search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழவந்தான் அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
    X

    சோழவந்தான் அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

    சோழவந்தான் அருகே வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழவந்தான்:

    சோழவந்தான் அருகே உள்ள ஊத்துக்குளி கிராமத்தைச்சேர்ந்தவர் தமிழன் (வயது35), லாரி டிரைவர். இவரது மனைவி நந்தினி (24).

    நேற்று இரவு இவர்கள் வழக்கம்போல் வீட்டில் தூங்கினர். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்ததாக தெரிகிறது

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்மநபர் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் நைசாக புகுந்தார். அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நந்தினி கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பினான்.

    காலையில் எழுந்த நந்தினி நகை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து வீட்டுக்கு புகுந்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×