search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman jewelry theft"

    • ஒரு கட்டத்தில் கழுத்தில் இருந்த கத்தி தங்கமணியின் முகத்தில் குத்தியது. இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது.
    • தங்கமணியை உடனடியாக மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (55). இவரது மனைவி தங்கமணி (47). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார்கள்.

    கிருஷ்ணசாமி, தங்கமணி ஆகியோர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்கள். நேற்று இரவு மளிகை கடையை பூட்டி விட்டு கிருஷ்ணசாமி அருகே உள்ள தனது தோட்டத்துக்கு சென்று விட்டார்.

    அப்போது இரவு 10 மணியளவில் வீட்டில் அவரது மனைவி தங்கமணி மட்டும் தனியாக இருந்தார். அப்போது முகமூடி அணிந்த ஒரு மர்மநபர் திடீரென இவர்களது வீட்டிற்குள் நுழைந்தார்.

    பின்னர் முகமூடி நபர் திடீரென தங்கமணியின் கழுத்தில் கத்தியை வைத்து அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க தாலியை பறிக்க முயன்றார். அப்போது அவரிடம் இருந்து நகையை காப்பாற்ற தங்கமணி போராடினார்.

    இதில் ஒரு கட்டத்தில் கழுத்தில் இருந்த கத்தி தங்கமணியின் முகத்தில் குத்தியது. இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. இதனால் அவர் மர்மநபருடன் போராடுவதை விட்டு விட்டு கீழே விழுந்தார். இந்த நேரத்தில் தங்கமணியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மர்ம நபர் தப்பி ஓடினார்.

    பின்னர் தோட்டத்துக்கு சென்ற அவரது கணவர் கிருஷ்ணசாமி வீடு திரும்பினார். அப்போது மனைவி தங்கமணி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.

    இதையடுத்து தங்கமணியை உடனடியாக மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினர்.

    இந்த துணிகர நகை பறிப்பு சம்பவம் பற்றி தெரிய வந்ததும் வெள்ளிதிருப்பூர் போலீசார் மற்றும் அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் துப்பறியும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    தற்போது இந்த பகுதியில் கரும்பு, வாழைக்காய் வெட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் வெளி இடங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே தொழிலாளர்கள் போல் வந்து யாராவது நகை பறிப்பில் ஈடுபட்டார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சாலிகிராமத்தில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வதற்காக அஞ்சலி திருவான்மியூரில் இருந்து மாநகர பஸ்சில் வடபழனி வந்தார்.
    • பஸ்சில் இருந்து இறங்கியபோது அஞ்சலி தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    போரூர்:

    ஈஞ்சம்பாக்கம் அடுத்த வெட்டுவாங்கேனி பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி. வீட்டு வேலை பார்த்து வருகிறார்.

    இவர் சாலிகிராமத்தில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வதற்காக திருவான்மியூரில் இருந்து மாநகர பஸ்சில் (எண் 78) வடபழனி வந்தார். பஸ்சில் இருந்து இறங்கியபோது அஞ்சலி தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பஸ்சில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் அஞ்சலியின் நகையை பறித்து இருப்பது தெரியவந்தது.

    மதுரையில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் வக்கீலிடம் 3¼ பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை அய்யர் பங்களா அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகள் பூங்கொடியாள் (வயது 35) வக்கீல்.

    இவர் இருசக்கர வாகனத்தில் உத்தங்குடி சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்தனர்.

    அவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென பூங்கொடியாள் அணிந்திருந்த 3¼ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அண்ணாநகர் சதாசிவம் நகர் நக்கீரர் குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் பெங்களூருவில் என்ஜினீயராக உள்ளார். அவரது மனைவி ஜனனி (23).

    சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அவர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் ஜனனி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கி 5½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள தல்லாகுளத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 65). இவரது மகள் வாசுகி (36). இவரது கணவர் செல்வம். இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    வாசுகி தனது கணவருடன் சென்னை மதுரவாயலில் வசித்து வருகிறார். நேற்று காலை வாசுகி தல்லாகுளத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.

    நேற்று இரவு ஜெயலட்சுமி, வாசுகி ஆகியோர் சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்தே வராண்டாவில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் 2 மர்ம மனிதர்கள் ஜெயலட்சுமி வீட்டுக்குள் புகுந்தனர்.

    பின்பு அவர்கள் வாசுகியின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த அவர் வீட்டுக்குள் கொள்ளையர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட முயன்றார்.

    அப்போது ஆத்திரம் அடைந்த கொள்ளையன் ஒருவன் வாசுகியின் காலை பிடித்து இழுத்து தாக்கினான். இதில் நிலைகுலைந்த வாசுகி கீழே விழுந்தார். உடனே கொள்ளையர்கள் 2 பேரும் அவரது கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து மயிலம் போலீசில் வாசுகி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பெண்ணை தாக்கி நகை கொள்ளைபோன வீட்டை பார்வையிட்டனர். பின்பு வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிவிட்ட கொள்ளையர்களை வலை வீசி தேடிவருகிறார்கள்.

    நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    லாஸ்பேட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து சென்று விட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை அசோக் நகர் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் மகிமைதாஸ். ஓய்வு பெற்ற ரோடியர் மில் தொழிலாளி. இவரது மனைவி ரத்தினம் (வயது 65). இவர் முத்தியால் பேட்டை பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    ரத்தினம் தனது கணவருடன் தாகூர் நகரில் உள்ள தேவாலயத்துக்கு அவ்வப்போது சென்று பிரார்த்தனை செய்து விட்டு வருவது வழக்கம். ஆனால், நேற்று மகிமைதாஸ் வெளியே சென்று விட்டதால் ரத்தினம் மட்டும் தேவாலயத்துக்கு சென்றார். பின்னர் பிரார்த்தனை செய்து விட்டு மாலையில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அசோக்நகர் பாரதியார் வீதியில் வந்து கொண்டு இருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த ஒரு வாலிபர் திடீரென ரத்தினம் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் செயினை பறித்தான். ரத்தினம் திருடன்... திருடன் என்று அலறுவதற்குள் செயினுடன் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். பறிபோன தங்க செயினின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

    செயினை பறிகொடுத்த ரத்தினம் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் பெண்ணிடம் மர்மநபர் துணிகரமாக நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெருங்குடியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்து தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், பெருங்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது மர்ம நபர் ஒருவன், நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து சந்திர போசின் மனைவி அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

    விழித்து பார்த்த சந்திரபோஸ் மற்றும் குடும்பத்தினர் விரட்டிச் சென்றபோது மர்ம நபர் தப்பிச் சென்று விட்டான். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இது குறித்து பெருங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகிறார்.
    கும்பகோணத்தில் ரேசன் கடை பெண் ஊழியரிடம் 5 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் வட்டி பிள்ளையார் கோவிலை சேர்ந்தவர் கபீர்தாசன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி (வயது 45). இவர் ரே‌ஷன் கடை ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சாந்தி, தனது மகனை கும்பகோணம் பஸ் நிலையத்திற்கு அழைப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்

    அப்போது மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து சாந்தியை வழிமறித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து சாந்தி கும்பகோணம் தாலுகா போலீஸ் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழவந்தான் அருகே வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழவந்தான்:

    சோழவந்தான் அருகே உள்ள ஊத்துக்குளி கிராமத்தைச்சேர்ந்தவர் தமிழன் (வயது35), லாரி டிரைவர். இவரது மனைவி நந்தினி (24).

    நேற்று இரவு இவர்கள் வழக்கம்போல் வீட்டில் தூங்கினர். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்ததாக தெரிகிறது

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்மநபர் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் நைசாக புகுந்தார். அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நந்தினி கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பினான்.

    காலையில் எழுந்த நந்தினி நகை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து வீட்டுக்கு புகுந்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    நாகமலை புதுக்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்து வழிப் பறி ஆசாமிகள் தப்பி விட்டனர்.
    மதுரை:

    மதுரை செக்கானூரணியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 40). இவரது மனைவி சுதா. 2 பேரும் மோட்டார் சைக்கிளில் நாகமலை புதுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுதா அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி விட்டார். இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் ஆகும்.

    இது குறித்து ஜெயபிரகாஷ் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சுசீந்திரம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் செயினை மர்மநபர் பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    சுசீந்திரம் பள்ளம் லூர்து காலனி பகுதியை சேர்ந்தவர் மான்சிங். இவரது மனைவி கவிதா (வயது 38).

    இவர் நேற்று மாலையில் வீட்டில் மின்சாரம் தடைபட்டதால் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் முன்பக்கம் காற்றுக்காக படுத்திருந்தனர். அப்போது அவர்கள் அயர்ந்து தூங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் அந்த வழியாக வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மான்சிங்கின் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த கவிதாவின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் செயினை பறித்தார். இதில் தூங்கிக்கொண்டிருந்த கவிதா கண்விழித்து செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதில் கொள்ளையனின் கையில் 5 பவுன் செயின் சிக்கியது. கவிதாவின் கையில் ½ பவுன் டாலர் மட்டும் இருந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் தூங்கிக் கொண்டிருந்த மான்சிங் திடுக்கிட்டு எழுந்தார். அதறகுள் அந்த வாலிபர் 5 பவுன் தங்க சங்கிலியுடன் ஓட்டம் பிடித்தார். அவரை தொடர்ந்து விரட்டிச் சென்றனர். அதற்குள் அந்த வாலிபர் ஓடி மறைந்தார்.

    இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சலிம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக யாரேனும் சுற்றித் திரிகிறார்களா? என விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கொள்ளையன் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    சேலத்தில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் டேனியல். இவரது மனைவி ரோஸ் (வயது 47). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் சேலத்திற்கு வந்தனர்.

    பின்னர் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு திரும்பினர். மோட்டார் சைக்கிள் சேலம் ஜங்சனை அடுத்த புது ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவர்களை வழி மறித்தனர். திடீரென அதில் ஒரு நபர் ரோஸ் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதியினர் திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டனர். ஆனால் மர்ம நபர்கள் 2 பேரும் கண்ணிமைக்கும் நேரத்தில் செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஸ் கதறிய படியே சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் இந்த சாலையில் நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நிலக்கோட்டை அருகே வீடுபுகுந்து பெண்ணிடம் நகைபறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் காட்டு ராஜா. இவரது மனைவி கருப்பாயி(வயது47). சம்பவத்தன்று வீட்டு வேலைகளை முடித்துவிட்டு 2 பேரும் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு சமயத்தில் வீட்டினுள் புகுந்த மர்மநபர்கள் கருப்பாயி கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கசங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பாயி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஒன்றுதிரண்டனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தனர்.

    இதுகுறித்து விளாம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதேபகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடுபுகுந்து ஒரு கும்பல் பெண்ணிடம் நகைபறித்துச்சென்றனர்.

    மேலும் தோட்டங்களில் உள்ள மின்மோட்டார்கள் மற்றும் வயர்களை அடிக்கடி திருடிச்செல்கின்றனர். ஆனால் இதுவரை எந்த கொள்ளையர்களும் சிக்காததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே போலீசார் ரோந்துபணியை தீவிரப்படுத்தி கொள்ளை கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ×