூற சமூக வலைதளங்களில் பரபரப்பானது. அஜித் - விஜய் இருவரின் ரசிகர்களும் மோதிக் கொண்டனர்.

    விஜய் - அஜித் இருவரில் யாரை பிடிக்கும்? விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று ஒரு பேட்டியில் சிம்புவிடம் கேட்கப்பட்டது.’ எனக்கு விஜய் அண்ணாவை பர்சனலாத் தெரியும், பிடிக்கும். சினிமாவில் எனக்கு அஜித் சாரைப் பிடிக்கும். நான் எப்பவும் வெளிப்படையா இருந்திருக்கேன்.

    அந்த வி‌ஷயத்தை விஜய் அண்ணா தப்பா எடுத்துக்கிட்டதில்லை. அவருக்கு நான் உண்மையா தான் இருக்கேன். அது அவருக்குப் பிடிக்கும். அவர் நல்லா நடிச்சிட்டு இருக்கார். சமுதாயத்து மேல அக்கறை இருக்கு. பின்னாடி அவர் அரசியலுக்கு வரவும் வாய்ப்பு இருக்கு.



    நான் எப்பவும் அவர்கிட்ட தம்பியா பழகியிருக்கேன். அவர் அப்போ யார்கிட்டேயும் அவ்வளவா பேசமாட்டார். நிகழ்ச்சிகள்ல பார்த்தா நான் மட்டும் அவர்கிட்ட போய் பேசுவேன். அப்புறம் ரெண்டு பேரும் அவ்வளவா நெருக்கமாகலை. ஆனா, எப்பவும் அவர் எனக்கு அண்ணன் மாதிரிதான்.’ என்று கூறி இருக்கிறார். #Vijay #STR

    தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் அஜித் மற்றும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் போஸ்டர் மற்றும் சர்கார் படத்தின் டீசர் சிறப்பு விருந்தாக விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #AjithKumar #Vijay
    விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். அஜித், சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    சமீபகால அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் சர்கார் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமியும் நடிக்கின்றனர். தீபாவளிக்கு ரிலீசாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு மற்றும் சர்ச்சைக்குள்ளாகிய நிலையில், படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.



    அதேநாளில் தான் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் சீமராஜா, சமந்தாவின் யு டர்ன் படங்கள் ரிலீசாக இருக்கிறது. தனுஷின் வடசென்னை படத்தையும்  அதேநாளில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #AjithKumar #Vijay #Sarkar #Viswasam

    ×