search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் நகை திருட்டு
    X

    தேனி அருகே தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் நகை திருட்டு

    தேனி அருகே தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.

    தேனி:

    தேனி அருகே வயல்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சுருளிமணி (வயது 53). இவர் சம்பவத்தன்று வீட்டின் மேல் மாடியில் தூங்கச் சென்றார். அப்போது தனது 5½ பவுன் செயினை ஒரு பையில் வைத்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்கி விட்டார்.

    அதிகாலையில் எழுந்து பார்த்தபோது செயினை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் சுருளிமணி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் செயினை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×