search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "puducherry robbery"

    லாஸ்பேட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து சென்று விட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை அசோக் நகர் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் மகிமைதாஸ். ஓய்வு பெற்ற ரோடியர் மில் தொழிலாளி. இவரது மனைவி ரத்தினம் (வயது 65). இவர் முத்தியால் பேட்டை பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    ரத்தினம் தனது கணவருடன் தாகூர் நகரில் உள்ள தேவாலயத்துக்கு அவ்வப்போது சென்று பிரார்த்தனை செய்து விட்டு வருவது வழக்கம். ஆனால், நேற்று மகிமைதாஸ் வெளியே சென்று விட்டதால் ரத்தினம் மட்டும் தேவாலயத்துக்கு சென்றார். பின்னர் பிரார்த்தனை செய்து விட்டு மாலையில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அசோக்நகர் பாரதியார் வீதியில் வந்து கொண்டு இருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த ஒரு வாலிபர் திடீரென ரத்தினம் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் செயினை பறித்தான். ரத்தினம் திருடன்... திருடன் என்று அலறுவதற்குள் செயினுடன் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். பறிபோன தங்க செயினின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

    செயினை பறிகொடுத்த ரத்தினம் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் பெண்ணிடம் மர்மநபர் துணிகரமாக நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுவை அருகே வீடு புகுந்து நகை திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரம்பை கிராமத்தை சேர்ந்த செந்தில் குமார். இவரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5 பவுன் நகை திருட்டு போனது. இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற 2 பேர் பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து செந்தில் குமார் மனைவி அன்புக்கரசி (35) கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதே போல் கோட்டக் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் தொடர் திருட்டு போனதால் தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இன்று காலை சப்- இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது பெரம்பை கிராமம் அருகே உள்ள முட்புதரில் 2 பேர் மறைந்து இருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.

    பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாகூரை அடுத்த இருளன் சந்தை கிராமத்தை சேர்ந்த சுசி என்கிற சூசைராஜ் (21) என்பது தெரிய வந்தது. தப்பி ஓடியவர் இவரது கூட்டாளி முதலியார்பேட்டையை சேர்ந்த அருள் என்பது தெரிய வந்தது. சூசைராஜிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் இருவரும் பெரம்பை அன்புக்கரசி வீட்டில் திருடியவர்கள் என்பதும், இவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்கு மற்றும் பல்வேறு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.

    சூசைராஜை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 4 பவுன் நகையை பறிமுதல் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய அருளை போலீசரர் தேடி வருகிறார்கள்.

    ×