search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "workshop"

    • பிற மொழிகளை கற்று கொள்வதால் வெளி நாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும் போது பெரிய உதவியாக இருக்கும்.
    • “மனோபாவம் “ “முறையான தகவல்” தொடர்புடன் எப்படி நடந்து கொள்வது குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த துணை படிப்பு கல்லூரியான அலைய்டு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் மாணவ ர்களுக்கு நோயாளிகளிடம் நடந்து கொள்ளும் நெறிமுறை, மனோபாவம், மற்றும் தகவல் தொடர்பு குறித்த பயிலரங்கு தொடக்க விழா நடைபெற்றது.

    கல்லூரி டீன் ஆலிஸ் கிஸ்கு வரவேற்றார். பிம்ஸ் மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் பிரதீப் திலகன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரி அரசு சுகாதார துறை செயலாளர் உதய குமார் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அவர் பேசும்போது மாணவ பருவம் அற்புதமான பருவ மாகும். மருத்துவம் சார்ந்த துணை மருத்துவ படிப்பு படிக்கும் நீங்கள் நோயாளியுடன் அதிக நேரம் செலவிடுவதால் அவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அதுபோல பிற மொழிகளை கற்று கொள்வதால் வெளி நாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும் போது பெரிய உதவியாக இருக்கும். தகவல் தொடர்பில் மொழி மிகவும் அவசியம். என்றார்.

    பின்னர் மாணவ- மாணவிகள் நோயாளிகள் சிகிச்சைக்கு வரும்போது" நெறிமுறையுடன் நல்ல "மனோபாவம் " "முறையான தகவல்" தொடர்புடன் எப்படி நடந்து கொள்வது குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

    கல்லூரியின் "கீதம்" பாடலை ஸ்வேதா ஓமன் அறிமுகம் செய்தார். அதனை சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி பேராசிரியர் கார்த்திக் வெளியிட்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் பேராசிரி யர்கள் இக்பால், ரமாதேவி அனிதா ராமதாஸ் மஞ்சரி ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

    முடிவில் இயன் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ஶ்ரீ காந்த் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் ஹரிதாஸ் செய்திருந்தார்.

    • உதவிபேராசிரியை பார்வதிதேவி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.
    • சென்னை லைவ் வயர் கார்ப்பரேட் நிறுவன டெக் லீட் அணு பிரியன் செயல்முறை பயிலரங்கத்தை நடத்தினார்.

    நெல்லை:

    பாளை சாரதா மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டு துறை சார்பில் மாநில அளவிலான பயிலரங்கம் கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா, கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். கணினி பயன்பாட்டுத் துறை இயக்குனர் மற்றும் உதவிபேராசிரியை பார்வதிதேவி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக சென்னை லைவ் வயர் கார்ப்பரேட் நிறுவன டெக் லீட் அணு பிரியன் கலந்து கொண்டு 'புல் ஸ்டேக்கை பயன்படுத்தி க்ரட் ஆபரேஷன் மெர்ன்' என்ற தலைப்பில் செயல்முறை பயிலரங்கத்தை நடத்தினார். நிகழ்ச்சியில் நெல்லை லைவ்வைர் தொழில்நுட்பத் தலைவர் வரதராஜன், கல்லூரி பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கணினி பயன்பட்டுத்துறை உதவிபேராசிரியை சுடர்வேணி என்ற சுபா நன்றி கூறினார்.

    • புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிலரங்கம் தொடங்கியது
    • 5 நாட்கள் பயிலரங்கம் நடைபெறுகிறது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மற்றும் ஐசிடிஏசிடி அகாடமி இணைந்து நடத்தும் 5 நாட்கள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பப் பயிலரங்கம் நடைபெற்றது.கல்லூரி இயக்குனர்ஜெய்சன்கீர்த்தி ஜெயபரதன் வழிகாட்டுதலின் படிதுவங்கிய இப்பயிலரங்க துவக்க விழாவில், கல்லூரி முதல்வர்பாலமுருகன் தலைமையேற்று பயிலரங்கை துவக்கி வைத்தார். கணினி அறிவியல் துறை தலைவர்இளவரசி வரவேற்புரை நிகழ்த்தினார்.ஐசிடிஏசிடி அகாடமியின் முதன்மை தொழில் நுட்பபயிற்றுனர் ராகவேந்திரசாமி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் கல்லூரி டீன் ராபின்சன் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.இப்பயிலரங்கில் மைக்ரோசாப்ட் அஸுர்-ஏஐ-ன் பயன்பாடு குறித்து முழுமையாக விளக்கப்பட உள்ளது. மேலும்ஐசிடிஏசிடி அகாடமியின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் .காளிராஜ் உதவிப் பேராசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் சசிகலா நன்றியுரை கூறினார்.

    • 200 மாணவர்கள் பங்கேற்பு
    • தற்காப்புக் கலைகளின் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.

    புதுச்சேரி:

    விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி யின் நுண்கலை அமைப்பு சார்பில் மாணவ, மாணவிக ளுக்கான தற்காப்பு கலை பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    பயிற்சி பட்டறையில் பங்கேற்ற மாணவர்களை கல்லூரி டீன் டாக்டர் செந்தில்குமார் வாழ்த்தினார். நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குனர் (பொறுப்பு) ஆண்ட்ரூ ஜான் சில்வர்ஸ்டர் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக வீர ஆஞ்சநேயர் கலைக்கூட பயிற்சி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் அரவிந்த் தற்காப்புக் கலைகளின் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து சிலம்பம், வர்ம அடிமுறை உட்பட்ட தற்காப்பு நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் 11 பயிற்சியாளர்கள் தற்காப்பு கலைகளை செய்து காட்டினர். இதில் சுமார் 200 மாணவர்கள் பயனடைந்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அலுவலக நிர்வாகி சந்துரு, நுண்கலை அமைப்பு ஒருங்கிணைப்பா ளர் டாக்டர் சவிதா, உள்தர உறுதிசெல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யம்மா மற்றும் நுண்கலை அமைப்பு உறுப்பினர்கள் டாக்டர் நிவேதா, தமிழ்செல்வன் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • பஞ்சாயத்து தலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • கமுதி பகுதியில் ஆறு, மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் வளைய பூக்குளம் ஊராட்சியில் 53 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்க ளுக்கான குடிநீர் தேவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

    இதில் கமுதி யூனியன் சேர்மன் தமிழ்செல்வி பேசுகையில், கமுதி யூனியனில் குடிநீர் தேவைக்கான ஆய்வுக் கூட்டம் நடத்திய கலெக்டரை பாராட்டு கிறேன். இந்த யூனியனில் நீர் ஆதாரங்களை தூர்வாரி மழைநீர் கடலில் கலக்காமல் சேமித்தாலே குடிநீர் பிரச்சினை தீரும்.கமுதி பகுதியில் ஆறு, மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.

    மேலும் ஊராட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை கலெக்டரிடம் எடுத்துரைத்தனர். அனை வரும் காவிரி குடிநீர் திட்டத்தை அதிகாரிகள் முறையாக மராமத்து செய்வ தில்லை என்றும், உடைப்பு ஏற்பட்டுள்ள விவரத்தை தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை என்றும் சரமாரியாக குற்றம் சாட்டினர்.

    இதில் பயிற்சி கலெக்டர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, காவிரி குடிநீர் திட்ட பொறியா ளர்கள், கமுதி யூனியன் ஆணையாளர் மணி மேகலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபாண்டியன், யூனியன் மேலாளர் ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் பெரியசாமி தேவர் உள்பட பலரும் தங்களது கருத்து களை தெரிவித்தனர். வளையபூக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் நன்றி கூறினார்.

