search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடபழனியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    வடபழனியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு

    • சாலிகிராமத்தில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வதற்காக அஞ்சலி திருவான்மியூரில் இருந்து மாநகர பஸ்சில் வடபழனி வந்தார்.
    • பஸ்சில் இருந்து இறங்கியபோது அஞ்சலி தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    போரூர்:

    ஈஞ்சம்பாக்கம் அடுத்த வெட்டுவாங்கேனி பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி. வீட்டு வேலை பார்த்து வருகிறார்.

    இவர் சாலிகிராமத்தில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வதற்காக திருவான்மியூரில் இருந்து மாநகர பஸ்சில் (எண் 78) வடபழனி வந்தார். பஸ்சில் இருந்து இறங்கியபோது அஞ்சலி தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பஸ்சில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் அஞ்சலியின் நகையை பறித்து இருப்பது தெரியவந்தது.

    Next Story
    ×