search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை பறித்த"

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
    • 2 பேரும் மூதாட்டியை தாக்கி தங்க நகைகளை பறித்து சென்றது தெரியவந்தது.

    பவானி:

    பவானி காளிங்கராய ன்பாளையம் மூவேந்தர் நகர் பகுதியில் வசிப்பவர் ராஜா. இவருடைய மனைவி உமா சாந்தி. ராஜாவின் தாய் குஞ்சம்மாள் (94) வசித்து வந்து உள்ளனர். ராஜாவின் மனை வி உமா சாந்தி கவுந்தப்பாடி புதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    அவரை தினசரி ராஜா தனது வாகனத்தில் சென்று வீட்டிற்க்கு அழைத்து வருவது வழக்கமாகக் கொண்டுள்ளார். சம்பவத்தன்று தனது வீட்டில் தாய் குஞ்சமாவை விட்டுவி ட்டு மனைவியை அழைத்து வர ராஜா சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது தனது தாய் ரத்த வெள்ளத்தில் பலத்த காயத்துடன் கழுத்து மற்றும் கைகளில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றது தெரியவந்தது.

    காயத்துடன் அவதி பட்டு க்கொண்டு இருந்த அவரை மீட்டு பவானி அரசு மருத்துவ மனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜகவர் உத்தர வுபடி பவானி டி.எஸ்.பி. சித்தோடு இ ன்ஸ்பெக்டர் உட்பட போலீ சார் சம்பவ இடம் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொ ண்டனர். அப்பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு விசா ரணையை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில் சித்தோடு போலீசார் கவுந்தப்பாடி மெயின் ரோடு பெரியார் நகர் பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசார ணை மேற்கொ ண்டனர். அவர்கள் 2 பேரும் முன்னுக்கு முரணாக பதில் அளித்த நிலையில் சித்தோடு போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட னர்.

    விசாரணையில் பவானி மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (45), திருப்பூர் வருவாய்த்து றையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் இவரும், இவரின் நண்பரான நாமக்கல் மாவட்டம் குமராபா ளைய த்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பாலூ (47) என்பது தெரியவந்தது.

    மேலும் குடிப்பழ க்கத்தி ற்கு அடிமையான இவர்கள் பணம் தேவை ப்பட்ட நிலையில் ராஜாவி ன் தாய் குஞ்சம்மாள் வீட்டில் தனியாக இருப்பதை கண்டு உள்ளே நுழைந்த 2 பேரும் மூதாட்டியை தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் மற்றும் கையில் அணிந்திருந்த 3 பவுன் கொண்ட 2 தங்க வளையல்கள் என 5 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து சித்தோடு போலீசார் சரவணன் மற்றும் பாலூ ஆகிய 2 பேரையும் கைது செய்து ஈரோடு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் கோபி மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

    • சாந்தியின் கழுத்தில் இருந்த தங்க செயினை வழிப்பறி செய்து பறித்து சென்றார்.
    • விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை கருப்புசாமி என்பவர் தங்க செயினை வழிப்பறி செய்தது தெரிந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ள கிராமம் எம்.பி.என்.புரம் நெசவாளர் காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவருடைய மகன் கவின் குமார்.

    கடந்த 3 மாத்திற்கு முன்பு இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் ஓட்டப்பாறை பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் சாந்தியின் கழுத்தில் இருந்த தங்க செயினை வழிப்பறி செய்து பறித்து சென்றார்.

    இதனையடுத்து 1½ பவுன் தங்க செயின் திருட்டு போனதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம் என்றும் இச்சம்பவம் குறித்து கவின்குமார் சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கருப்புசாமி (35) என்பவர் இந்த பெண்ணிடம் தங்க செயினை வழிப்பறி செய்தது தெரிந்தது.

    போலீசார் அவரை கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×