search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் திருடிய"

    • மோட்டார் சைக்கிளை காணவில்லை.
    • கண்காணிப்பு கேமிராவில் மோட்டார் சைக்கிளை திருடும் காட்சி பதிவாகி இருந்தது.

    அறச்சலூர்:

    அறச்சலூர் தலவுமலையில் ஓட்டல் நடத்தி வருபவர் முத்துசாமி (55). இவர் கடந்த 3-ந் தேதி தனது ஓட்டலில் வழக்கம்போல் வேலைநேரம் முடிந்த பின்னர் தனக்கு சொந்த மான மோட்டார்சை க்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் வந்து பார்த்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இது குறித்து ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது அதில் மோட்டார் சைக்கிளை திருடும் காட்சி பதிவாகி இருந்தது.

    அது நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை சேர்ந்த பழனிமுத்து என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (40) என்பது தெரிய வந்தது. இவர் ஓட்டலி்ல் 2 மாதங்கள் வேலை செய்து விட்டு நின்றவர் என்பதும் தெரியவந்தது.

    இந்த நிலையில் அறச்சலூர் போலீசார் பூந்துறையில் இருந்து எழுமாத்தூர் செல்லும் ரோட்டில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்ததில் அவர் அறச்சலூர் தலவுமலையில் ஓட்டலில் நிறுத்தியிருந்த ேமாட்டார் சைக்கிளை திருடிய கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அறச்சலூர் போலீசார் கோபாலகிருஷ்ணனை கைது செய்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தனர்.
    • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் சிறையில் அடைத்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளி யம்பட்டி அடுத்த பவானிசாகர் பசுவா பாளையத்தை சேர்ந்த வர் ராமகிருஷ்ணன் (வயது 27). இவர் தொட்ட ம்பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

    அப்போது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் மோட்டார் சைக்கிளை திருடியது மறு வாழ்வு முகாமை சேர்ந்த மோகன்ராஜ் (27) என தெரிய வந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சாலஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் சிறையில் அடைத்தனர்.

    • ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
    • சக்திவேலை பவானி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பவானி:

    தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சபாநாயகன். இவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார். அவர் பவானி பூக்கடை வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வரு கிறார்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் என கூறப்படு கிறது. இதை தொடர்ந்து அவர் நள்ளிரவு வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணா ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் மோட்டார் சைக்கிள் கிடைக்க வில்லை. இது குறித்து பவானி போலீ சில் சபாநாயகன் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பவானி சப்- இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் பவானி பழைய பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை நிறுத்தி போலீசார் விசா ரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து அவரை போலீஸ் நிலைய த்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் சேலம் மாவட்டம் ஓமலூர் பாப்ப ம்பட்டி சோழவண்டி வளவு கிராமத்தை சேர்ந்த சக்தி வேல் (24) என்பதும் பவானி பூக்கடை வீதியில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது. வெல்டர் தொழில் செய்து வரும் சக்திவேல் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் திரு ட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறி முதல் செய்தனர். இதை தொடர்ந்து சக்திவேலை பவானி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அடையாளம் தெரியாத ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் ஈங்கூர் ரோட்டில் உள்ள கொளத்துப்பாளையம் பகுதியில் அப்பத்தாள் கோயில் அருகே டெக்ஸ்டைல் கடை உள்ளது.

    இங்கு கோபிநாத் என்பவர் அவருடைய நண்பரின் மோட்டார் சைக்கிளை கடையின் உள்பகுதியில் நிறுத்திவிட்டு உள்ளே இருந்துள்ளார்.

    மோட்டார் சைக்கிள் பூட்டப்படாமல் சாவியுடன் நின்றுள்ளது. அப்போது அடையாளம் தெரியாத ஒரு வாலிபர் அங்கு வந்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றார்.

    பின்னர் அந்த டெக்ஸ்டைல் கடையில் இருந்த ஊழியர்கள் பின் தொடர்ந்து தேடிய போது பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையத்தில் மோட்டார் சைக்கிளுடன் அந்த திருடனை மடக்கி பிடித்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட்டை மாற்றியது தெரியவந்தது. பின்னர் அவரை சென்னிமலை போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் அவரது பெயர் சந்தோஷ்குமார் (21) என்பதும், திருப்பூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தற்போது பெருந்துறை அடுத்த பாலக்கரையில் உள்ள உறவினர் வீட்டின் அருகே வீடு வாடகைக்கு எடுத்து கூலி வேலை செய்து வருகிறார்.

    மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

    • பவானி மேட்டூர் மெயின் ரோடு பூக்கடை பகுதியில் ஒரு வாலிபர் வந்து கொண்டி ருந்தனர்.
    • வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கி ளை திருடியது தெரிய வந்தது.

    பவானி:

    பவானி செங்காடு பகுதியை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவர் பவானி அருகில் உள்ள சேர்வ ராயன்பாளையம் பகுதியில் உள்ள தனது தங்கையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அவர் மோட்டார் சைக்கி ளை அவரது தங்கை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு சாவியை வண்டியிலேயே விட்டு விட்டு வீட்டுக்கு சென்றார்.

    பிறகு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடி பார்த்தும் விசாரித்தும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவர் பவானி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் பவானி மேட்டூர் மெயின் ரோடு பூக்கடை பகுதியில் ஒரு வாலிபர் வந்து கொண்டி ருந்தனர். அவர் மீது சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீ சார் அவரை நிறுத்தி விசா ரணை நடத்தினர்.

    இதில் அவர் முன்னுக்கு முரணாக பதில் கூறினார். இதையடுத்து அந்த வாலி பரை போலீஸ் நிலை யத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ஈரோடு பி.பி. அக்ரகாரம் பூம்புகார் நகரை சேர்ந்த கார்த்திகேயன் (27) என்பது தெரிய வந்தது.

    மேலும் ஈரோடு தினசரி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த அவர் பவானி, சேர்வராயன் பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கி ளை திருடியது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • திருட முயற்சி செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கோவை:

    கோவை அன்னூர் பசூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவர் அங்குள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் தனது மோட்டார் சைக்கிளில் பசூர் பகுதிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றார். அங்கு தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தி மண்டபத்திற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளிவே வந்தார்.

    அப்போது அவரது மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் திருட முயற்சி செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ராஜ்குமார் தனது நண்பர்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் அவரை அன்னூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    விசாரணையில் அந்த வாலிபர் ஈரோட்டை சேர்ந்த அருண்குமார் (27) என்பது தெரிவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×