search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொபட் திருடிய வாலிபர் கைது
    X

    மொபட் திருடிய வாலிபர் கைது

    • பங்களாப்புதூர் போலீசார் கொங்கர்பாளையம் குமரன் கோவில் மலையடிவாரத்தில் வாகன சோதனையில் ஈடு பட்டனர்.
    • அப்போது ஒரு வாலிபர் மொபட்டில் வந்தார். போலீசார் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள மாதையன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 44). இவர் சம்பவ த்தன்று டி.என்.பாளையம் அண்ணா சிலை பகுதியில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரோடு அனுமன் நகருக்கு நண்பரின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு மொபட்டில் சென்றார்.

    இதையடுத்து அவர் அந்த பகுதியில் ரோட்டோரம் மொபட்டை நிறுத்தி விட்டு நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்து பார்த்தார். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மொபட் காணாமல் போனது.

    மொபட் குறித்து அக்கம்பக்கம் விசாரித்தும், தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. இதை யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து ரவி பங்க ளாப்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பங்களாப்புதூர் போலீசார் கொங்கர்பாளையம் குமரன் கோவில் மலையடிவாரத்தில் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது ஒரு வாலிபர் மொபட்டில் வந்தார். போலீசார் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீ சார் தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர்.

    இதில் அவர் கொங்கர்பாளையம் சாவடி வீதியை சேர்ந்த சுபாஷ் (22) என்பதும், ரவியின் மொபட்டை திருடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து பங்களா ப்புதூர் போலீசார் சுபாஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×