search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
    X

    மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

    • அடையாளம் தெரியாத ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் ஈங்கூர் ரோட்டில் உள்ள கொளத்துப்பாளையம் பகுதியில் அப்பத்தாள் கோயில் அருகே டெக்ஸ்டைல் கடை உள்ளது.

    இங்கு கோபிநாத் என்பவர் அவருடைய நண்பரின் மோட்டார் சைக்கிளை கடையின் உள்பகுதியில் நிறுத்திவிட்டு உள்ளே இருந்துள்ளார்.

    மோட்டார் சைக்கிள் பூட்டப்படாமல் சாவியுடன் நின்றுள்ளது. அப்போது அடையாளம் தெரியாத ஒரு வாலிபர் அங்கு வந்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றார்.

    பின்னர் அந்த டெக்ஸ்டைல் கடையில் இருந்த ஊழியர்கள் பின் தொடர்ந்து தேடிய போது பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையத்தில் மோட்டார் சைக்கிளுடன் அந்த திருடனை மடக்கி பிடித்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட்டை மாற்றியது தெரியவந்தது. பின்னர் அவரை சென்னிமலை போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் அவரது பெயர் சந்தோஷ்குமார் (21) என்பதும், திருப்பூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தற்போது பெருந்துறை அடுத்த பாலக்கரையில் உள்ள உறவினர் வீட்டின் அருகே வீடு வாடகைக்கு எடுத்து கூலி வேலை செய்து வருகிறார்.

    மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×