search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்.கே.ஜி."

    இலவச எல்.கே.ஜி. சேர்க்கை தொடர்பாக சேலம், நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் இன்று குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு, பெயர் பட்டியல் பலகையில் ஒட்டப்பட்டது.
    சேலம்:

    2022-2023-ம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 ன்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத  இடஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு 20.04.2022 முதல் 25.05.2022 வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

    இதனை தொடர்ந்து, அவற்றில் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் விவரம் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையில் கடந்த 28-ந்தேதி  ஒட்டப்பட்டது.

    தகுதியான விண்ணப்பங்கள் 25 சதவீத  இடஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக உள்ள பள்ளிகளில் இன்று (30-ந்தேதி) குலுக்கல் முறையில்    தெரிவு செய்து மாணவர் சேர்க்கை வழங்கப்படும் என கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

    குலுக்கல் மூலம் தேர்வு இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு குலுக்கல் நடைபெறும் நேரம் தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தையின் பிறந்த சான்றிதழ், சாதி சான்றிதழ், நலிவடைந்த பிரிவினருக்கான வருமான சான்று, ஆதார்  அட்டை, புகைப்படம், பெற்றோரின் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கூறப்பட்டது.

    அதன்படி இன்று காலை 9 மணிக்கு முன்பாக  பெற்றோர்கள் உரிய ஆவணங்களுடன் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளுக்கு வந்திருந்தனர்.  ஒரு இடத்திற்கு பலர் விண்ணப்பித்திருந்ததால்  பள்ளி கல்வித்துறை சார்பில்  பள்ளிகளில் குலுக்கல் முறையை கண்காணிக்க  ஆசிரியர் பயிற்றுநர், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

    காலை 10 மணி அளவில் வகுப்பறையில்  வைத்து மாணவ- மாணவிகளின் பெயர்கள் துண்டு சீட்டுக்களில் எழுதி அட்டை பெட்டிகளில் போடப்பட்டது. இதையடுத்து பெற்றோர், பள்ளி நிர்வாகம் முன்னிலையில் அரசு அதிகாரி மேற்பார்வையில்  அட்டை பெட்டி குலுக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு மாணவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    இன்று  பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு  மையமாக செயல்பட்ட பள்ளிகளில் மட்டும் தேர்வு முடிந்ததும் பிற்பகல் வேளையில்  குலுக்கல்  நடைபெற்றது.

    பெயர் பட்டியல் இந்த குலுக்கல் மற்றும் குலுக்கல் அல்லாத முறையில் தேர்வு   செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் அரசு அதிகாரியிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியது.  மேலும் இந்த தேர்வு  பட்டியலும் பள்ளி நோட்டீசு பலகையில்   ஒட்டப்பட்டது.  மேலும் உடனுக்குடன்  இந்த குழந்தைகளுக்கு இலவச எல்.கே.ஜி. சேர்க்கை   வழங்கப்பட்டது.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் பேட்ட படம் பொங்கல் ரேசில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth #Viswasam
    அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னணி நடிகர்களின் படங்கள் ஆக்கிரமித்துள்ளன. அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் பொங்கலுக்கு ரிலீசாகவிருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினியின் பேட்ட, சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி உள்ளிட்ட படங்கள் பொங்களுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டன.

    இவ்வாறாக பெரிய படங்கள் பொங்கலுக்கு படையெடுத்துள்ளதால் கடைசி நேரத்தில் எந்த படமாவது தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்று உறுதி என்று எதிர்பார்த்து வந்த நிலையில், தகவல்படி ரஜினிகாந்தின் பேட்ட, பொங்கல் ரேசில் இருந்து விலகவிருப்பதாக கூறப்படுகிறது. 

    பேட்ட படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் பலரும் கேட்டுக் கொண்டுள்ளார்களாம். மேலும், தயாரிப்பாளர் சங்கமும் பேட்ட படத்தை பொங்கலில் இருந்து வேறு தேதிக்கு மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 



    எனவே பேட்ட படம் பொங்கல் ரேசில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பேட்ட பொங்கல் ரேசில் இருந்து விலகும் பட்சத்தில் மற்ற மூன்று படங்களும் திரையரங்குகளை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் ஒரு சில சிறு பட்ஜெட் படங்களும் ரிலீசாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. #Petta #Rajinikanth #Viswasam

    அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. தொடங் கும் முடிவு சட்டசபையில் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #minister #sengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.40 லட்சம் செலவில் அவசர சிகிச்சை பிரிவு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குடிமராமத்து என்ற பெயரில் இதுவரை கண்டிராத வகையில் தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. மழைநீர் சேமிப்பு முறையில் புதிய புரட்சியை தமிழகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் 5 வயது நிரம்பிய மாணவர் களை மட்டுமே பள்ளிக்கூடங்களில் சேர்க்க முடியும் என்று இந்திய அரசியலைப்பு சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் தனியார் பள்ளிக்கூடங்களில் 3 வயதில் இருந்து பயிற்சி அளிக்கிறார் கள். இதுபற்றி அரசு ஆய்வு செய்துகொண்டு இருக்கிறது. இதுதொடர்பாக என்ன முடிவு எடுக்கப்படும் என்பது சட்டசபையில் தெரிவிக்கப்படும். வெளியில் கருத்து கூற இயலாது.



    தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டண விவரங்களை பள்ளிக்கூடங்களின் முன்பு வைக்க வேண்டும் என்ற அறிவிப்பு அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.  #minister #sengottaiyan
    ×