search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman jewelry theft"

    விருத்தாசலம் அருகே இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் மதிப்பிலான நகையை மர்மநபர் பறித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள திருவெம்பார் கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவரது மனைவி சசிகலா (வயது 33). இவர் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம வாலிபர் ஒருவர் சசிகலாவின் அருகே வந்தார். அவர் உனது நகையை கழற்றி கொடு என்று கூறி கத்தியை காட்டி சசிகலாவை மிரட்டினார்.

    ஆனால், அவர் நகையை கழற்றி கொடுக்க மறுத்தார். இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம வாலிபர் திடீரென சசிகலாவின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.

    அதிர்ச்சி அடைந்த சசிகலா திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டவாறே அந்த வாலிபரை விரட்டி சென்றார். ஆனால், அதற்குள் அந்த மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இது குறித்து மங்களம் பேட்டை போலீசில் சசிகலா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடிவருகின்றனர்.
    திருப்பூரில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் தோட்டத்து பாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மனைவி ரத்தின லட்சுமி (25). பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது மகள் கனிஷ்காவுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். திருமுருகன் பூண்டி - பூலுவப்பட்டி சாலையில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.

    அவர்கள் ரத்தினலட்சுமி மொபட் மீது மோதுவது போல் வந்தனர். இதனால் மொபட்டை நிறுத்தினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ரத்தின லட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். நகையை பறி கொடுத்த ரத்தினலட்சுமி சத்தம் போட்டார். ஆனால் அந்த சமயத்தில் அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் 3 பேரும் எளிதாக தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.
    காட்பாடி அருகே ஓடும் ரெயிலில் ஆந்திர மாநில பெண்ணிடம் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    ஆந்திர மாநிலம், தாலுமன்சென்டர் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பிரகாசம்பாபு (வயது 63). இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் ஆபிரகம். இவர் கேரளாவில் பல் மருத்துவராக உள்ளார்.

    நேற்று முன்தினம் ஆபிரகமை பார்ப்பதற்காக ஐதராபாத் - திருவனந்தபுரம் நோக்கி செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சீராலாவில் இருந்து கொல்லம் நோக்கி கணவன்-மனைவி இருவரும் பயணம் செய்தனர்.

    அந்த ரெயில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்தை கடந்துவிட்டு, மெதுவாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த கவிதாவின் பையை மர்ம நபர் ஒருவர் பிடித்து இழுத்தார். திடுக்கிட்டு கவிதா முழித்து பார்ப்பதற்குள் அந்த மர்ம நபர் பையை திருடிக் கொண்டு, ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.

    கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு சக பயணிகள் உடனடியாக ரெயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    ரெயிலில் ரோந்து பணியில் இருந்த போலீசார் கவிதாவிடம் விசாரித்ததில், பையில் 3 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை அடைந்தது.

    இதுகுறித்து பிரகாசம்பாபு ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாலிஷ்போடுவது போல் நடித்து பெண்ணிடம் நகை கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூர் அருகே உள்ள பெருங்கோலி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி செந்தாமரை. நேற்று மாலை செந்தாமரை மட்டும் வீட்டில் இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக தெரிவித்தனர். இதனை நம்பிய செந்தாமரை 5 பவுன் நகையை அவர்களிடம் கொடுத்தார்.

    நகைகளுக்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்த போது 2 வாலிபர்களும் குடிக்க தண்ணீர் கொண்டு வரக்கோரி செந்தாமரையிடம் கூறினர்.

    இதையடுத்து செந்தாமரை தண்ணீர் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றார். உடனே 2 வாலிபர்களும் 5 பவுன் நகையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

    உத்திரமேரூர் அருகே உள்ள காரணிமண்டபத்தை சேர்ந்தவர் ஸ்டாலின். இவர் மனைவி பிரேமாவுடன் மோட்டார் சைக்கிளில் வயலூர் கூட்டுரோடு அருகே வந்து கொண்டிருந்தார். எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென ஸ்டாலின் ஓட்டி வந்த பைக் மீது மோதினார். இதில் ஸ்டாலினும், பிரேமாவும் கீழே விழுந்தனர்.

    உடனே அவன் பிரேமா அணிந்திருந்த நகையை பறித்து தப்பி ஓடிவிட்டான். அவன் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை வைத்து பெருநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராமேசுவரம் கோவிலில் பெண்ணிடம் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    மதுரை மாவட்டம் வலையங்குளம் பெருமாள் நகரை சேர்ந்தவர் அழகுமீனா. இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் ராமேசுவரத்துக்கு சென்றார்.

    ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்ற அழகுமீனா அங்குள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடுவதற்காக வரிசையில் காத்திருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் அழகுமீனா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை நைசாக பறித்து கொண்டு தப்பினார்.

    சிறிதுநேரம் பின் நகை திருடுபோனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அழகுமீனா இதுகுறித்து ராமேசுவரம் கோவில் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்மநபரை தேடி வருகிறார்.

    ராமேசுவரம் கோவிலில் இதுபோன்று நாள்தோறும் பக்தர்கள் நகை-பணத்தை இழக்கும் சம்பவம் அதிகாரித்துள்ளது. எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து கோவில் திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேனி அருகே தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.

    தேனி:

    தேனி அருகே வயல்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சுருளிமணி (வயது 53). இவர் சம்பவத்தன்று வீட்டின் மேல் மாடியில் தூங்கச் சென்றார். அப்போது தனது 5½ பவுன் செயினை ஒரு பையில் வைத்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்கி விட்டார்.

