search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
    X

    மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

    • மோட்டார் சைக்கிளை காணவில்லை.
    • கண்காணிப்பு கேமிராவில் மோட்டார் சைக்கிளை திருடும் காட்சி பதிவாகி இருந்தது.

    அறச்சலூர்:

    அறச்சலூர் தலவுமலையில் ஓட்டல் நடத்தி வருபவர் முத்துசாமி (55). இவர் கடந்த 3-ந் தேதி தனது ஓட்டலில் வழக்கம்போல் வேலைநேரம் முடிந்த பின்னர் தனக்கு சொந்த மான மோட்டார்சை க்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் வந்து பார்த்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இது குறித்து ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது அதில் மோட்டார் சைக்கிளை திருடும் காட்சி பதிவாகி இருந்தது.

    அது நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை சேர்ந்த பழனிமுத்து என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (40) என்பது தெரிய வந்தது. இவர் ஓட்டலி்ல் 2 மாதங்கள் வேலை செய்து விட்டு நின்றவர் என்பதும் தெரியவந்தது.

    இந்த நிலையில் அறச்சலூர் போலீசார் பூந்துறையில் இருந்து எழுமாத்தூர் செல்லும் ரோட்டில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்ததில் அவர் அறச்சலூர் தலவுமலையில் ஓட்டலில் நிறுத்தியிருந்த ேமாட்டார் சைக்கிளை திருடிய கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அறச்சலூர் போலீசார் கோபாலகிருஷ்ணனை கைது செய்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×