என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 13 பவுன் நகை அபேஸ்
Byமாலை மலர்29 May 2018 11:32 AM GMT (Updated: 29 May 2018 11:32 AM GMT)
சேலத்தில் பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 13 பவுன் நகை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம்:
சேலம், ரெட்டியூரை சேர்ந்தவர் சாந்தி (வயது40). நேற்று மாலை இவர் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது மர்ம ஆசாமி ஒருவன் அவரது வீட்டிற்கு வந்தான். சாந்தியிடம் அவன் உங்கள் வீட்டில் பரிகாரம் செய்ய வேண்டும் என்றும், வீட்டில் பிரச்சனை இருப்பதாகவும் சொல்லி இதற்காக தனியாக பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறினான்.
மேலும் பூஜை செய்தால் தான் உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும் என்றும் கூறினான். பூஜை செய்வதற்கு வீட்டில் உள்ள நகைகள் வேண்டும் என்று கேட்டுள்ளான். இதை உண்மை என்று நம்பிய சாந்தி தான் கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் நகையை கழற்றி அந்த மர்ம ஆசாமியிடம் கொடுத்தார். பின்னர் அந்த ஆசாமி நகையை ஒரு பையில் வைத்து பூஜை செய்வது போல் நடித்து, பின்னர் நகை இல்லாத வேறொரு பையை சாந்தி கையில் கொடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டான்.
பையை திறந்து பார்த்த சாந்தி அதில் நகை இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சாந்தி அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் நகையை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். #Tamilnews
சேலம், ரெட்டியூரை சேர்ந்தவர் சாந்தி (வயது40). நேற்று மாலை இவர் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது மர்ம ஆசாமி ஒருவன் அவரது வீட்டிற்கு வந்தான். சாந்தியிடம் அவன் உங்கள் வீட்டில் பரிகாரம் செய்ய வேண்டும் என்றும், வீட்டில் பிரச்சனை இருப்பதாகவும் சொல்லி இதற்காக தனியாக பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறினான்.
மேலும் பூஜை செய்தால் தான் உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும் என்றும் கூறினான். பூஜை செய்வதற்கு வீட்டில் உள்ள நகைகள் வேண்டும் என்று கேட்டுள்ளான். இதை உண்மை என்று நம்பிய சாந்தி தான் கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் நகையை கழற்றி அந்த மர்ம ஆசாமியிடம் கொடுத்தார். பின்னர் அந்த ஆசாமி நகையை ஒரு பையில் வைத்து பூஜை செய்வது போல் நடித்து, பின்னர் நகை இல்லாத வேறொரு பையை சாந்தி கையில் கொடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டான்.
பையை திறந்து பார்த்த சாந்தி அதில் நகை இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சாந்தி அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் நகையை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X