    • 200 எவர்சில்வர் பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன.
    • கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதியில் 200 எவர்சில்வர் பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன.நாள் ஒன்றுக்கு வாணா சட்டி, தகட்டு பானை, செம்பு, டேக் ஷா, இட்லி சட்டி என 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்தி ரங்கள் உற்பத்தி செய்யப்ப டுகிறது. இவை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளி ட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.இத்தொழிலை நம்பி 2000 தொழிலாளர்கள் உள்ளனர். சமீபத்தில் 16 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி புதிய சம்பள ஒப்பந்தம் நிறைவே ற்றப்பட்டது. எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சம்பள உயர்வை வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வியாபா ரிகளுக்கு தெரிவிக்கும் வகையிலும், தற்போது தொழில் மந்த நிலையில் இருப்பதாலும் நேற்று முதல் 23-ந் தேதி வரை உற்பத்தியை நிறுத்து வது என அறிவி க்கப்பட்டது.

    இதையடுத்து அனைத்து எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்களும் தங்கள் பட்டறைகளை மூடி உற்பத்தியை நிறுத்தினர். இதனால் உற்பத்தியின்றி பட்டறைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான பாத்திர உற்பத்தி பாதிக்கப்ப ட்டுள்ளது. 

    • குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மண்டல பயிலரங்கம் நாளை நடக்கிறது.
    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

    மதுரை

    மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-ன் கீழ் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தினை செயல் படுத்துதல் தொடர்பாக ஒருநாள் பயிலரங்கம் நாளை 30-ந்தேதி மதுரை தங்கம் கிராண்ட் ஓட்டலில் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தலைமை வகிக்கிறார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயி லரங்கம் நடைபெறும். இந்தப் பயிலரங்கத்தில் மதுரை மற்றும் திருநெல் வேலி மண்டலத்தில் உள்ள அனைத்து தொழிலாளர் உதவி ஆணையர்கள் (அம லாக்கம்) மற்றும் மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள பிறதுறைகளான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம், ஊரக மேம்பாடு, காவல் துறை, சமூகநலத்துறை, கல்வித்துறை, வருவாய் துறை, சமூக பாதுகாப்பு துறை, என்.ஜி.ஓ.க்கள் மற்றும் இதர அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றினார்.
    • பளு தூக்குதலின் விளைவாக ஏற்படும் உடல் மற்றும் மனநலம் பற்றிய கருத்துக்களை சிறப்பு விருந்தினர் உடற்பயிற்சியாளர் கந்தசாமி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பளு தூக்கும் மன்றம் மற்றும் ரத்த தான கழகம் இணைந்து நடத்திய 'பளு தூக்குதல் பயிற்சி பட்டறை' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பளு தூக்கும் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயவேல் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். பளு தூக்குதலின் விளைவாக ஏற்படும் உடல் மற்றும் மனநலம் பற்றிய கருத்துக்களை சிறப்பு விருந்தினர் உடற்பயிற்சியாளர் கந்தசாமி மாணவர்களிடம் கலந்துரையாடினார். கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குனர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் பளுதூக்குதலின் நன்மைகள் மற்றும் அதனால் உடல் மற்றும் மனம் எவ்வாறு தகுதி அடைகிறது என்பதை பற்றிய விஷயங்களை மாணவர்களிடம் கலந்துரையாடினார். ரத்த தானம் செய்பவர்கள் மன்றத்தின் இயக்குனர் பேராசிரியர் மோதிலால் தினேஷ் மாணவர்களை வழி நடத்தினார். பல்வேறு துறைகளை சேர்ந்த திரளான மாண வர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் பளு தூக்கும் மன்றத்தின் இயக்குனர் பேராசிரியர் தாவீது ராஜா நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. பணிமனை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்,

    கடலூர்:

    கடலூர் முதல் சென்னை வரை செல்லும் சொகுசு பஸ்களில் நடத்துனர் இல்லாமல் செல்வதை கண்டித்தும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வலியுறுத்தியும் ,போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்பிட கோரியும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. பணிமனை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் சம்மேளன சிறப்பு தலைவர் பாஸ்கர், பணிமனை நிர்வாகி ராஜ், முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. 

    • ராஜரத்தினம் கல்லூரியில் பயிலரங்கம் நடந்தது.
    • மாணவிகள் 184 பேர் கலந்து கொண்டு பயனடைத்தனர்.