    அதிகாலையில் எழுந்து பார்த்தபோது செயினை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் சுருளிமணி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் செயினை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    நாகர்கோவிலில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் வடலிவிளை வயல் தெருவைச் சேர்ந்தவர் அமீர் சாகாவத் கான் (வயது 27). இவர் திருவிழா கடைகளில் துணி வியாபாரம் செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இவருக்கு, இரணியல் தலக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசினர். செல்போனிலும் பேசி மகிழ்ந்தனர்.

    அந்த பெண் தான் வேலையில்லாமல் தவிப்பதாகவும், தனக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து தரும்படி கூறியிருந்தார். அமீரும், அந்த பெண்ணுக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.

    கடந்த 5-ந் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் ஒரு வேலை ஏற்பாடு செய்து இருப்பதாகவும், உடனடியாக அங்கு வருமாறும் அந்த பெண்ணிடம் அமீர் கூறினார். அவர் சொன்னபடி அந்த பெண்ணும் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். அவர் வரும்போது திக்கணங்கோட்டைச் சேர்ந்த தனது தோழியையும் அழைத்து வந்திருந்தார்.

    அவர்கள் 2 பேரையும் வெளியே நிறுத்தி விட்டு அமீர் மட்டும் முதலில் அலுவலகத்துக்குள் சென்றார். பின்னர் ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி அங்கு அதிகாரி இருப்பார், அவரை போய் பாருங்கள், உங்களுக்கு வேலை போட்டு கொடுப்பார் என சொன்னார். போகும்போது நகை அணிந்து செல்ல வேண்டாம், என்னிடம் கழற்றி கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என்று அமீர் கூறினார்.

    அதை நம்பி 2 பெண்களும் தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி அமீரிடம் கொடுத்தனர். அமீர் சொன்னபடி அங்கு அலுவலகத்தில் எந்தவொரு அதிகாரியும் இல்லை. இதனால் 2 பெண்களும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். அப்போது அமீர் மாயமாகி இருந்தார்.

    அமீருடன் பழகிய பெண் கவரிங் நகைகள் மட்டுமே அணிந்திருந்தார். அவரது தோழி 2½ பவுன் நகை அணிந்திருந்தார். அந்த நகையுடன் அமீர் மாயமானது அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுபற்றி அந்த 2 பெண்களும் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அமீரை தேடி வந்தனர். நேற்று இரவு கோட்டார் பகுதியில் பதுங்கியிருந்த அமீரை போலீசார் கைது செய்தனர்.

    எனக்கு தலக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் அவர் நாகர்கோவிலில் உள்ள பூங்காவுக்கு வருவார். அங்கு பூங்காவில் அமர்ந்து பேசுவோம். நான் அந்த பெண்ணை காதலித்தேன். அவரை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினேன்.

    ஆனால் அந்த பெண்ணோ என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். இதனால் நான் ஏமாற்றம் அடைந்தேன். அதற்கு பழி வாங்குவதற்காக அவரிடம் இருந்து நகை பறிக்க முடிவு செய்தேன். அதற்காக வேலை வாங்கி தருவதாக கூறி அவரை நாகர்கோவில் வரவழைத்தேன். ஆனால் அவரோ தனது தோழியையும் வரவழைத்திருந்தார்.

    இருந்தாலும் எனது திட்டப்படி அவர்களிடம் இருந்து நகை பறித்தேன். வடசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நகையை அடகு வைக்கச் சென்றேன். அங்கு நான் பழகிய பெண்ணிடம் இருந்து வாங்கிய நகை கவரிங் என்பதும், அவர் தோழியிடம் இருந்து வாங்கிய 2½ பவுன் நகை மட்டும் ஒரிஜினல் என்பதும் தெரியவந்தது. அதனால் அந்த 2½ பவுன் நகையை மட்டும் அடகு வைத்து அந்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்தேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமீர் அடகு வைத்த நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். #Tamilnews
    சேலத்தில் பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 13 பவுன் நகை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம், ரெட்டியூரை சேர்ந்தவர் சாந்தி (வயது40). நேற்று மாலை இவர் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது மர்ம ஆசாமி ஒருவன் அவரது வீட்டிற்கு வந்தான். சாந்தியிடம் அவன் உங்கள் வீட்டில் பரிகாரம் செய்ய வேண்டும் என்றும், வீட்டில் பிரச்சனை இருப்பதாகவும் சொல்லி இதற்காக தனியாக பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறினான்.

    மேலும் பூஜை செய்தால் தான் உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும் என்றும் கூறினான். பூஜை செய்வதற்கு வீட்டில் உள்ள நகைகள் வேண்டும் என்று கேட்டுள்ளான். இதை உண்மை என்று நம்பிய சாந்தி தான் கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் நகையை கழற்றி அந்த மர்ம ஆசாமியிடம் கொடுத்தார். பின்னர் அந்த ஆசாமி நகையை ஒரு பையில் வைத்து பூஜை செய்வது போல் நடித்து, பின்னர் நகை இல்லாத வேறொரு பையை சாந்தி கையில் கொடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டான்.

    பையை திறந்து பார்த்த சாந்தி அதில் நகை இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சாந்தி அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் நகையை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். #Tamilnews
    மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவியை தாக்கி 6 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    மதுரை:

    மதுரை ஒத்தக்கடையை அடுத்துள்ள இடையபட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சங்கிலி. இவர் நேற்றிரவு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 25 வயது முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 மர்ம நபர்கள் திடீரென்று மோட்டார் சைக்கிளை மறித்தனர்.

    பின்னர் அந்த கும்பல் கணவன், மனைவியை சரமாரியாக தாக்கி சங்கிலி மனைவியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியது.

    இது குறித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ஒத்தக்கடை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சமூக விரோத சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே போலீசார் உரிய கவனம் செலுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. #Tamilnews
    ×