என் மலர்
நீங்கள் தேடியது "மதுரை திருட்டு"
சோழவந்தான் அருகே வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான்:
சோழவந்தான் அருகே உள்ள ஊத்துக்குளி கிராமத்தைச்சேர்ந்தவர் தமிழன் (வயது35), லாரி டிரைவர். இவரது மனைவி நந்தினி (24).
நேற்று இரவு இவர்கள் வழக்கம்போல் வீட்டில் தூங்கினர். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்ததாக தெரிகிறது
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்மநபர் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் நைசாக புகுந்தார். அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நந்தினி கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பினான்.
காலையில் எழுந்த நந்தினி நகை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து வீட்டுக்கு புகுந்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
சோழவந்தான் அருகே உள்ள ஊத்துக்குளி கிராமத்தைச்சேர்ந்தவர் தமிழன் (வயது35), லாரி டிரைவர். இவரது மனைவி நந்தினி (24).
நேற்று இரவு இவர்கள் வழக்கம்போல் வீட்டில் தூங்கினர். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்ததாக தெரிகிறது
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்மநபர் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் நைசாக புகுந்தார். அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நந்தினி கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பினான்.
காலையில் எழுந்த நந்தினி நகை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து வீட்டுக்கு புகுந்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மதுரையில் இன்று காலையில் பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை:
மதுரை ஜெய்ஹிந்த்புரம் வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சங்கரசுப்பிரமணியன். இவரது மனைவி ஸ்ரீமதி (வயது 45). இவர் இன்று காலை குப்பை கொட்டுவதற்காக வீட்டில் இருந்து தெருமுனைக்கு நடந்து வந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென்று ஸ்ரீமதியை வழிமறித்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள், ஸ்ரீமதி கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியிலேயே கொள்ளையர்கள் இன்று காலை துணிகரமாக நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோலையழகுபுரம், சுப்பிரமணியபுரம், எம்.கே.புரம், ஜீவாநகர், ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சங்கரசுப்பிரமணியன். இவரது மனைவி ஸ்ரீமதி (வயது 45). இவர் இன்று காலை குப்பை கொட்டுவதற்காக வீட்டில் இருந்து தெருமுனைக்கு நடந்து வந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென்று ஸ்ரீமதியை வழிமறித்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள், ஸ்ரீமதி கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியிலேயே கொள்ளையர்கள் இன்று காலை துணிகரமாக நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோலையழகுபுரம், சுப்பிரமணியபுரம், எம்.கே.புரம், ஜீவாநகர், ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.






