search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
    X

    கைது செய்யப்பட்ட சக்திவேல்.

    மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

    • ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
    • சக்திவேலை பவானி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பவானி:

    தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சபாநாயகன். இவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார். அவர் பவானி பூக்கடை வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வரு கிறார்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் என கூறப்படு கிறது. இதை தொடர்ந்து அவர் நள்ளிரவு வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணா ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் மோட்டார் சைக்கிள் கிடைக்க வில்லை. இது குறித்து பவானி போலீ சில் சபாநாயகன் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பவானி சப்- இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் பவானி பழைய பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை நிறுத்தி போலீசார் விசா ரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து அவரை போலீஸ் நிலைய த்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் சேலம் மாவட்டம் ஓமலூர் பாப்ப ம்பட்டி சோழவண்டி வளவு கிராமத்தை சேர்ந்த சக்தி வேல் (24) என்பதும் பவானி பூக்கடை வீதியில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது. வெல்டர் தொழில் செய்து வரும் சக்திவேல் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் திரு ட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறி முதல் செய்தனர். இதை தொடர்ந்து சக்திவேலை பவானி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×