search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணிமனை முன்பு  போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்

    பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. பணிமனை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்,

    கடலூர்:

    கடலூர் முதல் சென்னை வரை செல்லும் சொகுசு பஸ்களில் நடத்துனர் இல்லாமல் செல்வதை கண்டித்தும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வலியுறுத்தியும் ,போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்பிட கோரியும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. பணிமனை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் சம்மேளன சிறப்பு தலைவர் பாஸ்கர், பணிமனை நிர்வாகி ராஜ், முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.

    Next Story
    ×