    சிவகாசி

    சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையினர், ''பதின்ம வயதினருக்கான இடர்பாடுகளும் தீர்வுகளும்'' என்ற தலைப்பில் பயிலரங்கத்தை நடத்தினர். கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணா அசோக் ஆகியோர் நிகழ்வின் புரவலர்களாக வழி நடத்தினர். முதல்வர் பழனீசுவரி தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் பொன்னி வரவேற்றார்.

    தமிழ்த்துறைப்பேராசிரியர் கவிதா, முதல் அமர்விற்கான சிறப்பு விருந்தினர் மதுரை ஐகோர்ட்டு வக்கீல் முனியம்மாளை அறிமுகப்படுத்தினார். அவர் ''மகளிருக்கான சட்டங்கள்'' என்ற தலைப்பில் பேசினார்.

    தமிழ்த்துறைப்பே ராசிரியர் பத்மபிரியா, 2-ம் அமர்விற்கான சிறப்பு விருந்தினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநரக வணிக மேலாண்மைத்துறை உதவிப்பேராசிரியர் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். அவர் ''உள்ளங்கையில் வாழ்க்கை'' என்ற தலைப்பில் பேசினார். 3-ம் அமர்வில் சிவகாசி, ஹனுமந்தா அக்குபஞ்சர் மற்றும் இயற்கை மருத்துவர் பைரவனை தமிழ்த்துறைப்பேராசிரியர் தனலட்சுமி அறிமுகப்ப டுத்தினார்.

    அவர் "உடல்நலமும் மனநலமும்'' என்ற தலைப்பில் பேசினார். தமிழ்த்துறைத் தலைவர் பொன்னி நன்றி கூறினார். இதில் முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையைச் சேர்ந்த 17 பேராசிரியர்கள், அனைத்துத்துறையைச் சேர்ந்த மாணவிகள் 184 பேர் கலந்து கொண்டு பயனடைத்தனர்.

    • கடையநல்லூர் ரஹ்மானியபுரத்தை சேர்ந்த சுலைமான் அட்டை குளம் நெடுஞ்சாலை பகுதியில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.
    • தீ விபத்தில் டிராக்டர் . கார் ஆகியவை முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது. அருகில் நின்ற லாரியின் பிற்பகுதி முழுமையாக எரிந்தது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் ரஹ்மானியபுரம் 9-வது தெருவை சேர்ந்தவர் சுலைமான். இவர் கடையநல்லூர் அட்டை குளம் நெடுஞ்சாலை பகுதியில் நான்கு சக்கர வாகனம் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார் .

    அதன் பின்னர் இரவு காலை 11 மணிக்கு ஒர்க் ஷாப்பில் இருந்து அதிகமான புகைமூட்டத்துடன் தீ பற்றி எரிந்தது. கார், டிராக்டர் டீசல் டேங்க் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது .

    இதனைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் மேற்பார்வையில் கடையநல்லூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ஜெயராம் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் செங்கோட்டை யில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு துரிதமாக தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள பெட்ரோல் பல்க் மற்ற வேலைக்கு வந்த புதிய டிராக்டர்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    தீ விபத்தில் டிராக்டர் . கார் ஆகியவை முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது. அருகில் நின்ற லாரியின் பிற்பகுதி முழுமையாக எரிந்தது. விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது கார் பேட்டரி ஷாட் மூலம் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே வயலில் அறுவடை செய்து வைத்திருந்த எள் பட்டறைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா குரவப்புலத்தை சேர்ந்தவர் மனோகரன் இவர் தனக்கு சொந்தமான வயலில் எள் சாகுபடி செய்து இருந்தார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு எள்செடிகளை அறுவடை செய்து வயலில்பட்டறையாக வைத்து மூடி வைத்திருந்தார் சம்பவத்தன்று எள் பட்டறைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர்.

    இதில் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள எள் மற்றும் எள் செடிகள் முற்றிலும் எரிந்து சேதமானதுஇதுகுறித்து மனோகரன்வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். வேதாரண்யம் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    ×