search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுசீந்திரம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு
    X

    சுசீந்திரம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

    சுசீந்திரம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் செயினை மர்மநபர் பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    சுசீந்திரம் பள்ளம் லூர்து காலனி பகுதியை சேர்ந்தவர் மான்சிங். இவரது மனைவி கவிதா (வயது 38).

    இவர் நேற்று மாலையில் வீட்டில் மின்சாரம் தடைபட்டதால் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் முன்பக்கம் காற்றுக்காக படுத்திருந்தனர். அப்போது அவர்கள் அயர்ந்து தூங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் அந்த வழியாக வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மான்சிங்கின் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த கவிதாவின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் செயினை பறித்தார். இதில் தூங்கிக்கொண்டிருந்த கவிதா கண்விழித்து செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதில் கொள்ளையனின் கையில் 5 பவுன் செயின் சிக்கியது. கவிதாவின் கையில் ½ பவுன் டாலர் மட்டும் இருந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் தூங்கிக் கொண்டிருந்த மான்சிங் திடுக்கிட்டு எழுந்தார். அதறகுள் அந்த வாலிபர் 5 பவுன் தங்க சங்கிலியுடன் ஓட்டம் பிடித்தார். அவரை தொடர்ந்து விரட்டிச் சென்றனர். அதற்குள் அந்த வாலிபர் ஓடி மறைந்தார்.

    இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சலிம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக யாரேனும் சுற்றித் திரிகிறார்களா? என விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கொள்ளையன் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×