search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth arrested for"

    • சாந்தியின் கழுத்தில் இருந்த தங்க செயினை வழிப்பறி செய்து பறித்து சென்றார்.
    • விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை கருப்புசாமி என்பவர் தங்க செயினை வழிப்பறி செய்தது தெரிந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ள கிராமம் எம்.பி.என்.புரம் நெசவாளர் காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவருடைய மகன் கவின் குமார்.

    கடந்த 3 மாத்திற்கு முன்பு இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் ஓட்டப்பாறை பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் சாந்தியின் கழுத்தில் இருந்த தங்க செயினை வழிப்பறி செய்து பறித்து சென்றார்.

    இதனையடுத்து 1½ பவுன் தங்க செயின் திருட்டு போனதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம் என்றும் இச்சம்பவம் குறித்து கவின்குமார் சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கருப்புசாமி (35) என்பவர் இந்த பெண்ணிடம் தங்க செயினை வழிப்பறி செய்தது தெரிந்தது.

    போலீசார் அவரை கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மகேந்திரன் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    • அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் அடுத்த குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் சம்பவத்தன்று கே.என்.பாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (24) என்பவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இரு ந்தார்.

    அப்போது அந்த மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப் பட்டது.

    அதே போல் சதுமுகை பகுதியை சேர்ந்த கணேசன் (55) என்பவர் டி.ஜி.புதூர் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மொபட்டும் திருடப்பட்டதாக பங்களாப்புதூர் போலீசில் புகார் செய்ய ப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூர் வேட்டுவன் புதூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் ஏளூர் வேட்டு வன் புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மகேந்திரன் (36) என்பதும், அவர் நவீன்குமார் மற்றும் கணேசன் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.

    இதனையடுத்து மகேந்திரன் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
    • பவானியில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை திருடியதும் ஒப்புக்கொண்டார்.

    பவானி:

    பவானி பழைய காவிரி ஆற்று பாலம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன், சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பிண்ணாக பதில் அளித்தார்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது ஈரோடு லக்காபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கருவாமணி என்கிற மணிகண்டன் (24) என்பதும், பவானியில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை திருடியதும் ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து மோட்டார்சைக்கிள் திருடிய குற்றத்திற்காக கருவாமணி என்கிற மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ேமலும் அவரிடம் இருந்த மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பவானி மேட்டூர் மெயின் ரோடு பூக்கடை பகுதியில் ஒரு வாலிபர் வந்து கொண்டி ருந்தனர்.
    • வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கி ளை திருடியது தெரிய வந்தது.

    பவானி:

    பவானி செங்காடு பகுதியை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவர் பவானி அருகில் உள்ள சேர்வ ராயன்பாளையம் பகுதியில் உள்ள தனது தங்கையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அவர் மோட்டார் சைக்கி ளை அவரது தங்கை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு சாவியை வண்டியிலேயே விட்டு விட்டு வீட்டுக்கு சென்றார்.

    பிறகு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடி பார்த்தும் விசாரித்தும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவர் பவானி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் பவானி மேட்டூர் மெயின் ரோடு பூக்கடை பகுதியில் ஒரு வாலிபர் வந்து கொண்டி ருந்தனர். அவர் மீது சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீ சார் அவரை நிறுத்தி விசா ரணை நடத்தினர்.

    இதில் அவர் முன்னுக்கு முரணாக பதில் கூறினார். இதையடுத்து அந்த வாலி பரை போலீஸ் நிலை யத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ஈரோடு பி.பி. அக்ரகாரம் பூம்புகார் நகரை சேர்ந்த கார்த்திகேயன் (27) என்பது தெரிய வந்தது.

    மேலும் ஈரோடு தினசரி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த அவர் பவானி, சேர்வராயன் பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கி ளை திருடியது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடத்தூர் போலீசார் சிங்கிரி பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.
    • அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை பின்புறம் ஒருவர் அனுமதி யின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பெருமாள் மற்றும் போலீசார் கோபிசெட்டி பாளையம் அடுத்த சிங்கிரி பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை பின்புறம் ஒருவர் அனுமதி யின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார். போலீசாரை கண்டதும் அவர் அங்கு இருந்து தப்பி ஓடினார். போலீசார் அவரை சுற்று வளைத்து பிடித்தனர்.

    போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கோவை மாவ ட்டம் நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (41) என்பதும், அவர் சிங்கிரிபாளையம் பகுதியில் தங்கி அனுமதி யின்றி மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.19 ஆயிரத்து 450 மதிப்புள்ள 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோபிசெட்டிபாளையம் எருமைக்காரபாளையம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் எருமைக்காரபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புல னாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெ க்டர் பன்னீர் செல்வம் தலைமையில் அப்பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அவ்வழி யாக சந்தேகப்படும்படியாக ஆம்னி கார் ஒன்று வந்தது.

    காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (35) என்பதும், ரேஷன் அரிசியை வடமாநிலத்த வர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சிவக்குமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியும், கடத்த லுக்கு பயன்படு த்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பங்களாப்புதூர் போலீசார் கொங்கர்பாளையம் குமரன் கோவில் மலையடிவாரத்தில் வாகன சோதனையில் ஈடு பட்டனர்.
    • அப்போது ஒரு வாலிபர் மொபட்டில் வந்தார். போலீசார் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள மாதையன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 44). இவர் சம்பவ த்தன்று டி.என்.பாளையம் அண்ணா சிலை பகுதியில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரோடு அனுமன் நகருக்கு நண்பரின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு மொபட்டில் சென்றார்.

    இதையடுத்து அவர் அந்த பகுதியில் ரோட்டோரம் மொபட்டை நிறுத்தி விட்டு நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்து பார்த்தார். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மொபட் காணாமல் போனது.

    மொபட் குறித்து அக்கம்பக்கம் விசாரித்தும், தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. இதை யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து ரவி பங்க ளாப்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பங்களாப்புதூர் போலீசார் கொங்கர்பாளையம் குமரன் கோவில் மலையடிவாரத்தில் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது ஒரு வாலிபர் மொபட்டில் வந்தார். போலீசார் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீ சார் தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர்.

    இதில் அவர் கொங்கர்பாளையம் சாவடி வீதியை சேர்ந்த சுபாஷ் (22) என்பதும், ரவியின் மொபட்டை திருடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து பங்களா ப்புதூர் போலீசார் சுபாஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • பவானி அருகே உள்ள போத்தநாயக்கன் புதூர் பகுதியில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதனையடுத்து அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் பிரபுவை கைது செய்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள போத்தநாயக்கன் புதூர் பகுதியில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பவானி போலீசார் சென்று சோதனை மேற்கொ ண்டனர். அப்போது போத்தநாயக்கன்புதூர் சுடுகாடு அருகில் உள்ள முட்புதர் பகுதியில் சாக்கு மூட்டையில் விற்பனை செய்ய பிராந்தி மற்றும் பீர் பாட்டில்களை வாலிபர் ஒருவர் வைத்து இருந்தது தெரியவந்தது.‌

    அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஈரோடு சூரம்பட்டி வலசு, பாண்டியன் வீதியை சேர்ந்த பிரபு (25) என்பதும், சமையல் வேலை செய்து வரும் இவர் அனுமதியின்றி மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் பிரபுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×