என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் பெண்ணிடம் நகை திருட்டு
ராமநாதபுரம்:
மதுரை மாவட்டம் வலையங்குளம் பெருமாள் நகரை சேர்ந்தவர் அழகுமீனா. இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் ராமேசுவரத்துக்கு சென்றார்.
ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்ற அழகுமீனா அங்குள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடுவதற்காக வரிசையில் காத்திருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் அழகுமீனா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை நைசாக பறித்து கொண்டு தப்பினார்.
சிறிதுநேரம் பின் நகை திருடுபோனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அழகுமீனா இதுகுறித்து ராமேசுவரம் கோவில் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்மநபரை தேடி வருகிறார்.
ராமேசுவரம் கோவிலில் இதுபோன்று நாள்தோறும் பக்தர்கள் நகை-பணத்தை இழக்கும் சம்பவம் அதிகாரித்துள்ளது. எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து கோவில் திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்